Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பொய்த்துப்போன பருவமழை! மின் உற்பத்திக்கு நிலக்கரி பயன்பாடு 6 ஆண்டுகளில் இல்லாத அளவு அதிகரிப்பு

Subscribe to Oneindia Tamil

டெல்லி: பருவமழை குறைவு காரணமாக வழக்கத்திற்கு மாறாக இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் தேசிய அளவில் மின் தேவை அதிகரித்திருக்கிறது. எனவே, இதனை சமாளிக்க நிலக்கரி மூலம் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. கடந்த 6 ஆண்டுகளுடன் ஒப்பிடும்போதும் இந்த ஆகஸ்ட் மாதம்தான் அதிக அளவு நிலக்கரியை நாம் மின்சாரம் தயாரிக்க பயன்படுத்தியுள்ளோம்.

வழக்கமாக தென்னிந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் தென்மேற்கு பருவமழையானது மே மாதம் இறுதியிலும், ஜூன் மாதம் 1ம் தேதியும் தொடங்கும். ஆனால் இந்த முறை எதிர்பார்த்ததைவிட ஒரு வாரம் தாமதமாகவே தொடங்கியது. இந்த மழையால் முதலில் பயன்பெறும் மாநிலம் கேரளம்தான். அதன் பின்னர்தான் தமிழ்நாடு, கர்நாடா, கோவா, மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்கள் பயன்பெறும். அதனால்தான் எப்போதும் கேரளா செழிப்பாகவும், பசுமையாகவும் இருக்கிறது. ஏராளமான சுற்றுலாப்பயணிகளையும் ஈர்க்கிறது.

The rate of use of coal for power generation increased this August compared to the last 6 years

ஆனால் இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை குறைந்ததால் பல இடங்களில் வெயில் வாட்டி எடுக்க தொடங்கியுள்ளது. குறிப்பாக ஆகஸ்ட் மாதத்தில் 90 சதவிகிதமும், அதற்கு முன்னர் ஜூன் மாதத்திலும் பருவமழை 65 சதவிகிதம் என மொத்தமாக இந்த முறை பருவமழை 45 சதவிகிதம் குறைந்திருக்கிறது. மாவட்ட வாரியாக இடுக்கியில் இயல்பை விட 60 சதவீதத்திற்கும் குறைவாகவும். வயநாட்டில் 55 சதவீதமும், கோழிக்கோடு மாவட்டத்தில் 53 சதவீதமும் மழை குறைந்துள்ளது.

இதன் காரணமாக மாநிலம் முழுவதும் பரவலாக இயல்பைவிட வெப்பம் அதிகரித்திருக்கிறது. கேரளா ஜில்லென இருக்கும் என நம்பி வந்த சுற்றுலா பயணிகளை இந்த வெயில் வாட்டி எடுக்க தொடங்கியுள்ளது. இந்நிலையில் வானிலை ஆய்வு மையம் புதிய எச்சரிக்கையை விடுத்திருக்கிறது. அதாவது, "மழை குறைவு காரணமாக வறட்சி ஏற்பட வாய்ப்பிருக்கிறது. திருவனந்தபுரம், கொல்லம், ஆலப்புழா, பாலக்காடு உள்பட ஒன்பது மாவட்டங்களில் இன்று வெப்பநிலை மூன்று முதல் ஐந்து டிகிரி வரை அதிகரிக்கும்" என்று கூறியுள்ளது.

பருவமழை குறைந்ததன் காரணமாக அணைகளுக்கான நீர் வரத்தும் குறைந்திருக்கிறது. கேரள மின்சார வாரியத்திற்குச் சொந்தமான அணைகளில், 37 சதவீதம் மட்டுமே தண்ணீர் உள்ளது. எனவே மின்சார உற்பத்தியும் பாதிக்கப்பட்டுள்ளது. இது மாநிலம் முழுவதும் பரவலாக மின்வெட்டாக எதிரொலித்திருக்கிறது. கடுமையான வெயில் மற்றும் மின்வெட்டு காரணமாக கேரள மக்கள் செய்வது அறியாது திகைத்து வருகின்றனர்.

அடுத்த இரண்டு மாதங்களுக்கும் கேரளாவில் பருவமழை குறைவாகதான் இருக்கும் என்றும் வானிலை ஆய்வு மையம் எச்சரித்திருக்கிறது. அதேபோல கர்நாடகாவிலும் பருவமழை பொய்த்துப்போனதால் கிருஷ்ணராஜ சாகர், கபினி உள்ளிட்ட அணைகளுக்கு நீர் வரத்து குறைந்திருக்கிறது. எனவே கடந்த 122 ஆண்டுகளுடன் ஒப்பிடுகையில் 2023ம் ஆண்டின் ஆகஸ்ட் மாதம் இந்தியாவின் மிகவும் வறட்சியான மாதமாக அறிவிக்கப்பட்டது. எனவே இந்த மாதத்தில் மின் தேவையும் அதிகரித்துள்ளது.

கடந்த ஆண்டு நீர் மூலம் 18.1% மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டது. ஆனால் இந்த ஆண்டு பருவமழை குறைவு காரணமாக இந்த மின் உற்பத்தி 14.8%ஆக குறைந்திருக்கிறது. எனவே மின்சாரம் தயாரிக்க பயன்படுத்தப்படும் நிலக்கரியின் அளவு 66.7%ஆக அதிகரித்துள்ளது. கடந்த 6 ஆண்டுகளுடன் ஒப்பிடுகையில் இந்த ஆண்டு அதிக அளவு நிலக்கரி பயன்படுத்தப்பட்டுள்ளது என்று ராய்ட்டர்ஸ் கூறியுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+