பாகிஸ்தான் புதுசா இழுக்கும் வம்பு.. சர் கிரீக் எல்லைப் பிரச்சினை என்றால் என்ன?
Subscribe to Oneindia Tamil
டெல்லி: இந்தியா - பாகிஸ்தான் இடையே பல தசாப்தங்களாக தீர்க்கப்படாமல் உள்ள சர் கிரீக் எல்லைப் பிரச்சினை மீண்டும் கவனம் பெறுகிறது. குஜராத்தின் கட்ச் பகுதியையும் பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தையும் பிரிக்கும், 100 கி.மீ.க்கும் குறைவான நீளமுள்ள இந்த சதுப்பு நிலக் கழிமுக நீர்ப்பாதை, தற்போது இரு நாடுகளுக்குமான பெரிய அரசியல் மற்றும் பாதுகாப்பு சிக்கலாக மாறியுள்ளது.

இந்தியா - பாகிஸ்தான் கோரிக்கைகள்
- இந்தியா: கிரீக்கின் நடுப்பகுதிதான் எல்லை என வலியுறுத்துகிறது. 1925 வரைபடத்தையும், 'தால்வெக் கொள்கை' (Thalweg Principle) யையும் சான்றாக காட்டுகிறது.
- பாகிஸ்தான்: கிழக்குக் கரையே எல்லை என வாதிடுகிறது. 1914 ஒப்பந்தத்தை சுட்டிக்காட்டி, இந்த நீர்வழி navigable (பயணிக்கக்கூடியது) அல்ல என மறுக்கிறது.
ஏன் முக்கியம்?
- ராணுவம்: சர் கிரீக் இந்தியாவுக்குள் இருந்தால், பாகிஸ்தானின் முக்கிய துறைமுகமான கராச்சிக்கு நேரடி கடல் வழி இந்தியக் கட்டுப்பாட்டில் வரும். இதனால் ராணுவ ரீதியாகப் பெரும் ஆதிக்கம் கிடைக்கும்.
- பொருளாதாரம்: ஆசியாவின் மிகப்பெரிய மீன்பிடித் தளங்களில் இதுவும் ஒன்று. மேலும், கடலுக்கடியில் எண்ணெய் மற்றும் எரிவாயு வளம் உள்ளதாக நிபுணர்கள் கணித்துள்ளனர்.
- பாதுகாப்பு: கடந்த காலங்களில் பயங்கரவாதிகள் இந்தப் பகுதியை ஊடுருவலுக்குப் பயன்படுத்தியுள்ளனர். 2019 இல் இந்திய உளவுத்துறை எச்சரிக்கையின்போது இங்கு கைவிடப்பட்ட படகுகள் கண்டுபிடிக்கப்பட்டன.
ராஜ்நாத் சிங் எச்சரிக்கை
சமீபத்தில் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், பாகிஸ்தான் சர் கிரீக்கில் சட்டவிரோத ஆக்கிரமிப்பு முயற்சி மேற்கொண்டால், அது "வரலாற்றையும் புவியியலையும் மாற்றும் அளவுக்கு கடுமையான பதிலடி" சந்திக்கும் என்று எச்சரித்தார்.
இதன் மூலம், பல ஆண்டுகளாகத் தீர்வு காணப்படாத இந்த எல்லைப் பிரச்சினை, மீண்டும் இந்தியா - பாகிஸ்தான் உறவுகளில் முக்கியமான பிரச்சினையாக மாறியுள்ளது.












Click it and Unblock the Notifications