இந்தியாவில் கொரோனா பாதிப்பு 1 கோடியே 5 ஆயிரமாக உயர்ந்தது.. ஒன்றரை லட்சத்தை நெருங்கும் பலி எண்ணிக்கை
இந்திய அளவில் ஒரு கோடியை தாண்டியது தொற்று எண்ணிக்கை
டெல்லி: இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஒரு கோடியை தாண்டிவிட்டது.. இன்றைய நாளில் தொற்று பாதிப்பு 1 கோடியே 5 ஆயிரமாக உயர்ந்துள்ளது, பெரும் கலக்கத்தை தந்து வருகிறது.. அதேசமயம், தொற்று காரணமாக உயிரிழந்தோர் எண்ணிக்கையும் 1 லட்சத்து 45 ஆயிரமாக உயர்ந்துள்ளது. 95.50 லட்சம் பேர் குணமடைந்துள்ளனர்.
Recommended Video

பல்வேறு நாடுகளை கொரோனா தொற்று இன்னமும் வாட்டி வரும் நிலையில், இந்தியாவில் கொரோனாவின் வீரியம் தணிந்து வருகிறது... அதனால், இங்கு புதிய பாதிப்புகளும் கணிசமாக குறைந்து உள்ளன.

தினமும் புதிதாக பாதிக்கப்படுபவர்களை விட குணமடைந்து டிஸ்சார்ஜ் ஆகி வீடு திரும்புவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதனால் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெறும் மொத்த நோயாளிகளின் எண்ணிக்கையும் சரிந்து வருகிறது.
இந்நிலையில், இன்று காலை மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்ட தகவலின்படி இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை ஒரு கோடியை கடந்துள்ளது. தற்போதைய நிலவரப்படி இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில், 27 ஆயிரம் பேருக்கு தொற்று உறுதியாகி உள்ளது.. அந்த வகையில், இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1 கோடியே 5 ஆயிரமாக உயர்ந்துள்ளது. தொற்று பாதிப்பு காரணமாக, இதுவரை 95 லட்சத்து 50 ஆயிரம் பேர் குணமடைந்துள்ளனர்.
மேலும் நாடு முழுவதும் 3 லட்சத்து 10 ஆயிரம் பேர் தொடர் சிகிச்சையில் உள்ளனர். இவர்களில், 1 லட்சத்து 6 ஆயிரத்து 920 பேரின் நிலைமை மிகவும் கவலைக்கிடமாக உள்ளது. சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 12வது நாளாக 4 லட்சத்திற்கும் குறைவாக உள்ளது.
நேற்று மட்டும் நாடு முழுவதும் 342 பேர் உயிரிழந்ததைத் தொடர்ந்து இதுவரை உயிரிழந்தோர் எண்ணிக்கை 1 லட்சத்து 80 ஆயிரத்து 116 ஆக அதிகரித்துள்ளது. மொத்த உயிரிழப்பு 1.45 சதவீதமாக நீடிக்கிறது... ஆனால், குணமடையும் விகிதம் 95.46 சதவீதமாக உயர்ந்துள்ளது. உலக அளவில் பெருந்தொற்று பாதிப்பில் இந்தியா தொடர்ந்து 2ம் இடத்தில் இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications