பிப்ரவரி 1-ம் தேதி பட்ஜெட் தாக்கல்! ஜன.31-ம் தேதி நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்குகிறது!
டெல்லி: 2022-2023-ம் ஆண்டுக்கான மத்திய நிதி நிலை அறிக்கை பிப்ரவரி 1-ம் தேதி நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படுகிறது.
ஜனவரி 31-ம் தேதி தொடங்கும் நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் இரண்டு அமர்வுகளாக ஏப்ரல் 8-ம் தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அந்த வகையில் நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் முதல் அமர்வானது ஜனவரி 31-ம் தேதி தொடங்கி பிப்ரவரி 11-ம் தேதியுடன் நிறைவடைகிறது. இதேபோல் இரண்டாவது அமர்வு கூட்டத்தொடர் மார்ச் 14-ம் தேதி தொடங்கி ஏப்ரல் 8-ம் தேதி வரை நடைபெறுகிறது.
இதனிடையே நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் முதல் நாளான ஜனவரி 31-ம் தேதி, பொருளாதார ஆய்வறிக்கை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படவுள்ளது.
மத்திய பட்ஜெட்டில் என்ன மாதிரியான அறிவிப்புகள், சலுகைகள் இடம்பெறக் கூடும் என்ற எதிர்பார்ப்பு இப்போதே எழுந்திருக்கிறது. 5 மாநில சட்டமன்றத் தேர்தல் வருவதால் நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் இரண்டு அமர்வுகளாக பிரிக்கப்பட்டிருக்கிறது.

தேர்தல் பரப்புரை உள்ளிட்ட பல்வேறு பணிகளில் பிரதமர் தொடங்கி மத்திய அமைச்சர்கள் வரை ஈடுபடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் அதற்கு தகுந்தபடி பட்ஜெட் கூட்டத்தொடர் இடைவெளி விட்டு நடத்தப்படுகிறது.
நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடர் அண்மையில் தான் நிறைவு பெற்றது. அதில் எதிர்க்கட்சிகளின் கடும் அமளிகளுக்கு இடையே 9 மசோதாக்களை மத்திய அரசு நிறைவேற்றியது. பட்ஜெட் கூட்டத்தொடரில் எதிர்க்கட்சிகளின் அமளிகளை சமாளிக்கும் வகையில் அதற்கான முன் தயாரிப்புப் பணிகளில் மத்திய அமைச்சர்கள் ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
தமிழகத்திற்கு கூடுதல் ரயில்கள், சுகாதாரத்துறை மற்றும் விவசாய மேம்பாட்டுக்கு கூடுதல் நிதி உள்ளிட்டவைகள் மத்திய பட்ஜெட்டில் இடம்பெறக் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
-
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
தங்க வேட்டை.. உலக நாடுகளின் 'பக்கா' பிளான்.. மத்திய வங்கிகள் முண்டியடிப்பதன் பின்னணி என்ன? -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000!












Click it and Unblock the Notifications