வாய் பிளக்க வைத்த சிஎஸ்கே.. மொத்த சொத்து மதிப்பு இத்தனை கோடியா.. ஐபிஎல் சொத்துக்கள் இவ்வளவா?
டெல்லி: ஐபிஎல்லின் நிகர மதிப்பு 1.3 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் மதிப்பு மட்டும் 1760 கோடியாக உள்ளது. இதுபற்றி பார்ப்போம்.
இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தால் 2007ம் ஆண்டு தொடங்கப்பட்டது ஐபிஎல் அமைப்பு 20 ஓவர்கள் கொண்ட கிரிக்கெட் போட்டிகளை நடத்தி வருகிறது. 10 இந்திய நகரங்களைச் சேர்ந்த அணிகள் பிரான்சிஸ் முறையில் இதில் கலந்து கொள்கின்றன.

அணியில் ஒவ்வொரு வீரர்களும் பெரும் தொகை கொடுத்து இந்த போட்டிக்கு தேர்வு செய்யப்படுகின்றனர். ஐபிஎல் கிரிக்கெட்டின் மொத்த மதிப்பு 2020ம் ஆண்டில் ரூ.51062 கோடியாக கணக்கிடப்பட்டது. 2022 இல் இதன் மதிப்பு ரூ.90038 கோடியாக உயர்ந்தது.
தற்போது (2023) இந்தியாவில் நடத்தப்படும் ஐபிஎல் கிரிக்கெட்டின் மொத்த மதிப்பு 1,3 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளதாக கணிக்கப்பட்டுள்ளது. ஹூலைஹன் லோக்கே முதலீட்டு வங்கி கணித்துள்ளது. ஐபிஎல் பிராண்ட் மதிப்பு 26000 கோடியாக அதிகரித்துள்ளது.
இதில் ஐந்தாம் முறையாக ஐபிஎல் போட்டியை வென்றுள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் மொத்த மதிப்பு 1760 கோடியாக அதிகரித்துள்ளது. இரண்டாவது இடத்தில் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியின் மொத்த சொத்து மதிப்பு ரூ.1606 கோடியாக மதிப்பிடப்பட்டுள்ளது.
மூன்றாம் இடத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியின் மொத்த மதிப்பு ரூ.1564 கோடியாக மதிப்பிடப்பட்டுள்ளது. 4வது இடத்தில் உள்ள கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் மொத்த மதிப்பு ரூ.1490 கோடியாக மதிப்பிடப்பட்டுள்ளது.
2023 முதல் 2027 வரை ரூ.52710 கோடிக்கு ஊடக உரிமைகள் வயாகாம்ஸ் ஸ்டார் போர்ட்ஸ் குழுமத்திற்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது.
தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் சொத்து மதிப்பு தான் மற்ற எல்லா அணியைவிட அதிகமாக உள்ளது. இந்தியன் பிரிமியர் லீக் தொடங்கியபோது வாங்கப்பட்ட 8 அணிகளில் சென்னை அணியும் ஒன்று தான் இந்த அணி. இந்திய சிமெண்ட்ஸ் நிறுவனத்தின் சீனிவாசன் தான் இதன் உரிமையாளர் ஆவார். மேட்ச் பிக்ஸிங் குற்றச்சாட்டில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 2016 மற்றும் 2017 இல் தகுதி நீக்கம் செய்யப்பட்டிருந்தது.












Click it and Unblock the Notifications