என்ன? ஒரே வருடத்தில் இத்தனை நிதி மோசடிகளா? ஆர்பிஐ வெளியிட்ட அதிர்ச்சி அறிக்கை!
2017-2018 நிதி ஆண்டில் வங்கிகள் பெரிய அளவில் நிதி மோசடியை சந்தித்து இழப்பிற்கு உள்ளாகி உள்ளதாக ஆர்பிஐ அறிக்கை வெளியிட்டு உள்ளது.
டெல்லி: 2017-2018 நிதி ஆண்டில் வங்கிகள் பெரிய அளவில் நிதி மோசடியை சந்தித்து இழப்பிற்கு உள்ளாகி உள்ளதாக ஆர்பிஐ அறிக்கை வெளியிட்டு உள்ளது.
கடந்த வெள்ளிக்கிழமை ரிசர்வ் வங்கி முக்கியமான அறிக்கை ஒன்றை வெளியிட்டது. சென்ற 2017-2018 நிதியாண்டில் வங்கிகள் எந்த அளவிற்கு மோசடி செய்து ஏமாற்றப்பட்டது என்று ரிசர்வ் வங்கி அறிக்கை வெளியிட்டுள்ளது.
வங்கிகளில் கடன் வாங்கியவர்கள் திருப்பிக் கொடுக்காமல் ஏமாற்றியது, வெளிநாட்டு நிதி மூலம் ஏமாற்றியது கடந்த நிதி ஆண்டில் அதிக அளவில் வங்கிகள் ஏமாற்றப்பட்டுள்ளது.

எத்தனை நடந்தது
அதன்படி 2017-2018 வருடத்தில் மட்டும் மொத்தம் 5,917 நிதி மோசடிகள் நடந்து இருக்கிறது. இதில் 2526 மோசடிகள் நேரடியாக கடன் பெற்று செய்யப்பட்டுள்ளது. 2059 மோசடிகள் இணையம் மூலம் செய்யப்பட்டார் சைபர் மோசடிகள் ஆகும்.

மிக மோசம்
ஆர்பிஐ அறிக்கையின்படி, மொத்தம் 41,167 கோடி ரூபாய் மோசடி செய்யப்பட்டு இருக்கிறது. இது கடந்த நிதி ஆண்டை விட 2 மடங்கு அதிகம் ஆகும். சென்ற நிதி ஆண்டில் மொத்தம் 23,933 கோடி ரூபாய் மோசடி செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

எப்படி எல்லாம்
இதில் அதிகமான மோசடி லோன் பெற்று திரும்ப கொடுக்காதது ஆகும். சில மோசடிகள் இணையம் மூலம் செய்யப்பட்ட சைபர் கிரைம் மோசடி ஆகும். வெளிநாட்டு நிதி பரிமாற்றம் மூலமாகவும் பல கோடிகளுக்கு மோசடி செய்யப்பட்டுள்ளது. பெரிய நிறுவனங்கள்தான் அதிக அளவில் மோசடி செய்து இருக்கிறது.

எது முக்கியம்
இந்த அறிக்கையில் பெரிய மோசடிகளையும் ஆர்பிஐ பட்டியலிட்டு இருக்கிறது. 14000 கோடிக்கு நடந்த நீரவ் மோடியின் பஞ்சாப் நேஷனல் வங்கி முறைகேடு தொடங்கி பல முறைகேடுகள் வங்கிகளை பெரிய இழப்பிற்கு உள்ளாக்கி உள்ளது. இது இந்திய பொருளாதாரத்தை பெரிய அளவில் பாதிக்கும் என்று ஆர்பிஐ எச்சரிக்கை விடுத்துள்ளது.
-
மகளிர் உரிமைத்தொகை ரூ.3,000.. கல்வி கடன் தள்ளுபடி.. ராமதாஸ் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகள்! -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
தெற்கு ரயில்வேயில் 827 கி. மீ தூரத்திற்கு நடந்த நல்ல விஷயம்.. பயணிகள், பொதுமக்களுக்கு இனி நிம்மதி -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை












Click it and Unblock the Notifications