என்ன? ஒரே வருடத்தில் இத்தனை நிதி மோசடிகளா? ஆர்பிஐ வெளியிட்ட அதிர்ச்சி அறிக்கை!
2017-2018 நிதி ஆண்டில் வங்கிகள் பெரிய அளவில் நிதி மோசடியை சந்தித்து இழப்பிற்கு உள்ளாகி உள்ளதாக ஆர்பிஐ அறிக்கை வெளியிட்டு உள்ளது.
டெல்லி: 2017-2018 நிதி ஆண்டில் வங்கிகள் பெரிய அளவில் நிதி மோசடியை சந்தித்து இழப்பிற்கு உள்ளாகி உள்ளதாக ஆர்பிஐ அறிக்கை வெளியிட்டு உள்ளது.
கடந்த வெள்ளிக்கிழமை ரிசர்வ் வங்கி முக்கியமான அறிக்கை ஒன்றை வெளியிட்டது. சென்ற 2017-2018 நிதியாண்டில் வங்கிகள் எந்த அளவிற்கு மோசடி செய்து ஏமாற்றப்பட்டது என்று ரிசர்வ் வங்கி அறிக்கை வெளியிட்டுள்ளது.
வங்கிகளில் கடன் வாங்கியவர்கள் திருப்பிக் கொடுக்காமல் ஏமாற்றியது, வெளிநாட்டு நிதி மூலம் ஏமாற்றியது கடந்த நிதி ஆண்டில் அதிக அளவில் வங்கிகள் ஏமாற்றப்பட்டுள்ளது.

எத்தனை நடந்தது
அதன்படி 2017-2018 வருடத்தில் மட்டும் மொத்தம் 5,917 நிதி மோசடிகள் நடந்து இருக்கிறது. இதில் 2526 மோசடிகள் நேரடியாக கடன் பெற்று செய்யப்பட்டுள்ளது. 2059 மோசடிகள் இணையம் மூலம் செய்யப்பட்டார் சைபர் மோசடிகள் ஆகும்.

மிக மோசம்
ஆர்பிஐ அறிக்கையின்படி, மொத்தம் 41,167 கோடி ரூபாய் மோசடி செய்யப்பட்டு இருக்கிறது. இது கடந்த நிதி ஆண்டை விட 2 மடங்கு அதிகம் ஆகும். சென்ற நிதி ஆண்டில் மொத்தம் 23,933 கோடி ரூபாய் மோசடி செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

எப்படி எல்லாம்
இதில் அதிகமான மோசடி லோன் பெற்று திரும்ப கொடுக்காதது ஆகும். சில மோசடிகள் இணையம் மூலம் செய்யப்பட்ட சைபர் கிரைம் மோசடி ஆகும். வெளிநாட்டு நிதி பரிமாற்றம் மூலமாகவும் பல கோடிகளுக்கு மோசடி செய்யப்பட்டுள்ளது. பெரிய நிறுவனங்கள்தான் அதிக அளவில் மோசடி செய்து இருக்கிறது.

எது முக்கியம்
இந்த அறிக்கையில் பெரிய மோசடிகளையும் ஆர்பிஐ பட்டியலிட்டு இருக்கிறது. 14000 கோடிக்கு நடந்த நீரவ் மோடியின் பஞ்சாப் நேஷனல் வங்கி முறைகேடு தொடங்கி பல முறைகேடுகள் வங்கிகளை பெரிய இழப்பிற்கு உள்ளாக்கி உள்ளது. இது இந்திய பொருளாதாரத்தை பெரிய அளவில் பாதிக்கும் என்று ஆர்பிஐ எச்சரிக்கை விடுத்துள்ளது.
-
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மனோஜ் மனைவி தனியாக வாழ காரணம் இதுதான்.. "இதை” நம்பி தான் இருக்கிறாங்க! பாரதிராஜா தம்பி உருக்கம் -
டிடிவி பராக்.! இரட்டை இலை என்னோடது.. அமித் ஷாவிடம் டீல் பேசிய அண்ணன்! எடப்பாடிக்கு எகிறும் பிரஷர்! -
கிளம்பு, கிளம்பு.. போர் முடிஞ்சிப்போச்சு.. டிரம்ப் அறிவித்த 'அந்த' ஒரு விஷயம்.. ஈரான் செம ஹேப்பி! -
“அதிமுக என்ற கட்சியே இருக்காது.. இன்னும் பல MLAக்கள் தவெகவுக்கு வருவார்கள்” - அமைச்சர் செங்கோட்டையன் -
பாரதிராஜா வேண்டுமென்றே இறந்தார்! 6 மாதத்தில் நடந்தது என்ன? சிகிச்சை அளித்த மருத்துவர் வேதனை -
பெரிய தலக்கட்டு..திமுகவுக்கு தாவும் மூவரணி! வேதனையில் எடப்பாடி! சைக்கிள் கேப்பில் புகுந்த அறிவாலயம்!












Click it and Unblock the Notifications