நாட்டையே உலுக்கிய இருவேறு சம்பவங்ளான பில்லா ரங்கா, நிர்பயா.. இரு வழக்குகளின் ஒற்றுமை!
டெல்லி: பில்லா ரங்காவின் கீதா- சஞ்சய் வழக்கும், நிர்பயா குற்றவாளிகளின் வழக்கும் கிட்டத்தட்ட ஒரே மாதிரியானவை.
Recommended Video
2012-ஆம் ஆண்டு ஓடும் பேருந்தில் மருத்துவ மாணவி நிர்பயா தனது ஆண் நண்பருடன் பயணம் செய்து கொண்டிருந்தார். அப்போது அந்த ஆண் நண்பரை அடித்து தாக்கிவிட்டு நிர்பயாவை 6 பேர் வேட்டையாடினர்.
மிகக் கொடூரமான முறையில் பலாத்காரம் செய்யப்பட்ட அந்த பெண்ணும் தாக்கப்பட்ட ஆண் நண்பரும் சாலையில் வீசப்பட்டனர். இதையடுத்து இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியான பேருந்து ஓட்டுநர் ராம் சிங் கைது செய்யப்பட்டார். பின்னர் முகேஷ் சிங், வினய் சர்மா, பவன் குப்தா, பேருந்து உதவியாளர் அக்ஷய் குமார் , 17 வயது சிறுவன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

17 வயது சிறுவன்
இதையடுத்து சிங்கப்பூர் மருத்துவமனையில் மேல் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிர்பயா சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். திகார் சிறையில் அடைக்கப்பட்ட ராம்சிங் தற்கொலை செய்து கொண்டார். 17 வயது சிறுவன் சீர்திருத்தப் பள்ளியில் அடைக்கப்பட்டார்.

பில்லா ரங்கா
இதையடுத்து மற்ற 4 பேருக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது. இந்த தண்டனை பலமுறை ஒத்தி வைக்கப்பட்டு பின்னர் இன்றைய தினம் நிறைவேற்றப்பட்டுவிட்டது. இதன் மூலம் நீதி நிலைநாட்டப்பட்டது. நிர்பயாவின் ஆன்மாவும் சாந்தியடையும். இந்த கொலை வழக்கை ஒத்தது கீதா- சஞ்சய் சோப்ரா கொலை வழக்கு எனப்படும் பில்லா ரங்கா வழக்கு.

கடத்தல் நாடகம்
வடமாநிலங்களையே கதி கலங்கிய வைத்த பில்லா, ரங்கா. டெல்லியை சேர்ந்தவர் கீதா மற்றும் சஞ்சய் சோப்ரா. இருவரும் அக்காள்- தம்பியாவார்கள். கடந்த 1978 ஆம் ஆண்டு இவர்கள் இருவரும் ஒரு விழாவுக்கு செல்வதற்காக வழியில் காத்திருந்த போது பில்லாவும் ரங்காவும் லிப்ட் கொடுப்பதாக காரி ஏற்றிக் கொண்டனர். பின்னர் அவர்களை வைத்து கடத்தல் நாடகம் ஆடி பணம் சம்பாதிக்க திட்டமிட்டனர்.

வன்கொடுமை
ஆனால் அந்த குழந்தைகளின் தந்தை ஒரு கடற்படை அதிகாரி என தெரிந்தவுடன் அவர்கள் இருவரும் கடுமையாக தாக்கப்பட்டனர். பின்னர் தம்பியை வண்டியிலிருந்து கீழே தள்ளிவிட்டு அந்த பெண்ணை இருவரும் வன்கொடுமை செய்து கொன்றனர். இதுதொடர்பாக போலீஸார் வழக்கு பதிவு செய்யப்பட்டு அவர்களை தேடி வந்தனர்.

திகார் சிறையில் தூக்கு
இவர்களும் டெல்லி, ஆக்ரா என தப்பியோடிக் கொண்டே இருந்தனர். ஒரு நாள் எங்கோ ரயிலில் தப்பி செல்வதற்காக ராணுவ வீரர்கள் இருந்த கோச்சில் ஏறினர். பின்னர் அவர்களிடம் நடந்த விசாரணையில் முன்னுக்கு பின் முரணாக கூறியதை அடுத்து அவர்கள் இருவரும் போலீஸாரிடம் ஒப்படைக்கப்பட்டனர். இந்த குற்றத்திற்காக கைது செய்யப்பட்ட பில்லாவும் ரங்காவும் 1982-ஆம் ஆண்டு திகார் சிறையில் தூக்கிலிடப்பட்டனர்.

இருவரும் ஒரே இடத்தில் தூக்கு
தற்போது பில்லா ரங்கா, நிர்பயா வழக்குகளில் ஒற்றுமைகள் உள்ளன. இரு வழக்குகளிலும் பாதிக்கப்பட்டவர்கள் ஓடும் வாகனத்தில் கடுமையாக தாக்கப்பட்டும் பலாத்காரம் செய்யப்பட்டும் கொல்லப்பட்டனர். இரு வழக்குகளிலும் பாதிக்கப்பட்டவர்கள் வண்டியிலிருந்து கீழே தள்ளப்பட்டனர். இரு வழக்குகளின் குற்றவாளிகளும் திகார் சிறையில் அடைக்கப்பட்டு அங்கிருந்தபடியே தூக்கிலிடப்பட்டனர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications