Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

மோடி பேச்சில் ஆர்.எஸ்.எஸ் நாற்றம் அடிக்குது.. அவங்க முன்னோர்கள் செஞ்சது மறந்திடுச்சா? கார்கே தாக்கு!

Subscribe to Oneindia Tamil

டெல்லி: மோடியின் பேச்சில் ஆர்எஸ்எஸ் நாற்றம் வீசுகிறது, ஆங்கிலேயர்களையும் முஸ்லீம் லீக்கையும் ஆதரித்தவர்கள் மோடி - ஷாவின் முன்னோடிகள் என்று பிரதமர் நரேந்திர மோடியை காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே விமர்சித்துள்ளார்.

நாடாளுமன்றத் தேர்தல் வரும் ஏப்ரல் 19ஆம் தேதி தொடங்கி ஜூன் 1ஆம் தேதி வரை 7 கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளது. ஜூன் 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது. தேர்தலையொட்டிஅரசியல் கட்சிகளின் தலைவர்கள் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

There is a stink of RSS in Modi speeches attacks Congress chief Mallikarjun Kharge

லோக்சபா தேர்தலுக்கான காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையை, கடந்த ஏப்ரல் 6ஆம் தேதி காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே வெளியிட்டார். அதில், ஒரே நாடு ஒரே தேர்தல் முறை கொண்டுவரப்படாது, பாஜகவின் மக்கள் விரோத சட்டங்கள் திரும்பப் பெறப்படும் என்பது உள்ளிட்ட பல்வேறு வாக்குறுதிகள் அறிவிக்கப்பட்டன.

காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை குறித்து ராஜஸ்தான் மாநிலத்தில் நடைபெற்ற பிரச்சாரக் கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, "காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை சுதந்திரத்துக்கு முந்தைய முஸ்லீம் லீக் கட்சி தேர்தல் அறிக்கை போல உள்ளது" என்று விமர்சித்தார். பிரதமர் மோடியின் இந்த விமர்சனத்துக்கு காங்கிரஸ் கட்சியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவர் மல்லிகார்ஜூன கார்கே மோடியின் பேச்சுக்கு பதிலடி கொடுத்துள்ளார். அவர்களின் சித்தாந்த முன்னோர்கள் சுதந்திரப் போராட்டத்தின் போது இந்தியர்களுக்கு எதிராக ஆங்கிலேயர் மற்றும் முஸ்லீம் லீக்கை ஆதரித்தனர், மோடியின் பேச்சில் ஆர்எஸ்எஸ் நாற்றம் வீசுகிறது என மல்லிகார்ஜுன கார்கே விமர்சித்துள்ளார்.

இதுதொடர்பாக கார்கே தனது எக்ஸ் சமூக வலைதள பக்கத்தில், "பிரதமர் மோடி - அமித் ஷா ஆகியோரின் அரசியல் மற்றும் சித்தாந்த முன்னோடிகள் சுதந்திர போராட்டத்தின் போது ஆங்கிலேயர்களையும் முஸ்லிம் லீக்கையும் ஆதரித்தனர். இன்று கூட காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கைக்கு எதிராக முஸ்லிம் லீக்கை தூண்டி விடுகின்றனர்.

காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை சாமானிய மக்களின் கோரிக்கைகளை நிறைவேற்றும் வகையில் உள்ளது. 1942-ல் வெள்ளையனே வெளியேறு என்ற மகாத்மா காந்தியின் அழைப்பை மோடி - அமித் ஷாவின் சித்தாந்த முன்னோடிகள் எதிர்த்தனர்.

1940களில் சியாம பிரசாத் முகர்ஜி வங்கம், சிந்து மாகாணங்களில் முஸ்லீம் லீக்குடன் இணைந்து தனது அரசாங்கங்களை எவ்வாறு அமைத்தார் என்பது அனைவருக்கும் தெரியும்.

வெள்ளையனே வெளியேறு போராட்டம் எப்படி நடத்தலாம்? காங்கிரஸ் கட்சியை எப்படி அடக்கலாம்? என சியாம பிரசாத் முகர்ஜி பிரிட்டிஷ் கவர்னருக்கு கடிதம் எழுதவில்லையா? மேலும் இந்தியர்கள் பிரிட்டிஷ் மீது நம்பிக்கை வைக்க வேண்டும் என கூறவில்லையா? மோடி மற்றும் அமித் ஷா, அவர்களின் ஆட்கள் காங்கிரஸ் தேர்தல் அறிக்க்கை குறித்து தவறான தகவலை பரப்பி வருகிறார்கள்.

பிரதமர் மோடியின் பேச்சில் ஆர்.எஸ்.எஸ் வாடை அடிக்கிறது. நாளுக்கு நாள் பாஜகவின் தேர்தல் கிராஃப் சரிந்து கொண்டே வருகிறது. இதனால் பாஜக அவர்களின் நெருங்கிய நண்பர்களான முஸ்லிம் லீக்கை நினைவு கூரத் தொடங்கியுள்ளது.

ஒரே ஒரு உண்மை! காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை 140 கோடி மக்களின் நம்பிக்கை மட்டும் அபிலாஷைகளை பிரதிபலிக்கிறது. இந்திய மக்களின் வலிமை மோடியின் 10 ஆண்டுகால அநீதியை முடிவுக்கு கொண்டு வரும்." எனத் தெரிவித்துள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+