மணி 10 ஆகியும்.. ராஜ்யசபா நிகழ்ச்சி நிரலை வெளியிடாத மத்திய அரசு.. மம்தா கட்சி எம்பிக்கு வந்த கோபம்
டெல்லி: நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் தொடங்கி நடந்து வருகிறது. இந்நிலையில் தான் இன்று காலை 10 மணியாகியும் ராஜ்யசபாவில் இன்று என்னென்ன விஷயங்கள் நடைபெற உள்ளது என்பது தொடர்பான நிகழ்ச்சி நிரல் வெளியிடவில்லை. இதனால் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் எம்பி சாகேட் கோகலே, மத்திய அரசை கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் கடந்த 1ம் தேதி தொடங்கியது. இந்த கூட்டத்தொடர் வரும் 19ம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்நிலையில் தான் இன்று காலையில் லோக்சபா, ராஜ்யசபா கூட்டத்தொடர் காலை 11 மணிக்கு வழக்கம்போல் தொடங்கின.

இந்நிலையில் தான் ராஜ்யசபாவில் இன்றைய நிகழ்ச்சி நிரல் குறித்த அறிவிப்பை வெளியிடவில்லை என்று ராஜ்யசபா எம்பி சாகேட் கோகலே குற்றம்சாட்டி உள்ளார். மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த இவர் அந்த கட்சியின் தேசிய செய்தி தொடர்பாளராகவும் உள்ளார். இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் பக்கத்தில் கூறியுள்ளதாவது:
‛‛இப்போது காலை 10 மணி ஆகிறது (நாடாளுமன்றம் தொடங்க இன்னும் ஒரு மணிநேரம் மட்டுமே உள்ளது). ஆனால் ராஜ்யசபாவின் இன்றைய நிகழ்ச்சி நிரல் குறித்த அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை. நாடாளுமன்றம் அரசால் இப்படித்தான் நடத்தப்படுகிறதா? எதிர்க்கட்சிகள் முழுமையாக ஒத்துழைக்கின்றன. ஆனால் மோடி அரசின் நோக்கம் என்பது தீங்கிழைப்பதை காரணமாக கொண்டுள்ளது. மோடி அரசு நாடாளுமன்றத்தை கேலி செய்து வருகிறது'' என்று விமர்சனம் செய்துள்ளார்.
-
மகளிருக்கு டபுள் ஜாக்பாட்.. மகளிர் உரிமை தொகை + ரூ.8000.. மொத்தம் ரூ.10,000! திமுக மெகா ப்ளான்! -
சென்னை எல்லையில் புது பேருந்து நிலையம்! பிரம்மாண்ட கிரீன்ஃபீல்ட் பஸ் ஸ்டாண்ட்! எங்க இருக்கு தெரியுமா -
2030-க்கு பிறகும் இந்திய IT துறை காணாமல் போய்விடும்.. டிசிஎஸ் சிஇஓ கிருதிவாசன் சொன்ன முக்கிய விஷயம்! -
"நீங்களே 4 முறை ஆர்எஸ்எஸ் நிகழ்ச்சிக்கு போனீங்கள்!" நீதிபதியை பார்த்து கெஜ்ரிவால் சொன்ன வார்த்தை! -
படுபாவி எதுக்கு வந்தீங்க? லெஃப்ட் ரைட் வாங்கிய ராமதாஸின் செல்ல மகள்! ஸ்டன்னாகி நின்ற ஜிகே மணி? -
அஜிதாவை திமுகவில் சேர்ப்பதற்கு முன்.. ஸ்டாலின் டீமிடம் இருந்து சென்ற வார்னிங்.. என்ன நடந்தது? -
நீலாங்கரை வீட்டில் ஏணி போட்டு காம்பவுண்ட் சுவரில் ஏறிய விஜய்! மரக்கிளையை பிடித்து கொண்டு செய்த செயல் -
சிறகடிக்க ஆசை: ரோகிணி சொன்ன ஒரே ஒரு உண்மை! விஜயா வசமா சிக்கியாச்சு.. அண்ணாமலை எடுத்த முடிவு -
திடீர் அதிமுக சப்போர்ட்.. என்னாச்சு திருமாவளவனுக்கு.. குழப்பி எடுக்கும் விசிக.. அறிவாலயம் குழப்பம்! -
தங்கம் விலையில் நடக்க போகும் சுனாமி.. எச்சரித்த பிரபல வங்கி.. கிராமிற்கு ரூ.2500க்கும் மேல் குறையும்.! -
தமிழ் புத்தாண்டு பலன் 2026: மேஷம் முதல் மீனம் வரை.. 12 ராசிகளுக்கான பலன்கள்.. யாருக்கு அதிர்ஷ்டம்? -
நல்ல பாம்பு கடித்த சிறுவனை கங்கையில் 12 மணி நேரம் மிதக்க விட்ட பெற்றோர்.. உடனே அதிசயம் நடந்ததா












Click it and Unblock the Notifications