டெல்லியில் சீக்கியர் அமைப்பினருடன் இணைந்து சீமான் நடத்திய திலீபன் நினைவேந்தல் நிகழ்வு
Recommended Video
டெல்லி: தமிழீழ விடுதலைப் புலிகளின் தளபதி திலீபனின் 32-வது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வை டெல்லியில் சீக்கியர் அமைப்பினருடன் இணைந்து நடத்தினார் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்.
டெல்லியில் ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும் 370வது பிரிவு ரத்துக்கு எதிராக தேசிய இனங்களின் அணிவகுப்பு என்கிற நிகழ்வு நடைபெற்றது. இதில் சீமான் தலைமயிலான நாம் தமிழர் கட்சி, தமிழ்த் தேசிய பேரியக்கத்தின் நிர்வாகிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இந்த நிகழ்வில் முடிவில் தமிழீழத்தில் தமிழ்த் தேசிய இனவிடுதலைக்காக உண்ணாவிரதம் இருந்து உயிர் நீத்த திலீபனின் 32-வது நினைவேந்தல் நிகழ்வு நடைபெற்றது. திலீபன் படத்துக்கு சீமான் உள்ளிட்டோர் மலர் தூவி வீரவணக்கம் செலுத்தினர்.
ஈகைப் பேரொளி அண்ணன் திலீபன் அவர்களுக்கு டெல்லியில் நடைபெற்ற தேசிய இனங்களின் ஒற்றுமை அணிவகுப்பு மற்றும் பேரணியின் போது நாம் தமிழர் கட்சி சார்பாக வீரவணக்கம் செலுத்தப்பட்டது! pic.twitter.com/mTVFupFwBk
— சீமான் (@SeemanOfficial) September 26, 2019
சீக்கியர் அமைப்பினரும் திலீபன் படத்துக்கு மலர்தூவி மரியாதை செலுத்தினர்.












Click it and Unblock the Notifications