பிரதமர் கூறியபடி... நானும் ஒரு அந்தோலன் ஜீவிதான்... மக்களவையில் திருமாவளவன் பேச்சு!
டெல்லி: போராடும் விவசாயிகளை பிரதமர் அந்தோலன் ஜீவி என்கிறார். அவரது கூற்றுப்படி நானும் ஒரு அந்தோலன் ஜீவிதான் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் மக்களவையில் பேசினார்.
இந்த அரசு மக்களுக்கான அரசாக இல்லை. கார்ப்பரேட்களுக்கான அரசாக இருக்கிறது என்றும் தொல்.திருமாவளவன் கூறினார்.
விவசாயிகளை வாட்டி வதைக்கும் வேளாண் சட்டங்களை திரும்ப பெற வேண்டும் என்றும் .திருமாவளவன் வலியுறுத்தினார்.

பிரதமர் மோடி உரை
குடியரசுத்தலைவர் உரைக்கு நன்றி தெரிவித்து நேற்று முன்தினம் மாநிலங்களவையில் பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றினார். அப்போது அவர் டெல்லியின் எல்லையில் போராடி வரும் விவசாயிகளை மீண்டும் பேச்சு வார்த்தை நடத்த அழைப்பு விடுத்துள்ளார். குறைந்தபட்ச ஆதரவு விலை (எம்எஸ்பி) குறித்த அரசாங்கத்தின் நிலைப்பாட்டை மீண்டும் வலியுறுத்திப் பேசியதோடு, இது போன்ற விவசாய சீரமைப்புகளைக் கொண்டு வர முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் தான் முன்னோடி என்று மேற்கோள் காட்டி பேசியுள்ளார். மேலும் போராடும் விவசாயிகளை அந்தோலன் ஜீவி என்று கூறினார்

சர்ச்சை வார்த்தைக்கு கண்டனம்
இந்த வார்த்தையின் ஒற்றை வரி அர்த்தம் 'தொழில்முறை போராட்டக்காரர்கள்', அதாவது போராட்டத்தையே தொழிலாக வைத்திருப்பவர்கள் என்று பொருள். ஆனால் இதற்கு நீண்ட நெடிய விளக்கத்தையும் பிரதமரே அளித்தார். இந்த நிலையில் பிரதமர் பயன்படுத்திய இந்த வார்த்தைக்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

திருமாவளவன் பேச்சு
இந்த நிலையில் இன்று மக்களவையில் குடியரசு தலைவரின் உரை குறித்து பேசிய விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவரும் எம்.பியுமான தொல்.திருமாவளவன் கூறியதாவது:- குடியரசுத்தலைவரின் உரை உழைக்கும் மக்களுக்கு எதிரானதாக இருக்கிறது. இந்த அரசு மக்களுக்கான அரசாக இல்லை. கார்ப்பரேட்களுக்கான அரசாக இருக்கிறது. விவசாய மக்களின் போராட்டம் இரண்டரை மாதங்களாக நடந்து கொண்டிருக்கிறது.

நானும் அந்தோலன் ஜீவிதான்
போராடும் விவசாயிகளை பிரதமர் அந்தோலன் ஜீவி என்கிறார். அவரது கூற்றுப்படி நானும் ஒரு அந்தோலன் ஜீவிதான். போராடும் மக்களை கொச்சைப்படுத்தும் விதமாக பிரதமர் பேசிய பேச்சை வன்மையாக கண்டிக்கிறேன். வேளாண் சட்டங்களை திரும்ப பெற வேண்டும்" எனத் தெரிவித்தார்.
-
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
பவரை காட்டுவோம்! மொத்த உலக நாடுகளையும் பீதியில் ஆழ்த்திய டிரம்ப் சொன்ன வார்த்தை! பெருசா நடக்க போகுது -
சர்ருன்னு ஏறிய பாஜக சீட் கணக்கு.. கடந்த தேர்தல்களில் பாஜக போட்டியிட்ட தொகுதிகள் எத்தனை?












Click it and Unblock the Notifications