2-ஆவது அடி.. முதல் தாக்குதலைவிட இது பயங்கர பேரிடி.. இனியாவது திருந்துமா பாகிஸ்தான்?
Recommended Video

டெல்லி: பாகிஸ்தான் எல்லை கட்டுப்பாட்டு பகுதியில் இன்று அதிகாலை நடந்த வான் வழித்தாக்குதல் 2-ஆவது சர்ஜிக்கல் ஸ்டிரைக் ஆகும்.
இந்தியாவுடன் நட்புறவு என பாகிஸ்தான் கூறிக் கொண்டாலும் நைஸாக தாக்குதல் சம்பவங்களை நடத்துவதும் எங்களுக்கும் தாக்குதலுக்கும் சம்பந்தமில்லை என கூறுவதும் பாகிஸ்தானின் வேலையாக உள்ளது.
பாகிஸ்தானில் உள்ள தீவிரவாதத்தை வேரறுக்க இந்தியாவும் உலக நாடுகளும் ஒன்றிணைந்து நடவடிக்கை எடுத்தாலும் அதில் முற்றிலும் வெற்றி காண முடியவில்லை.

இந்தியா வியூகம்
இந்த நிலையில் கடந்த பிப்ரவரி மாதம் 14-ஆம் தேதி புல்வாமாவில் சிஆர்பிஎஃப் படையினர் நடத்திய தாக்குதலில் 40 வீரர்களை நாம் இழந்தோம். இதற்கு பதிலடி கொடுக்க இந்தியா வியூகம் வகுத்தது.

அழிப்பு
அதன்படி இன்று அதிகாலை 3.30 மணிக்கு பாலகோட் உள்ளிட்ட சுமார் 4 தீவிரவாத முகாம்களை குறிவைத்து இந்தியா வான்வெளி தாக்குதல் நடத்தியது. இதில் 200 முதல் 300 தீவிரவாதிகள் அழிந்திருக்கலாம் என தகவல் கூறப்படுகிறது.

சிறப்பு கமாண்டோ படை
இது இரண்டாவது சர்ஜிக்கல் ஸ்டிரைக் என கொண்டாடப்படுகிறது. முதல் சர்ஜிக்கல் ஸ்டிரைக் பதான்கோட் தாக்குதல் சம்பவத்துக்கு கொடுக்கப்பட்டது. கடந்த 2016-ஆம் ஆண்டு ஜனவரி 2-ஆம் தேதி பஞ்சாபில் உள்ள பதான்கோட் வான் படை நிலையத்தில் நடந்த தீவிரவாத தாக்குதலில் 7 பாதுகாப்பு படையினர் கொல்லப்பட்டனர்.

சர்ஜிக்கல் ஸ்டிரைக்
இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக கடந்த 2016-ஆம் ஆண்டு செப்டம்பர் 29-ஆம் தேதி இந்திய ராணுவத்தின் சிறப்பு கமாண்டோ படையினர் பாகிஸ்தான் கட்டுப்பாட்டில் உள்ள எல்லை கோட்டுப் பகுதிக்குள் நுழைந்து அதிரடித் தாக்குதலை நடத்தி 38 தீவிரவாதிகளை கொன்றது குறிப்பிடத்தக்கது.
-
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்? -
பெரிய சதியை முறியடிச்சிட்டோம்.. திமுகவை வீழ்த்திய 2 மாஸ்டர்மைண்டுகள்.. இரவோடு இரவாக பறந்த போன் -
"பயத்தில் பேன்ட்டிலேயே சிறுநீர் போயிட்டேன்.." IPLஐ கைப்பற்ற தாவூத் போட்ட திட்டம்! லலித் மோடி பகீர்












Click it and Unblock the Notifications