நடிகர் அஜித், அஸ்வின், செஃப் தாமு உட்பட பத்ம விருதுகளை பெற்ற தமிழர்கள்.. முழு பட்டியல் இதோ
டெல்லி: நமது நாட்டில் குடிமக்களுக்கு வழங்கப்படும் உயரிய விருதுகளான பத்ம விருதுகள் வழங்கும் நிகழ்ச்சி ஒன்று நடைபெற்றது. குடியரசுத் தலைவர் மாளிகையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் பத்ம விருதுகளைப் பெற்ற குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு வழங்கினார். தமிழகத்தைச் சேர்ந்த 13 பேருக்கு விருதுகள் அறிவிக்கப்பட்ட நிலையில், இன்று (ஏப்ரல் 28) 5 பேருக்கு விருதுகள் வழங்கப்பட்டன.
பல்வேறு துறைகளில் சாதிப்பவர்களுக்கு நமது நாட்டில் ஒவ்வொரு ஆண்டும் பத்ம விருதுகள் வழங்கப்படும். நாட்டிலேயே குடிமக்களுக்கு வழங்கும் மிகவும் உயரிய விருதுகளில் ஒன்றாக இது கருதப்படுகிறது. வழக்கமாகக் குடியரசு தினக் கொண்டாட்டத்தின் போது ஜனவரி இறுதியில் யாருக்கு விருதுகள் என்பது குறித்த அறிவிப்பு வெளியிடப்படும்.

பத்ம விருதுகள்
பிரதமர் அமைக்கும் பத்ம விருதுகள் குழு பல்வேறு துறைகளில் சிறந்து விளங்குவோரின் பட்டியலைத் தயார் செய்து மத்திய அரசுக்குப் பரிந்துரைக்கும். அதன் அடிப்படையிலேயே பத்ம விருதுகள் வழங்கப்படும். வழக்கமாக மார்ச் அல்லது ஏப்ரல் மாதங்களில் பத்ம விருதுகள் வழங்கப்படும். அதன்படி இந்தாண்டுக்கான பத்ம விருதுகள் வழங்கும் நிகழ்ச்சி ராஷ்டிரபதி பவனில் நடைபெற்றது. இதில் பத்ம விருதுகளைக் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு வழங்கினார்.
139 விருதுகள்
நடப்பு ஆண்டில் பத்ம விபூஷன் விருது 7 பேருக்கு அறிவிக்கப்பட்டன. 19 பேருக்குப் பத்ம பூஷன் விருது, 113 பேருக்குப் பத்மஸ்ரீ என மொத்தம் 139 பேருக்கு விருதுகள் வழங்கப்பட்டன. குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு பத்ம விருதுகளை வழங்கினார். விருது பெற்றவர்களில் 23 பேர் பெண்கள் ஆவர். மேலும், இந்தப் பட்டியலில் வெளிநாட்டினர்/ வெளிநாடு வாழ் இந்தியர் பிரிவைச் சேர்ந்த 10 பேர் மற்றும் மரணத்திற்குப் பின் விருது பெறும் 13 பேரும் உள்ளனர்..
5 தமிழர்கள்
இன்றைய தினம் (ஏப்ரல் 28) 139 பேரில் 71 பேருக்குப் பதம் விருதுகள் வழங்கப்பட்டன. அதில் அஜித் குமார் (பத்ம பூஷன்), அஸ்வின் (பத்மஸ்ரீ), செஃப் தாமு (பத்மஸ்ரீ), லட்சுமிபதி ராமசுப்பையர் (பத்மஸ்ரீ), ராதாகிருஷ்ணன் தேவசேனாபதி (பத்மஸ்ரீ), சி.எஸ்.வைத்தியநாதன் (பத்மஸ்ரீ) ஆகிய ஐந்து தமிழர்கள் பத்ம விருதுகளைப் பெற்றனர். மற்றவர்களுக்கு மே 12ம் தேதி நடைபெறும் விழாவில் பத்ம விருதுகள் வழங்கப்படும்.
தமிழர்கள்
மொத்தமாக தமிழ்நாட்டில் இருந்து 13 பேருக்குப் பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. தமிழகத்தைச் சேர்ந்த மூவருக்குப் பத்ம பூஷன் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.. நடிகர் அஜித் குமார் மற்றும் நடிகை சோபனா ஆகியோருக்கு கலைத் துறையில் சிறந்து விளங்குவதற்காகப் பத்ம பூஷன் விருது அறிவிக்கப்பட்டு இருந்தது. அதேபோல நல்லி குப்புசாமிக்கு தொழில்துறையில் சிறந்து விளங்கியதற்காகப் பத்ம பூஷன் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
-
2020ல் ஒரு கோடிக்கு 'இதை' வாங்கியிருந்தால் இன்று 75 கோடி லாபம்.. எஸ்பிஐயில் 6 கோடி.. தங்கம் 4 கோடி -
எடப்பாடி பழனிசாமி மீது அதிருப்தி! திமுகவில் இணைந்த முன்னாள் எம்எல்ஏ இளையக்கண்ணு! -
தமிழ்நாட்டின் ஹிட்லர்.. மனைவி, மகளை விரட்டிவிட்டு மகளிர் தின விழாவா! விஜய்யை சாடிய இயக்குநர் அமீர் -
ஸ்டாலின் காதுக்கு எட்டிய பெயர்.. உளவுத்துறைக்கு உடனே உத்தரவு.. சென்னை சுவரில் தோன்றிய நாடார் சங்கம் -
NDA கூட்டணியில் தவெக? துணை முதல்வராகிறாரா விஜய்? சாணக்கியத்தனத்தை சொல்லி கொடுத்த பிரபல நடிகர் -
வீட்டுப் பெண்களை நினைக்காமல் அவதூறு பரப்பி.. தவெக நிகழ்ச்சியில் பேசிய பெண்! ஒரு நொடி முகம் மாறிய விஜய் -
இந்தியாவுக்கு ஆப்பு வைக்கும் ரஷ்யா.. கச்சா எண்ணெய் விலையில் இனி சலுகை இல்லை? நேரம் பார்த்து அடிக்கும் புதின் -
Sani Peyarchi: விருச்சிக ராசிக்கு அடிக்கும் ஜாக்பாட்.. இனி பொற்காலம் ஆரம்பம் -
விஜய்க்கு தான் பிரச்சனை! அடுத்த அடி, அதிரடி காட்டும் மகன் ஜேசன் சஞ்சீவ்! இதுதான் கெத்து.. குவியும் பாராட்டு -
“OPS சிரிப்பே அவருக்கு பிரச்சனை”.. ஸ்டாலின் பேச பேச.. மேடையிலேயே குலுங்கி குலுங்கி சிரித்த ஓபிஎஸ்! -
போரில் ‘என்ட்ரி'யான ரஷ்யா.. அரபு நாடுகளை ஈரான் தாக்கியது எப்படி? டிரம்பை கதறவிடும் புதின்! -
தங்கப் பத்திரம் சேமிப்பு திட்டத்தில் ரிசர்வ் வங்கி ஜாக்பாட்.. ₹1 லட்சம் போட்டால் ₹3.48 லட்சம் லாபமா?












Click it and Unblock the Notifications