Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பிரான்சில் இருந்து மேலும் 3 ரஃபேல் போர் விமானங்கள் இன்று மாலை இந்தியா வருகின்றன

Subscribe to Oneindia Tamil

டெல்லி: பிரான்சில் இருந்து மேலு 3 ரஃபேல் போர் விமானங்கள் இன்று மாலை இந்தியாவுக்கு வருகின்றன.

பிரான்ஸ் நாட்டின் டசால்ட் நிறுவனத்திடம் இருந்து 36 ரஃபேல் போர் விமானங்கள் வாங்குவதற்காக 2016-ல் ஒப்பந்தம் போடப்பட்டது. மொத்தம் ரூ59,000 கோடி மதிப்பிலானது இந்த ஒப்பந்தம்.

Three more Rafale jets to arrive in India today

முதல் கட்டமாக 5 ரஃபேல் போர் விமானங்கள் கடந்த ஜூலை 28-ல் இந்தியா வந்து சேர்ந்தன. பின்னர் முறைப்படி இந்த விமானங்கள் செப்டம்பர் 10-ந் தேதி நாட்டின் விமானப் படையில் இணைக்கப்பட்டன.

லடாக் கிழக்கு எல்லையில் சீனாவின் ஊடுருவல் முயற்சிகள் தொடரும் நிலையில் அப்பகுதியில் ரஃபேல் போர் விமானங்கள் நிறுத்தப்பட்டிருக்கின்றன.

இதனைத் தொடர்ந்து பிரான்ஸில் இருந்து இன்று காலை மேலும் 3 விமானங்கள் இந்தியாவுக்கு புறப்படுகின்றன. பிரான்ஸ் நாட்டில் இருந்து 8 மணிநேரம் தொடர்ந்து பயணித்து இந்தியாவுக்கு இந்த விமானங்கள் வருகை தருகின்றன. ஹரியானாவின் அம்பாலா விமான தளத்தை இன்று மாலை இந்த விமானங்கள் வந்தடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த புதிய 3 விமானங்களும் மேற்கு வங்க மாநிலம் ஹசிம்மரா விமான படைதளத்தில் நிறுத்தப்படலாம் என தெரிகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+