ஜனவரி 1 முதல்.. இந்த 3 வகை வங்கி கணக்குகள் மூடப்படுமாம்.. ஜீரோ பேலன்சுமா? ரிசர்வ் வங்கி வைத்த செக்!
டெல்லி: புத்தாண்டு நாளை பிறக்கும் நிலையில், (ஜனவரி 1 2025) முதல் சில முக்கிய மாற்றங்களை ரிசர்வ் வங்கி செய்ய உள்ளது. இந்த மாற்றத்தால் மூன்று வகையிலான வங்கி கணக்குகள் முடக்கப்பட உள்ளன. செயலற்ற வங்கி கணக்கு, பயன்பாட்டில் இல்லாத வங்கி கணக்கு, ஜீரோ பேலன்ஸ் அக்கவுண்ட் என மூன்று வகையான அக்கவுண்டும் முடக்கப்பட உள்ளது. எனவே உங்கள் வங்கி கணக்கும் மூடப்படுவதற்கு வாய்ப்பு உள்ளதா? என்பது பற்றிய விவரங்களை பார்க்கலாம்.
வங்கி கணக்கு என்பது தற்போது அத்தியாவசிய சேவைகளில் ஒன்றாக மாறிவிட்டது. அரசின் நிதி உதவி கூட பயனாளிகளுக்கு நேரடியாக வங்கி கணக்கில் வரவு வைக்கப்படுவதால் வங்கி கணக்கை கிட்டத்தட்ட அனைவரும் பயன்படுத்த தொடங்கிவிட்டார்கள். வங்கி விதிகளை பொறுத்தவரை ரிசர்வ் வங்கி அவ்வப்போது பாதுகாப்பு மற்றும் நிதி காரணங்களுக்காக விதிகளை மாற்றி வருகிறது.

அந்த வகையில், நாளை (ஜனவரி 1 2025) முதல் சில முக்கிய மாற்றங்களை ரிசர்வ் வங்கி செய்ய உள்ளது. இந்த மாற்றத்தால் மூன்று வகையிலான வங்கி கணக்குகள் முடக்கப்பட உள்ளன. எனவே உங்கள் வங்கி கணக்கும் மூடப்படுவதற்கு வாய்ப்பு உள்ளதா? என்பது பற்றிய விவரங்களை பார்க்கலாம்.
செயலற்ற வங்கி கணக்கு:
டார்மண்ட் அக்கவுண்ட் (Dormant Account)என்று சொல்லப்படக்கூடிய நீண்ட காலமாக எந்த பரிவர்த்தனையும் செய்யப்படாத வங்கி கணக்குகள் அல்லது கடந்த 2 ஆண்டுகளாக எந்த பரிவர்த்தனையும் செய்யப்படாத வங்கி கணக்குகள் மூடப்படும் என்று ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. எனவே, எந்த பரிவர்த்தனையும் செய்யாமல் உங்களிடம் ஏதேனும் வங்கி கணக்கு இருந்தால் அது கிளோஸ் செய்யப்பட வாய்ப்புள்ளது. முறைகேடுகளை தவிர்க்கவும், வாடிக்கையாளர்களின் பாதுகாப்பு கருதியும் ரிசர்வ் வங்கி இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.
பயன்பாட்டில் இல்லாத வங்கி கணக்கு:
இன்ஆக்டிவ் வங்கி கணக்கு (Inactive Account) எனப்படும் செயல்பாடற்ற வங்கி கணக்கு என்பது 12 மாதங்களாக எந்த ஒரு பரிவர்த்தனையும் செய்யப்படாத வங்கி கணக்கை குறிக்கும். இத்தகைய வங்கி கணக்குகளும் மூடப்பட உள்ளன. வங்கிகளின் நிதி பாதுகாப்பு, முறைகேடுகள் மற்றும் மோசடி நடவடிக்கைகளை தடுக்கும் விதமாக இந்த நடவடிக்கையை ரிசர்வ் வங்கி எடுக்க உள்ளது. எனவே நீங்கள் வைத்து இருக்கும் வங்கி கணக்கு இந்த கேட்டகிரியில் வந்தால் உடனே அதை ரி ஆக்டிவிவேட் செய்து விடுங்கள் அல்லது மூடப்படும் ரிஸ்க் உள்ளது.
ஜீரோ பேலன்ஸ் அக்கவுண்ட்:
வங்கியில் எந்த தொகையும் இல்லாமல் நீண்ட காலத்திற்கு மெயிண்டன் செய்வது ஜீரோ பேலன்ஸ் அக்கவுண்ட் என்று அழைக்கப்படுகிறது. நீண்ட காலத்திற்கு எந்த தொகையும் டெபாசிட் செய்யாமல் இருப்பதோடு, வங்கி கணக்கில் இருப்பு தொகை ஜீரோவாக இருக்கும் கணக்கே ஜீரோ பேலன்ஸ் அக்கவுன்ட் எனப்படுகிறது. இந்த வகை வங்கி கணக்குகளில் எந்த வித பரிவர்த்தனையும் குறிப்பிட்ட காலத்திற்கு இல்லையென்றால் முடக்கப்படலாம். ஜீரோ பேலன்ஸ் அக்கவுண்ட்களில் முறைகேடு செய்யப்படுவதை தடுக்கவும் வாடிக்கையாளர்கள் தங்கள் கணக்கை தொடர்ந்து பயன்படுத்த வேண்டும் என்ற வகையிலும் இந்த நடவடிக்கை எடுக்கப்படுகிறது.
வாடிக்கையாளர்கள் செய்ய வேண்டியது என்ன?
உங்கள் வங்கி கணக்கு இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக செயல்படாமல் இருந்தால் உடனடியாக அதை ரீ ஆக்டிவேட் செய்யவும். இதற்கான முதல் படி, கே ஒய் சி நடைமுறையை மேற்கொள்வதுதான். உங்கள் வங்கி கிளைக்கு நேரடியாக சென்றோ அல்லது ஆன்லைனிலோ இதை செய்யலாம். உங்கள் வங்கி கணக்கு செயலற்று இல்லை என்பதை உறுதி செய்ய அவ்வப்போது கேஒய்சி அப்டேட் செய்து கொள்ள வேண்டும்.
-
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000!












Click it and Unblock the Notifications