நெருப்பாற்றில் நீந்தி வந்துள்ளோம்.. மன்னர் ஆட்சி அடையாளமே செங்கோல்- மஹூவா மொய்த்ரா சரவெடி பேச்சு!
டெல்லி: நெருப்பாற்றில் நீந்திதான் எதிர்க்கட்சிகள் வெற்றி பெற்றுள்ளோம்; மைனாரிட்டி பாஜக அரசால் எதிர்க்கட்சிகளை எதுவுமே செய்ய முடியாது; மன்னர் ஆட்சியின் அடையாளம்தான் செங்கோல். இந்திய வரலாற்றிலேயே இல்லாத வகையில் செங்கோலுடன் ஜனாதிபதி அழைத்துவரப்பட்டார் என லோக்சபாவில் திரிணாமுல் காங்கிரஸ் எம்பி மஹூவா மொய்த்ரா ஆவேசமாக பேசினார்.
லோக்சபாவில் ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாத்தில் மஹூவா மொய்த்ரா எம்பி பேசியதாவது: லோக்சபாவில் இதே இடத்தில் நான் நின்றபோது எனக்கு பேச அனுமதி மறுக்கப்பட்டது. ஒரு எம்பியின் குரல்வளையை நெறித்ததால் ஆளும் பாஜக பெரும் விலை கொடுத்துவிட்டது. என்னை ஒடுக்க நீங்கள் நினைத்தீர்கள்.. ஆனால் மக்கள் உங்களது 63 நாடாளுமன்ற மக்களை நிரந்தரமாக உட்கார வைத்துவிட்டனர்.

தேர்தல் ஆணையத்தை மீறி எதிர்க்கட்சிகள் வெற்றி பெற்றுள்ளோம். ஆளும் கட்சியின் விதிமீறல்களை தேர்தல் ஆணையம் கண்டு கொள்ளவே இல்லை. நாங்கள் நெருப்பாற்றில் நீந்தி வந்துள்ளோம். இன்னமும் பாஜகவினர் இது மைனாரிட்டி அரசு என்பதை உணரவே இல்லை. எங்களை- எதிர்க்கட்சிகளை உங்களால் ஒன்றுமே செய்ய முடியாது.
செங்கோல் என்பது மன்னராட்சியின் அடையாளம். இந்திய வரலாற்றிலேயே இதுவரை இல்லாத வகையில் செங்கோலுடன் ஜனாதிபதி அழைத்துவரப்பட்டார். இது ஜனநாயக நாடு. ஜனநாயக நாட்டில் செங்கோல் என்பது எதற்காக? கடவுளிடம் ஆணவத்துடன் நடந்து கொண்டால் தண்டிக்கப்ப்டுவர் என்பதை பாஜகவினர் உணர்ந்து கொள்ள வேண்டும்.
#WATCH | TMC MP Mahua Moitra says, "The last time I stood here I was not allowed to speak. But the ruling party has paid a very heavy price for throttling the voice of one MP. In an attempt to suppress me, the public made 63 of your members sit permanently..." pic.twitter.com/JXyBSqM2ta
— ANI (@ANI) July 1, 2024
மணிப்பூர் மாநில மக்கள் கிழக்கை பாருங்கள் என கேட்கவில்லை. கிழக்கில் அரசாங்கம் என்பது செயல்பட்டாக வேண்டும் என்றுதான் மணிப்பூர் மக்கள் கேட்கிறார்கள். வடகிழக்கு மாநிலங்களுக்கு 4 மடங்கு கூடுதல் நிதி ஒதுக்கி இருப்பதாக ஜனாதிபதி உரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் மணிப்பூர் பற்றி ஒரு வார்த்தை கூட இல்லையே? ஏன்? இவ்வாறு மஹூவா மொய்த்ரா எம்பி பேசினார்.
-
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
சிறகடிக்க ஆசை: முத்து மீனா வாழ்க்கையில் நடந்த நல்ல விஷயம்.. சந்தோஷத்தில் விஜயா! ரோகிணி செய்த செயல் -
தங்கம்.. 15 ஆண்டுகளில் இல்லாத மிகப்பெரிய சரிவு! 2011 செப்டம்பர் 'கிளைமாக்ஸ்' மீண்டும் நடக்கிறதா? -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
தேனியில் 25 சவரன் அடமான தங்க நகையை மீட்க போன பால் வியாபாரி.. கொத்தனார் வேற.. மக்களுக்கு பெரிய பாடம் -
மோடியின் பணமதிப்பிழப்பால் மாடியிலிருந்து விழுந்து செத்தாரா பாகிஸ்தானின் ஜாவேத் கானானி? துரந்தர் 2! -
ரேஷன் அட்டைதாரர்களுக்கு மெகா ஆஃபர்: ஒரே மாதத்தில் 3 மாத ரேஷன்! மத்திய அரசின் சர்ப்ரைஸ் பின்னணி என்ன -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
விசிக + காங்கிரஸ்.. திமுகவையும் விட்டு வைக்காத இ.கம்யூனிஸ்ட்.. எந்தெந்த தொகுதிகளை கேட்குது பாருங்க! -
மத்தி மீனின் "கோடி" ரூபாய் ரகசியம்.. விலை மலிவான இந்த மீனுக்குள் ஒளிந்திருக்கும் நன்மை! வரப்பிரசாதம்












Click it and Unblock the Notifications