Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

செபி தலைவர் அறிக்கை தெளிவான ஒப்புதல்.. “அதானியை 2 முறை சந்தித்தது ஏன்?” துளைத்தெடுத்த மஹுவா மொய்த்ரா

Subscribe to Oneindia Tamil

டெல்லி: சர்ச்சைக்குரிய முதலீட்டு நிதியத்தில் முதலீடு செய்திருந்ததை செபி தலைவர் மாதபி புச் ஒப்புக்கொண்டுள்ளார் என்றும், செபி தலைவரின் அறிக்கை தெளிவான ஒப்புதல் என்றும் திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி மஹுவா மொய்த்ரா தெரிவித்துள்ளார். தொடர்ந்து, மாதபிக்கு சரமாரியாக கேள்விக் கணைகளைத் தொடுத்துள்ளார் மொய்த்ரா.

அதானி நிறுவனம் வெளிநாடுகளில் உருவாக்கிய போலி நிறுவனங்களில் செபி அமைப்பின் தலைவர் மாதபி புரி புச் பங்குகளை வைத்துள்ளதாக ஹிண்டன்பர்க் நிறுவனம் குற்றம் சாட்டியது. செபி அமைப்பின் தலைவர் மாதபி பூரி புச், அவரின் கணவர் ஆகியோர் அதானி நிறுவனத்தின் வெளிநாட்டு நிறுவனங்களில் பங்கு வைத்திருப்பதன் காரணமாகவே அதானி தொடர்புடைய பங்குதாரர்களுக்கு எதிராக செபி இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை எனக் குற்றம்சாட்டி உள்ளது ஹிண்டன்பர்க்.

TMC MP Mahua Moitra launched a scathing attack on SEBI chief Madhabi Puri Buch

இந்தக் குற்றச்சாட்டுகளை மறுத்து அறிக்கை வெளியிட்டுள்ளனர் மாதபி பூரி புச் மற்றும் தவால் தம்பதியர். ஹிண்டன்பர்க்கின் குற்றச்சாட்டுகள் முற்றிலும் ஆதாரமற்றது என்றும் அவர்கள் கூறியுள்ளனர். ஹிண்டன்பர்க் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள முதலீட்டு நிதியத்தில் முதலீடு 2015 இல் இருவரும் சிங்கப்பூரில் வசித்தபோது, அதாவது மாதபி செபியில் சேருவதற்கு கிட்டத்தட்ட 2 ஆண்டுகளுக்கு முன்பு முதலீடு செய்யப்பட்டது என அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி மஹுவா மொய்த்ரா, செபி தலைவர் மாதபி புச் அறிக்கையை சுட்டிக்காட்டி, இது செபி தலைவரின் தெளிவான ஒப்புதல் எனத் தெரிவித்துள்ளார். அனில் அஹுஜா, அதானி எண்டர்பிரைசஸ் நிறுவனத்தில் இயக்குநராக இருந்ததை ஏன் மாதபி புச் தங்கள் விளக்கத்தில் குறிப்பிடவில்லை என்று கேள்வி எழுப்பி உள்ளார் மஹுவா மொய்த்ரா.

இதுதொடர்பாக மஹுவா மொய்த்ரா வெளியிட்டுள்ள எக்ஸ் சமூக வலைதள பதிவில், "இது செபி தலைவரின் தெளிவான ஒப்புதல்.

1 - நீங்கள் நிதியில் முதலீடு செய்தீர்கள். அனில் அஹுஜா அதானி எண்டர்பிரைசஸ் / அதானி பவர் நிறுவனத்தில் இயக்குநராக இருந்தார் என்பதை நீங்கள் குறிப்பிடத் தவறிவிட்டீர்கள்.

2 - முழு நிறுவனமான GDOF க்கும் அதானிகளுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்பதை நீங்கள் உறுதிப்படுத்தும் வரை அஹுஜாவின் அறிக்கையில் எந்த உண்மையும் இல்லை. மேலும், விவரங்களைப் பெற முடியாது என்று நீங்களே கூறுவதால் அஹுஜாவின் அறிக்கையை யார் சரிபார்ப்பார்கள்.

3 - பிளாக்ஸ்டோனுக்கான தவால் நியமனம் நீங்கள் செபியில் முழு நேர உறுப்பினரான பிறகு & பிளாக்ஸ்டோனின் REITக்கு செபி ஒப்புதல் அளித்த உடனேயே நடந்தது என்பதை ஒப்புக்கொள்கிறீர்கள். Quid pro quo க்கு இதைவிட சிறந்த உதாரணம் இல்லை.

4 - பாயிண்ட் 11 இல் நீங்கள் SEBI இல் சேர்ந்தபோது இரண்டு ஆலோசனை நிறுவனங்களும் செயலற்றதாகிவிட்டன என்று கூறுகிறீர்கள். ஆனால் பாயிண்ட் 12 இல் தவால் அந்த நிறுவனங்களைப் பயன்படுத்தினார் என்று கூறுகிறீர்கள். அந்த நிறுவனங்களுக்கு வணிகம் செய்யும் அனைத்து நபர்களின் பட்டியலையும் வெளியிடவும்.

5 - நீங்கள் GDOF இல் ஒரு பங்கேற்பாளர் என்று உச்ச நீதிமன்றக் குழுவிடம் தெரிவித்தீர்களா? இதை யாரிடம் சொன்னீர்கள் என்று நீங்கள் இன்னும் பதிலளிக்கவில்லை.

6- கௌதம் அதானியை செபி தலைவராக இருமுறை சந்தித்ததன் அஜெண்டா என்ன? பிளாக்ஸ்டோனுடன் உங்கள் கணவரின் பணிநீக்கம் அவர்களைத் திரும்பப்பெறும் பட்டியலில் சேர்த்தால், அவர் இன்னும் எத்தனை பேரைக் கலந்தாலோசித்தார்?

7. FPI களைக் கையாள்வதில் நல்ல அனுபவத்துடன் விவரங்களைப் பெறுவதில் கில்லாடியான நீங்கள் எப்படி "வெறும் படத்தை வரைகிறீர்கள்"?

இது ஒரு நகைச்சுவை. வரும் நாட்களில் இந்த விஷயங்களை வரைவதற்கு சம்திஜியை விட சிறந்த வழக்கறிஞர் உங்களுக்கு கிடைப்பார் என்று நம்புகிறேன்." எனத் தெரிவித்துள்ளார்.

திரிணாமுல் காங்கிரஸ் மூத்த தலைவர் சுகேந்து சேகர் ரே கூறுகையில், "செபி தலைவர் உடனடியாக சஸ்பெண்ட் செய்யப்பட வேண்டும், மேலும் அவரும் அவரது கணவரும் நாட்டை விட்டு வெளியேறுவதைத் தடுக்க அனைத்து விமான நிலையங்களுக்கும் லுக்அவுட் நோட்டீஸ் அனுப்பப்பட வேண்டும்" என வலியுறுத்தி உள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+