மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி என்னை தாக்க முயன்றார்'..திரிணாமுல் காங். எம்.பி பரபர குற்றச்சாட்டு
டெல்லி: நாடாளுமன்றத்தில் மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி தன்னை தாக்க முயன்றதாக திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி சாந்தனு சென் குற்றம்சாட்டி உள்ளார்.நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் நடந்து வருகிறது.
ஆனால் பெகாசஸ் ஸ்பைவேர் பிரச்சினையை கையில் எடுத்துக் கொண்டுள்ள எதிர்கட்சிகள் தினமும் நாடாளுமன்றத்தின் இரு அவைகளையும் முடக்கி வருகின்றன.
இன்று மூன்றாவது நாளாக நாடாளுமன்றத்தில் பெகாசஸ் விவகாரம் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளை வைத்து எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டன.

கடும் அமளி
இந்த கடும் அமளிக்கு மத்தியில் மாநிலங்களவையில் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் அஷ்வின் வைஷ்ணவ் பெகாசஸ் விவகாரம் குறித்து விளக்கம் அளித்து பேசிக் கொண்டார். ஆனால் அவரை பேச விடாமல் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தொடர்ந்து கூச்சல் எழுப்பிக் கொண்டு இருந்தனர். ஒரு கட்டத்தில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அமைச்சர் அஷ்வின் வைஷ்ணவ்வை பேச விடாமல் செய்தனர்.

பேப்பரை பிடுங்கினார்
திரிணாமுல் காங்கிரஸ் எம்பி சாந்தனு சென் திடீரென அமைச்சர் அஷ்வின் வைஷ்ணவ் வைத்திருந்த பேப்பரை பிடுங்கி கிழித்து எறிந்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த அமைச்சர் அஷ்வின் வைஷ்ணவ் தனது உரையை முடித்துக் கொண்டார். திரிணாமுல் காங்கிரஸ் எம்பி சாந்தனுவின் செயலுக்கு பாஜக உறுப்பினர்கள் கடும் கண்டனம் தெரிவித்தனர்.

கடும் எதிர்ப்பு
மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் பூரியூம் திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி,க்கு எதிர்ப்பு தெரிவித்தார். இதனால் சாந்தனு சென்னுக்கும், ஹர்தீப் சிங் பூரிக்கும் இடையே கடும் வாக்குவாதம் மூண்டது. இந்த நிலையில் மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி தன்னை தாக்க முயன்றதாக திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி சாந்தனு சென் பரபரப்பு குற்றம்சாட்டி உள்ளார்.

தாக்க முயன்றார்
இது தொடர்பாக நிருபர்களிடம் பேட்டியளித்த அவர் கூறியதாவது:- அவை ஒத்திவைக்கப்பட்ட பின்னர், ஹர்தீப் சிங் பூரி திடீரென்று என்னை மிகவும் மோசமான முறையில் அழைத்தார். நானும் அவரது அருகில் சென்றேன் ஆனால் அவர் என்னை அச்சுறுத்தத் தொடங்கினார். திடீரென என்னை தாக்குவதற்கு முயற்சி செய்தார். உடல் ரீதியாக அவர் என்னைத் தாக்கப் போகிறார் என்பதை நான் அறிந்தேன்.

கடவுளுக்கு நன்றி
நல்லவேளையாக சக எம்.பி.க்கள் இதனை கவனித்து ஹர்தீப் சிங் பூரியிடம் இருந்து என்னை மீட்டனர். கடவுளுக்கு நன்றி. இந்த சம்பவம் முற்றிலும் துரதிர்ஷ்டவசமானது என்று சாந்தனு சென் கூறினார். இந்த விவகாரம் தொடர்பாக துணை சபாநாயகர் ஹரிவன்சிடம் சாந்தனு சென் மற்றும் திரிணாமுல் காங்கிரஸ் புகார் அளித்துள்ளது.
-
Sonia Gandhi: சோனியா காந்தி மருத்துவமனையில் திடீர் அனுமதி.. ஹாஸ்பிடலுக்கு விரைந்த ராகுல், பிரியங்கா! -
நமக்கு புடிச்சவங்க, வாழ்க்கையை விட்டு போயிடுவாங்கன்னு தெரிஞ்சும்.. உருக்கமாக திரிஷா வெளியிட்ட வீடியோ! -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்!












Click it and Unblock the Notifications