மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி என்னை தாக்க முயன்றார்'..திரிணாமுல் காங். எம்.பி பரபர குற்றச்சாட்டு
டெல்லி: நாடாளுமன்றத்தில் மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி தன்னை தாக்க முயன்றதாக திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி சாந்தனு சென் குற்றம்சாட்டி உள்ளார்.நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் நடந்து வருகிறது.
ஆனால் பெகாசஸ் ஸ்பைவேர் பிரச்சினையை கையில் எடுத்துக் கொண்டுள்ள எதிர்கட்சிகள் தினமும் நாடாளுமன்றத்தின் இரு அவைகளையும் முடக்கி வருகின்றன.
இன்று மூன்றாவது நாளாக நாடாளுமன்றத்தில் பெகாசஸ் விவகாரம் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளை வைத்து எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டன.

கடும் அமளி
இந்த கடும் அமளிக்கு மத்தியில் மாநிலங்களவையில் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் அஷ்வின் வைஷ்ணவ் பெகாசஸ் விவகாரம் குறித்து விளக்கம் அளித்து பேசிக் கொண்டார். ஆனால் அவரை பேச விடாமல் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தொடர்ந்து கூச்சல் எழுப்பிக் கொண்டு இருந்தனர். ஒரு கட்டத்தில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அமைச்சர் அஷ்வின் வைஷ்ணவ்வை பேச விடாமல் செய்தனர்.

பேப்பரை பிடுங்கினார்
திரிணாமுல் காங்கிரஸ் எம்பி சாந்தனு சென் திடீரென அமைச்சர் அஷ்வின் வைஷ்ணவ் வைத்திருந்த பேப்பரை பிடுங்கி கிழித்து எறிந்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த அமைச்சர் அஷ்வின் வைஷ்ணவ் தனது உரையை முடித்துக் கொண்டார். திரிணாமுல் காங்கிரஸ் எம்பி சாந்தனுவின் செயலுக்கு பாஜக உறுப்பினர்கள் கடும் கண்டனம் தெரிவித்தனர்.

கடும் எதிர்ப்பு
மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் பூரியூம் திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி,க்கு எதிர்ப்பு தெரிவித்தார். இதனால் சாந்தனு சென்னுக்கும், ஹர்தீப் சிங் பூரிக்கும் இடையே கடும் வாக்குவாதம் மூண்டது. இந்த நிலையில் மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி தன்னை தாக்க முயன்றதாக திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி சாந்தனு சென் பரபரப்பு குற்றம்சாட்டி உள்ளார்.

தாக்க முயன்றார்
இது தொடர்பாக நிருபர்களிடம் பேட்டியளித்த அவர் கூறியதாவது:- அவை ஒத்திவைக்கப்பட்ட பின்னர், ஹர்தீப் சிங் பூரி திடீரென்று என்னை மிகவும் மோசமான முறையில் அழைத்தார். நானும் அவரது அருகில் சென்றேன் ஆனால் அவர் என்னை அச்சுறுத்தத் தொடங்கினார். திடீரென என்னை தாக்குவதற்கு முயற்சி செய்தார். உடல் ரீதியாக அவர் என்னைத் தாக்கப் போகிறார் என்பதை நான் அறிந்தேன்.

கடவுளுக்கு நன்றி
நல்லவேளையாக சக எம்.பி.க்கள் இதனை கவனித்து ஹர்தீப் சிங் பூரியிடம் இருந்து என்னை மீட்டனர். கடவுளுக்கு நன்றி. இந்த சம்பவம் முற்றிலும் துரதிர்ஷ்டவசமானது என்று சாந்தனு சென் கூறினார். இந்த விவகாரம் தொடர்பாக துணை சபாநாயகர் ஹரிவன்சிடம் சாந்தனு சென் மற்றும் திரிணாமுல் காங்கிரஸ் புகார் அளித்துள்ளது.
-
குடியரசு தலைவர் திரெளபதி முர்முவுடன் முதல்வர் விஜய் சந்திப்பு! காங். தலைவர்களை சந்திப்பாரா? -
விஸ்வரூபம் எடுத்த ஆந்திர விவகாரத்தில் ட்விஸ்ட்.. விஜய்-க்கு நிம்மதி! 'உல்சான்' ஆக மாறும் தூத்துக்குடி -
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய் -
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ!












Click it and Unblock the Notifications