சிக்க போகும் ஆர்.கே.சுரேஷ்! துபாயில் ஆருத்ரா, ஹிஜாவு மோசடியாளர்கள் தலைமறைவு! இன்டர்போலின் பிளான்
டெல்லி: பொருளாதார குற்றப்பிரிவு வழக்குகளில் குற்றம்சாட்டப்பட்டு வெளிநாடுகளில் தலைமறைவாக இருக்கும் ஆருத்ரா உள்ளிட்ட நிதி நிறுவன மோசடிகளில் ஈடுபட்டவர்களை பிடிக்க இன்டர்போல் உதவியை தமிழக காவல் துறை நாடியுள்ளது.
ஆருத்ரா, ஹிஜாவு, ஐஎஃப்எஸ் ஆகிய நிதி நிறுவனங்களில் மக்களை ஏமாற்றி பல லட்சம் கோடி பணம் பறித்துச் சென்ற நிர்வாகிகள் துபாயில் பதுங்கியுள்ளதாக தமிழக காவல் துறைக்கு தகவல் கிடைத்துள்ளது. அவர்கள் மீது பொருளாதார குற்றப்பிரிவு வழக்கு தொடரப்பட்டுள்ளது.

இந்த நிலையில் வெளிநாட்டில் தலைமறைவாக உள்ள மோசடி குற்றம்சாட்டப்பட்ட நிர்வாகிகளை கைது செய்ய தமிழக காவல் துறை இன்டர்போல் உதவியை நாடியுள்ளது. ஏற்கெனவே இரு முறை இன்டர்போல் அதிகாரிகளிடம் துபாய் போலீஸாரிடம் உதவி கேட்டனர்.
இதையடுத்து அந்த நிர்வாகிகளை விரைந்து கைது செய்ய இன்டர்போல் நடவடிக்கை எடுக்கிறது. இந்த வழக்குகளின் தீவிரத்தன்மையை கருத்தில் கொண்டு இன்டர்போல் போலீஸார் சில வழிகாட்டுதல்களை பொருளாதார குற்றப்பிரிவு போலீஸாருக்கு வழங்கியுள்ளார்கள். அதனடிப்படையில் ஆவணங்களை தயாரிக்கும் பணிகளில் பொருளாதார குற்றப்பிரிவு போலீஸார் ஈடுபட்டுள்ளார்கள்.
அந்த ஆவணங்களை துபாய் அரசிடம் கொடுத்து இன்டர்போல் போலீஸாருடன் சென்று மோசடி குற்றம்சாட்டப்பட்டவர்களை பொருளாதார குற்றப்பிரிவு போலீஸார் கைது செய்யும் நடவடிக்கையில் உள்ளனர். ஆருத்ரா மோசடியில் குற்றம்சாட்டப்பட்ட பாஜக நிர்வாகியும் நடிகருமான ஆர்.கே.சுரேஷ், ஹிஜாவு மோசடியில் சிக்கிய ராஜசேகர், மகாலட்சுமி, அலெக்சாண்டர், லட்சுமி நாராயணன், வேத நாராயணன், ஜனார்த்தனன் உள்ளிட்டோர் 3 முக்கிய வழக்குகளில் தலைமறைவாக இருப்போரை பிடிக்க முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன.
இவர்களுக்கு எதிராக லுக் அவுட் நோட்டீஸும் வழங்கப்பட்டிருந்தது. மேலும் இன்டர்போல் மூலம் துபாய் நாட்டு அரசுடன் போடப்பட்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில் இரு முறை கடிதங்களும் அனுப்பப்பட்டுள்ளன. இதையடுத்து அவர்களை பிடிக்க இன்டர்போல் அடுத்த கட்ட நடவடிக்கைகளில் இறங்கியிருக்கிறது.
ஏற்கெனவே இரு முறை கடிதங்களை எழுதியிருந்தாலும் அதில் முழுமையான விவரங்களை பொருளாதார குற்றப்பிரிவு போலீஸார் வழங்கவில்லை என தெரிகிறது. இந்த வழக்குகளில் குற்றம்சாட்டப்பட்டவர்கள் மோசடி பணத்தில் எவ்வளவு சொத்துகளை கொள்ளையடித்து வாங்கியுள்ளார்கள், எத்தனை பேரை ஏமாத்தியுள்ளார்கள் போன்ற விவரங்களை இன்டர்போல் கேட்டுள்ளது.
இந்த ஆவணங்கள் எல்லாம் கிடைக்கப்பெற்றவுடன் வழக்கின் தீவிரத்தன்மையை துபாய் நாட்டு அரசிடம் கூறி குற்றம்சாட்டப்பட்டவர்களை கைது செய்ய இன்டர்போல் போலீஸார் திட்டமிட்டுள்ளனர். விரைவில் இவர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டு அவர்களிடம் இருந்து பணத்தை பெற்று பாதிக்கப்பட்டவர்களுக்கு திருப்பி கொடுக்கும் நடவடிக்கை எடுக்கப்படும் என பொருளாதார குற்றப்பிரிவு போலீஸார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
பவரை காட்டுவோம்! மொத்த உலக நாடுகளையும் பீதியில் ஆழ்த்திய டிரம்ப் சொன்ன வார்த்தை! பெருசா நடக்க போகுது -
சர்ருன்னு ஏறிய பாஜக சீட் கணக்கு.. கடந்த தேர்தல்களில் பாஜக போட்டியிட்ட தொகுதிகள் எத்தனை?












Click it and Unblock the Notifications