Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சிக்க போகும் ஆர்.கே.சுரேஷ்! துபாயில் ஆருத்ரா, ஹிஜாவு மோசடியாளர்கள் தலைமறைவு! இன்டர்போலின் பிளான்

Subscribe to Oneindia Tamil

டெல்லி: பொருளாதார குற்றப்பிரிவு வழக்குகளில் குற்றம்சாட்டப்பட்டு வெளிநாடுகளில் தலைமறைவாக இருக்கும் ஆருத்ரா உள்ளிட்ட நிதி நிறுவன மோசடிகளில் ஈடுபட்டவர்களை பிடிக்க இன்டர்போல் உதவியை தமிழக காவல் துறை நாடியுள்ளது.

ஆருத்ரா, ஹிஜாவு, ஐஎஃப்எஸ் ஆகிய நிதி நிறுவனங்களில் மக்களை ஏமாற்றி பல லட்சம் கோடி பணம் பறித்துச் சென்ற நிர்வாகிகள் துபாயில் பதுங்கியுள்ளதாக தமிழக காவல் துறைக்கு தகவல் கிடைத்துள்ளது. அவர்கள் மீது பொருளாதார குற்றப்பிரிவு வழக்கு தொடரப்பட்டுள்ளது.

TN police approaches Interpol to arrest Aarudhra, Hijav accused from Dubai

இந்த நிலையில் வெளிநாட்டில் தலைமறைவாக உள்ள மோசடி குற்றம்சாட்டப்பட்ட நிர்வாகிகளை கைது செய்ய தமிழக காவல் துறை இன்டர்போல் உதவியை நாடியுள்ளது. ஏற்கெனவே இரு முறை இன்டர்போல் அதிகாரிகளிடம் துபாய் போலீஸாரிடம் உதவி கேட்டனர்.

இதையடுத்து அந்த நிர்வாகிகளை விரைந்து கைது செய்ய இன்டர்போல் நடவடிக்கை எடுக்கிறது. இந்த வழக்குகளின் தீவிரத்தன்மையை கருத்தில் கொண்டு இன்டர்போல் போலீஸார் சில வழிகாட்டுதல்களை பொருளாதார குற்றப்பிரிவு போலீஸாருக்கு வழங்கியுள்ளார்கள். அதனடிப்படையில் ஆவணங்களை தயாரிக்கும் பணிகளில் பொருளாதார குற்றப்பிரிவு போலீஸார் ஈடுபட்டுள்ளார்கள்.

அந்த ஆவணங்களை துபாய் அரசிடம் கொடுத்து இன்டர்போல் போலீஸாருடன் சென்று மோசடி குற்றம்சாட்டப்பட்டவர்களை பொருளாதார குற்றப்பிரிவு போலீஸார் கைது செய்யும் நடவடிக்கையில் உள்ளனர். ஆருத்ரா மோசடியில் குற்றம்சாட்டப்பட்ட பாஜக நிர்வாகியும் நடிகருமான ஆர்.கே.சுரேஷ், ஹிஜாவு மோசடியில் சிக்கிய ராஜசேகர், மகாலட்சுமி, அலெக்சாண்டர், லட்சுமி நாராயணன், வேத நாராயணன், ஜனார்த்தனன் உள்ளிட்டோர் 3 முக்கிய வழக்குகளில் தலைமறைவாக இருப்போரை பிடிக்க முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன.

இவர்களுக்கு எதிராக லுக் அவுட் நோட்டீஸும் வழங்கப்பட்டிருந்தது. மேலும் இன்டர்போல் மூலம் துபாய் நாட்டு அரசுடன் போடப்பட்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில் இரு முறை கடிதங்களும் அனுப்பப்பட்டுள்ளன. இதையடுத்து அவர்களை பிடிக்க இன்டர்போல் அடுத்த கட்ட நடவடிக்கைகளில் இறங்கியிருக்கிறது.

ஏற்கெனவே இரு முறை கடிதங்களை எழுதியிருந்தாலும் அதில் முழுமையான விவரங்களை பொருளாதார குற்றப்பிரிவு போலீஸார் வழங்கவில்லை என தெரிகிறது. இந்த வழக்குகளில் குற்றம்சாட்டப்பட்டவர்கள் மோசடி பணத்தில் எவ்வளவு சொத்துகளை கொள்ளையடித்து வாங்கியுள்ளார்கள், எத்தனை பேரை ஏமாத்தியுள்ளார்கள் போன்ற விவரங்களை இன்டர்போல் கேட்டுள்ளது.

இந்த ஆவணங்கள் எல்லாம் கிடைக்கப்பெற்றவுடன் வழக்கின் தீவிரத்தன்மையை துபாய் நாட்டு அரசிடம் கூறி குற்றம்சாட்டப்பட்டவர்களை கைது செய்ய இன்டர்போல் போலீஸார் திட்டமிட்டுள்ளனர். விரைவில் இவர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டு அவர்களிடம் இருந்து பணத்தை பெற்று பாதிக்கப்பட்டவர்களுக்கு திருப்பி கொடுக்கும் நடவடிக்கை எடுக்கப்படும் என பொருளாதார குற்றப்பிரிவு போலீஸார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+