அயோத்தி நில வழக்கில் நாளையே இறுதி விசாரணை- உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் 'கறார்'
Recommended Video
டெல்லி: சர்ச்சைக்குரிய அயோத்தி நிலம் தொடர்பான வழக்கில் நாளைதான் இறுதி விசாரணை என உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
அயோத்தியில் பாபர் மசூதி இடிக்கப்பட்ட இடம் தொடர்பான வழக்கு அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இவ்வழக்கில் 2010-ல் தீர்ப்பளித்த அலகாபாத் உயர்நீதிமன்றம், சர்ச்சைக்குரிய நிலத்தை நிர்மோனி அகாடா, சன்னி வக்ஃபு வாரியம், ராம் லல்லா ஆகியவை சரிசமமாக பங்கீட்ட்டுக் கொள்ள தீர்ப்பளித்தது.

இத்தீர்ப்புக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. உச்சநீதிமன்றம் முதலில் மத்தியஸ்த குழு ஒன்றை அமைத்து பேச்சுவார்த்தை நடத்த உத்தரவிட்டது.
ஆனால் மத்தியஸ்த குழுவால் பேச்சுவார்த்தை மூலம் சமரசத்தை ஏற்படுத்த முடியவில்லை. இதையடுத்து தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன பெஞ்ச் இவ்வழக்கை விசாரித்தது.
ஆகஸ்ட் மாதம் முதல் நாள்தோறும் இவ்வழக்கில் விசாரணை நடைபெற்று வந்தது. இன்று 39-வது நாளாக விசாரணை நடைபெற்றது. அப்போது, இவ்வழக்கில் நாளை 40-வது நாள் விசாரணை. அதுவே இறுதியான விசாரணை என திட்டவட்டமாக தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தெரிவித்தார்.
நாளைக்குள் அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடையும். நாடு எதிர்பார்க்கும் இவ்வழக்கின் தீர்ப்பு அடுத்த மாதம் வழங்கப்படலாம்.
-
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய் -
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா?












Click it and Unblock the Notifications