இந்தியாவில் இயல்பு நிலைத் தொடர இரு விஷயங்கள் தேவை.. முன்னணி விஞ்ஞானி சொல்வதை கேளுங்கள்!
டெல்லி: கொரோனா வைரஸ் லாக்டவுனிலிருந்து இந்தியா விரைவில் விடுபட வேண்டுமானால் இந்த இரு யுத்திகளை கையாள வேண்டும் என உலகின் முன்னணி வைராலஜிஸ்ட் இயான் லிப்கின் அறிவுறுத்தியுள்ளார்.
Recommended Video
கொரோனாவால் இந்தியாவில் 40 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த நேரத்தில் மக்கள் தங்கள் வாழ்வாதாரங்களை தொலைத்துவிட்டு உணவுக்கு வழியில்லாமல் இருப்பதால் இந்த லாக்டவுனிலிருந்து இந்தியா எப்போது விடுபடும் என்ற கேள்வி எழுந்துள்ளது.

உலக நாடுகள்
இதுகுறித்து முன்னணி வைராலஜிஸ்ட் இயான் லிப்கின் இந்தியா டுடேவுக்கு கூறுகையில் சோதனைகளை அதிகப்படுத்தி, தனிமைப்படுத்திக் கொண்டாலும் பாதிப்பை கட்டுப்படுத்தலாம் என அறிவியல் கூறுகிறது. கொரோனா வைரஸை கட்டுப்படுத்தவும் சரியான தகவல்களை வழங்கவும் போராடும் விஞ்ஞானிகளின் பேச்சை இந்த உலக நாடுகள் கேட்க வேண்டும்.

இயல்பு
எனக்கு இந்தியா என்றால் மிகவும் பிடிக்கும். ஆனால் இந்திய மக்களோ அரசுக்கு எதிராக செயல்பட தொடங்கிவிட்டது. உணவு மற்றும் வாழ்வாதாரத்திற்காக வெளியே வரத் தொடங்கிவிட்டது. அவர்களுக்காக இந்திய அரசு ஒரு வழியை கண்டுபிடிக்க வேண்டும். அப்போதுதான் லாக்டவுன் நேரத்திலும் அவர்களால் இயல்பான வாழ்க்கையை வாழ முடியும்.

வாழ்வாதாரம்
ஒரு தடுப்பூசி கண்டுபிடிக்கும் வரை நாம் இவற்றையெல்லாம் கட்டுப்படுத்தித் தான் ஆக வேண்டும். இந்தியாவில் எத்தனை நாட்களுக்கு லாக்டவுன் அமலில் இருக்க வேண்டும் என்பதற்காக காலம் நிர்ணயிக்க முடியாது. ஆனால் நிறைய பேருக்கு தீவிரமாக கொரோனா சோதனை செய்வது கிளஸ்டர்களை தனிமைப்படுத்துவதில் கவனம் செலுத்துவது உள்ளிட்டவற்றை செய்தால் அந்நாட்டின் மற்ற குடிமகன்கள் சில கட்டுப்பாடுகளுடன் தங்கள் வாழ்வாதாரத்தை தொடங்கிவிட முடியும்.

சோதனை
பாதுகாப்பு மற்றும் சோதனை கருவிகளை தயாரிக்க பயோடெக் தொழிற்சாலையை ஊக்குவிக்க வேண்டியது அவசியம். பெரிய பொது நிகழ்ச்சிகள், விளையாட்டு நிகழ்ச்சிகள், தியேட்டர்கள், சினிமாவுக்கு செல்வது ஆகியவை தடை செய்ய வேண்டும். சமூக விலகல் உள்ளிட்டவற்றை கடைப்பிடித்தால் மட்டுமே குறைந்தபட்சம் மக்கள் தங்கள் பணிகளுக்காக செல்லலாம் என்றார்.












Click it and Unblock the Notifications