திரிணாமுல் காங்கிரஸ் மூத்த தலைவர் முகுல் ராய் டெல்லியில் திடீர் மாயம்- மகன் புகாரால் பரபர
டெல்லி: திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரான முகுல் ராய் டெல்லியில் திடீரென மாயமாகிவிட்டார் என அவரது மகன் கூறியிருக்கும் புகார் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மேற்கு வங்க மாநில மூத்த அரசியல் தலைவர்களில் ஒருவர் முகுல் ராய். டெல்லி சென்ற முகுல் ராய் காணவில்லை என அவரது மகன் Subhargshu Roy கூறியிருக்கிறார். கொல்கத்தாவில் இருந்து டெல்லிக்கு GE-898 என்ற இண்டிகோ விமானத்தில் முகுல் ராய் சென்றார். இந்த விமானம் நேற்று இரவு 9.55 மணிக்கு டெல்லியை சென்றடைந்தது. ஆனால் அதன் பின்னர் முகுல் ராயை தொடர்பு கொள்ள முடியவில்லை என்பது Subhargshu Roy புகார்.

இருப்பினும் இது தொடர்பாக விமான நிலைய போலீசாரிடம் புகார் எதுவும் தரப்படவில்லை எனவும் கூறப்படுகிறது. முகுல் ராய், திரிணாமுல் காங்கிரஸில் மமதா பானர்ஜிக்கு அடுத்த தலைவராக இருந்தார். 2017-ம் ஆண்டு திரிணாமுல் காங்கிரஸுக்கு குட்பை சொல்லிவிட்டு பாஜகவில் இணைந்தார். பாஜகவின் தேசிய துணைத் தலைவராகவும் பதவி பெற்றார் முகுல் ராய்.
2019-ம் ஆண்டு லோக்சபா தேர்தலில் மேற்கு வங்கத்தில் பாஜக 18 இடங்களைக் கைப்பற்றுவதற்கு முகுல் ராய் முக்கிய காரணமாக இருந்தார். 2021-ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் போட்டியிட்டு வென்றார். ஆனால் திடீரென மமதா பானர்ஜியின் தலைமையை ஏற்று திரிணாமுல் காங்கிரஸில் இணைந்தார் முகுல் ராய்.
அவரது மனைவியின் மரணத்துக்குப் பின் உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார் முகுல் ராய். அவருக்கும் மகனுக்கும் இடையே சொத்து விவகாரங்களில் பிரச்சனை இருந்ததாகவும் கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications