முத்தலாக் மசோதா எப்படி நிறைவேறியது.. யாரெல்லாம் ஆதரவு, எதிர்ப்பு.. கடைசியில் நிகழ்ந்த டிவிஸ்ட்!
முத்தலாக் தடை சட்ட மசோதா தற்போது ராஜ்யசபாவில் தாக்கல் செய்யப்பட்டு வாக்கெடுப்பு நடந்து வருகிறது.
Recommended Video
டெல்லி: முத்தலாக் தடை சட்ட மசோதா தற்போது ராஜ்யசபாவில் தாக்கல் வெற்றிபெற்றுள்ளது. இந்த முத்தலாக் தடை சட்ட மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து அதிமுக, பகுஜன் சமாஜ், தெலுங்கு தேசமும் உள்ளிட்ட கட்சிகள் வெளிநடப்பு செய்துள்ளது.
கடந்த வாரம் லோக்சபாவில் மீண்டும் முத்தலாக் தடை சட்ட மசோதாவை பாஜக தாக்கல் செய்தது. இது லோக்சபாவிலும் வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டது. ராஜ்யசபாவில் இந்த மசோதா நிறைவேற்றப்பட வேண்டும் என்ற நிலையில் இன்று ராஜ்யசபாவில் இந்த மசோதா தாக்கல் செய்யப்பட்டது.
இதன் மீதான வாக்கெடுப்பு தற்போது நடந்து முடிந்துள்ளது.முத்தலாக் தடை சட்ட மசோதா தற்போது ராஜ்யசபாவில் வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டு இருக்கிறது.

எத்தனை பேர்
இந்த மசோதாவிற்கு 99 எம்பிக்கள் ஆதரவு அளித்தனர். 84 எம்பிக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்த மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து ஏற்கனவே அதிமுக எம்பிக்கள் வெளியேறினர். இதே போல் முக்கிய கட்சியை சேர்ந்த எம்பிக்கள் எல்லோரும் வெளிநடப்பு செய்தனர்.

என்ன பலம்
ஐந்து காலியிடங்கள் போக தற்போது ராஜ்யசபாவில் பலம் மொத்தம் 240 எம்பிக்கள். இங்கு மசோதா நிறைவேற வேண்டும் என்றால் 121 எம்பிக்கள் பலம் வேண்டும். பாஜகவின் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு 110 எம்பிக்கள் பலம் இருக்கிறது.

எதிர்ப்பு கட்சிகள்
இந்த மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்த கட்சிகள்:
திமுக
காங்கிரஸ்
திரிணாமுல் காங்கிரஸ்
தெலுங்கு தேசம் கட்சி
தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி
பகுஜன் சமாஜ்
சமாஜ்வாதி
ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி
அதிமுக

ஆதரவு கட்சிகள்
இந்த மசோதாவிற்கு ஆதரவு தெரிவித்த கட்சிகள்:
பாஜக
பாஜகவின் தேசிய ஜனநாயக கூட்டணியில் உள்ள ஐக்கிய ஜனதா தளம் மற்றும் அதிமுக தவிர மற்ற கட்சிகள் அனைத்தும் ஆதரவு.

யார் இல்லை
எதிர்ப்பு தெரிவித்துவிட்டு வாக்களிக்காத கட்சிகள்:
தெலுங்கு தேசம் கட்சி - 2 எம்பிக்கள்
தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி -6 எம்பிக்கள்
பகுஜன் சமாஜ் - 4 எம்பிக்கள்
ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி - 1 எம்பி
அதிமுக - 11 எம்பிக்கள்
ஐக்கிய ஜனதா தளம் - 6 எம்பிக்கள்
மொத்தம் வெளிநடப்பு - 30

கணக்கு
இதனால் இந்த மசோதாவிற்கு ஆதரவாக 99 வாக்குகள், எதிராக 84 வாக்குகள், வெளிநடப்பு 30 பேர் என்பதால் மசோதா நிறைவேறியது. இதன் மூலம் முத்தலாக் தடை சட்டம் அதிகாரப்பூர்வமாக அமலுக்கு வந்துள்ளது.

கடைசி நேரம்
இந்த முக்கிய எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு செய்துள்ளதால் ராஜ்யசபாவில் மசோதா நிறைவேறியது. இந்த எதிர்ப்பு தெரிவித்த கட்சிகள் எல்லாம் வாக்கெடுப்பில் கலந்து கொண்டு எதிர்த்து வாக்களித்து இருந்தால் மசோதா தோல்வி அடைந்து இருக்கும். ஆனால் இவர்கள் வெளிநடப்பு செய்ததால் மசோதா வெற்றிபெற்றது.
-
ஜோதிடர் சொன்ன வார்த்தை? நயினார் நாகேந்திரன் நெல்லை தொகுதியில் போட்டியிடாதது ஏன்? பரபரப்பு தகவல் -
கிணத்துக்கடவு தொகுதியை பாஜகவுக்கு ஒதுக்காததால் தொண்டர் பெட்ரோல் ஊற்றி தீக்குளிக்க முயற்சி.. பரபரப்பு -
வேட்பாளர் அறிவிப்பு இருக்கட்டும்.. இப்படி ஏன் செஞ்சீங்க? எடப்பாடி பழனிசாமி மீது கொந்தளித்த ரரக்கள்! -
கோவை வடக்கில் அண்ணாமலை.. வானதி சீனிவாசனுக்கு பதில் களம் இறங்க போகிறாரா? -
கோவையை விடுங்க.. மொத்தமாகவே ஏமாந்த பாஜக! அதிமுக மீது உச்சகட்ட அதிருப்தியில் அண்ணாமலை -
அண்ணாமலைக்கு சீட் கொடுக்க கூடாது.. எடப்பாடி எடுத்த முடிவு.. பாஜக தொகுதி பங்கீட்டில் என்ன நடந்தது? -
அண்ணாமலை சட்டமன்றம் செல்ல வேண்டும்.. அதுவே என் விருப்பம்.. வானதி சீனிவாசன் சொன்ன வார்த்தை! -
தேர்தல் நேரத்தில் கிளம்பிய பூதம்.. ரூ.4 கோடி பிடிபட்ட வழக்கில் நயினார் நாகேந்திரனை ED விசாரிக்க மனு! -
பலே ஆளுங்க எடப்பாடி பழனிசாமி.. பாஜகவின் 27 தொகுதிகளில் இப்படி ஒரு ட்விஸ்டா! பாவம் ஜிகே வாசன்? -
அதிமுக வேட்பாளர்கள் யார்? 146 வேட்பாளர்களை எப்போது அறிவிப்பார் எடப்பாடி! உச்சகட்ட டென்ஷனில் ர.ர.கள்! -
குமரியில் காலியாகும் அதிமுகவின் அடித்தளம்.. 4 தொகுதிகளை கைப்பற்றிய பாஜக.. சோர்வடைந்த தொண்டர்கள்! -
பாஜகவுக்கு பல்ப் கொடுத்த எடப்பாடி.. வெயிட்டான தொகுதிகளை வச்சுகிட்டாரே! எந்தெந்த தொகுதிகளில் போட்டி?












Click it and Unblock the Notifications