மீண்டும் மீண்டுமா? இந்தியா-பாக் போர் நிறுத்தத்திற்கு உரிமை கோரிய டிரம்ப்! ஈரான் போரை நிறுத்தனுமாம்
வாஷிங்டன்: இந்தியா-பாகிஸ்தான் போர் நிறுத்தத்திற்கும், அமெரிக்காவுக்கும் தொடர்பில்லை என்று மத்திய அரசு அதிகாரிகள் கூறி வரும் நிலையில், டிரம்ப் நான்தான் போரை நிறுத்தினேன் என்று மீண்டும் உரிமை கோரியுள்ளார். அதேபோல ஈரான்-இஸ்ரேல் தலைவர்களும் போரை நிறுத்த வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.
இது குறித்து தனது ட்ரூத் சோஷியல் மீடியாவில் பதிவிட்டுள்ளதாவது, "ஈரானும் இஸ்ரேலும் போர் நிறுத்த ஒப்பந்தத்தை போட வேண்டும். நிச்சயம் அவர்கள் செய்வார்கள். இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே நான் வர்த்தகத்தைப் பயன்படுத்தி, பேச்சுவார்த்தை மூலம் ஒற்றுமையை கொண்டுவந்து, இரு சிறந்த தலைவர்களையும் கொண்டு விரைவாக முடிவெடுக்க வைத்து சண்டையை நிறுத்தியது போல.. ஈரானும்-இஸ்ரேல் தலைவர்களும் போரை நிறுத்துவார்கள்.

எனது முதல் பதவிக்காலத்தின்போது, செர்பியாவும் கொசோவோவும் தீவிரமாக சண்டையிட்டுக் கொண்டிருந்தன. இந்த நீண்டகால போராக வெடிக்கத் தயாராக இருந்தது. நான் அதை நிறுத்தினேன். மற்றொரு உதாரணம் எகிப்தும் எத்தியோப்பாவும். மிகப்பெரிய அணை தொடர்பான அவர்களது சண்டை, நைல் நதியைப் பாதித்திருந்தது. என்னுடைய தலையீட்டால், இப்போதைக்கு அமைதி நிலவுகிறது. அது நீடித்திருக்கும்!
அதேபோல, இஸ்ரேலுக்கும் ஈரானுக்கும் இடையே விரைவில் அமைதி வரும்! பல பேச்சுவார்த்தைகள் இப்போது நடைபெறுகின்றன. நான் நிறைய செய்கிறேன், எதற்கும் எனக்குப் பெருமை கிடைப்பதில்லை, ஆனால் பரவாயில்லை, மக்களுக்குப் புரியும். மத்திய கிழக்கை மீண்டும் சிறப்பாக்குவோம்" என்று தெரிவித்திருக்கிறார்.
ஆனால், டிரம்ப் உருட்டுவாதாக பலரும் கூறுகின்றனர். அவ்வளவு ஏன், டிரம்ப்பின் நெருங்கிய நண்பராக அறியப்படும் பிரதமர் நரேந்திர மோடி கூட, இந்தியா-பாக் போர் நிறுத்தத்தில் அமெரிக்காவின் பங்கு இருப்பதை ஒப்புக்கொள்ளவில்லை. மத்திய அரசு அதிகாரிகள், டிரம்ப்பின் கூற்றை நிராகரித்து வருகிறார்கள். இருப்பினும், மீண்டும் மீண்டும் டிரம்ப் போர் நிறுத்தத்திற்கு தொடர்ந்து உரிமை கோரி வருகிறார். மத்திய அரசும் வெளிப்படையாக இதை மறுக்காமல் இலை மறை காயாக கருத்து தெரிவித்து வருகிறது.
இந்நிலையில் டிரம்பின் பதிவு சோஷியல் மீடியாக்களில விவாதங்களை எழுப்பியுள்ளது. எதிர்க்கட்சியினர், டிரம்ப்பின் கருத்தை மேற்கோள் காட்டி, இதற்கு மத்திய அரசு என்ன பதில் சொல்கிறது? என்று குடைந்து வருகிறார்கள். பாஜகவினரோ, என்னென்னவோ சொல்லி பார்க்கிறார்கள். ஆனால், ஒன்றும் வேலைக்கு ஆகவில்லை. இனியாவது மத்திய அரசு வெளிப்படையாக, 'இந்தியா-பாக்' போர் நிறுத்தத்தில் டிரம்ப்புக்கோ, அமெரிக்காவுக்கோ சம்பந்தம் இல்லை என்று சொல்லுமா? என்கிற கேள்வி எழுந்திருக்கிறது.
-
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
பேசியது 15 நிமிடம்.. காத்திருந்தது 2 மணி நேரம்! அமித்ஷாவை சந்திக்க ஹோட்டலில் காத்துக்கிடந்த எடப்பாடி -
ஆட்டத்தை ஆரம்பிச்சிட்டாரு அமித் ஷா.. எடப்பாடி பழனிசாமிக்கு 165 சீட் தானா? லீக்கானது உத்தேச பட்டியல் -
மிஷன் இம்பாசிபிள்.. $400 பில்லியன் 'சூப்பர்மேன்' விமானத்தை வீழ்த்திய.. ஈரானின் சின்ன ஹீட் சென்சார் -
அமெரிக்காவால் ஈரானுக்கு தங்க புதையல்.. ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல்களுக்கு டோல்கேட்.. பெரிய திட்டம் -
கண்ட்ரோல் எடுத்த அமித் ஷா.. பவர் போன எடப்பாடி.. இனி டெல்லி தர்பார்.. அதிமுகவின் பிடி நழுவுகிறது? -
Magaram: சிகரத்தில் ஏறப்போகும் மகர ராசியினர்.. எதிர்பாராத அதிர்ஷ்டம் காத்திருக்கு -
என்னது தனித்து போட்டியா? உங்க சீட்டே வேண்டாம்.. விஜய் முடிவால் தெறித்து ஓடும் தவெக நிர்வாகிகள் -
1 மணி ஃப்ளைட்.. இரவே வீடியோ கால்.. தாமரையில் போட்டியிடுங்க.. டிடிவி, அன்புமணிக்கு அமித் ஷா செக்? -
மணிக்கணக்கில் வெயிட்டிங்.. இரவில் எடப்பாடி கே.பழனிசாமியை அதிர வைத்த அமித் ஷாவின் உளவுத்துறை அறிக்கை -
6 + 1 முடிந்த டீல்? திமுக கூட்டணியில் விசிகவுக்கு எத்தனை தொகுதி? திருமாவை சமாதானம் செய்த ஸ்டாலின் -
ஒரு தொகுதிக்கு ஒருவர்.. புஸ்ஸி ஆனந்த் பரிந்துரை கட்டாயம்.. விஜய் செய்யும் புது வகையான நேர்காணல்!












Click it and Unblock the Notifications