Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கரூர் சம்பவம்.. சிபிஐ விசாரணைக்காக டெல்லி புறப்பட்டார் தவெக தலைவர் விஜய்

Subscribe to Oneindia Tamil

டெல்லி: கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி பலர் உயிரிழந்த சம்பவம் தொடர்பான வழக்கில் விஜய் ஏற்கனவே இரண்டு முறை சிபிஐ விசாரணைக்கு ஆஜராகியுள்ளார். டெல்லியில் நாளை மீண்டும் விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என்று சிபிஐ சம்மன் அனுப்பியிருந்த நிலையில், ஒருநாள் முன்னதாகவே தனி விமானத்தில் தவெக தலைவர் விஜய் டெல்லிக்கு புறப்பட்டார்.

தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜயின் பிரசாரக் கூட்டம் கடந்த ஆண்டு செப்டம்பர் 27 ஆம் தேதி கரூரில் நடைபெற்றது. அப்போது, கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பலியான சம்பவம் நாடு முழுவதும் கடும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இந்த வழக்கை சிபிஐ விசாரணை நடத்தி வருகிறது. இந்த வழக்கின் விசாரணைக்காக கடந்த டிசம்பர் மாதத்தின் இறுதியில் தவெக பொதுச் செயலாளர் ஆனந்த், தேர்தல் பிரசார மேலாண்மை பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜூனா, இணைப் பொதுச் செயலாளர் சிடிஆர் நிர்மல் குமார், கரூர் மாவட்டச் செயலாளர் மதியழகன் ஆகியோர் டெல்லியில் உள்ள சிபி அலுவலகத்தில் விசாரணைக்காக நேரில் ஆஜராகினர்.

TVK Vijay CBI Investigation

அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டது. இந்நிலையில், கரூர் சம்பவம் தொடர்பான விசாரணைக்கு ஆஜராகும்படி விஜய்க்கு 2 முறை சிபிஐ சார்பில் சம்மன் அனுப்பப்பட்டது. கடந்த ஜனவரி 12, 19 ஆம் தேதி டெல்லியில் சிபிஐ அலுவலகத்தில் விசாரணைக்கு விஜய் நேரில் ஆஜராகினார். அவரிடம் தொடர்ந்து பல மணி நேர விசாரணை நடைபெற்றது.

இந்நிலையில், தவெக தலைவர் விஜய்க்கு சிபிஐ விசாரணைக்கு மார்ச் 10 ஆம் தேதி ஆஜராகும்படி சம்மன் அனுப்பப்பட்டிருந்தது. தவெக சார்பில் விருப்ப மனு தாக்கல் செய்தவர்களிடம் விஜய் நேர்காணல் நடத்தவிருந்த நிலையில், அவர் டெல்லி செல்வில்லை.

சென்னையில் ஆஜராக அனுமதி கோரியதை சிபிஐ நிராகரித்தது. ஏற்கனவே திட்டமிடப்பட்டிருந்த பணிகள் இருப்பதால் விலக்கு அளிக்க வேண்டும் என்று விஜய் சார்பில் கோரிய நிலையில், மார்ச் 15 ஆம் தேதியான நாளை விஜய் மீண்டும் ஆஜராக சிபிஐ புதிய சம்மன் அனுப்பியிருந்தது.

இந்நிலையில், கரூர் கூட்ட நெரிசல் உயிரிழப்பு தொடர்பான வழக்கு விசாரணைக்காக நாளை டெல்லி சிபிஐ அலுவலகத்தில் விஜய் ஆஜராகிறார். இதற்காக ஒருநாள் முன்னதாகவே தற்போது தனி விமானத்தில் டெல்லி புறப்பட்டுள்ளார். அவருடன் நிர்மல் குமார் உள்ளிட்ட 7 பேர் உடன் சென்றுள்ளனர்.

கூட்டணிக்கு பாஜக அழைத்து வரும் நிலையில், விஜயின் இந்த டெல்லி பயணம் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. தொடர்ந்து தவெக தலைவர் விஜயை என்டிஏ கூட்டணிக்குள் கொண்டு வர பாஜக முயற்சித்து வரும் நிலையில், விஜயின் டெல்லி பயணம் முக்கியத்துவம் பெற்றுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+