சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக.. உச்சநீதிமன்றத்தில் உடுமலை சங்கர் குடும்பம் மேல்முறையீடு
டெல்லி: கொலை வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்புக்கு எதிராக, உச்சநீதிமன்றத்தில் உடுமலை சங்கர் குடும்பத்தினர் மேல்முறையீடு செய்துள்ளனர்.
முதல் குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட சின்னசாமி விடுதலை செய்யப்பட்டது மற்றும் 5 பேருக்கான மரண தண்டனை, ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டதற்கு எதிராக முறையீடு செய்யப்பட்டுள்ளளது.
திண்டுக்கல் மாவட்டம், பழனியைச் சேர்ந்த கவுசல்யா, வேறு ஒரு ஜாதியைச் சேர்ந்த சங்கர் என்பவரை கடந்த 2015ம் ஆண்டு திருணம் செய்தார். இதற்கு பெற்றோர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

உடுமலையில் கொலை
இந்நிலையில், கடந்த 2016ம் ஆண்டு மார்ச் மாதம் 13ம் தேதி கவுசல்யாவையும், அவரது கணவர் சங்கரையும், உடுமலைப்பேட்டை பஸ் நிலையத்தின் அருகே பட்டப் பகலில் மூன்று பேர் சேர்ந்து சரமாரியாக வெட்டினர். சங்கர், கவுசல்யா இருவரும் படுகாயமடைந்தனர். சிகிச்சை பலனின்றி சங்கர் உயிரிழந்தார். பலத்த காயங்களுடன் கவுசல்யா உயிர் தப்பினார்.

உடுமலை சங்கர் கொலை வழக்கு
இந்த வழக்கில் கவுசல்யாவின் தந்தை சின்னசாமி உள்ளிட்ட 6 பேருக்கு 2017ம் ஆண்டு டிசம்பரில் திருப்பூர் நீதிமன்றம் மரண தண்டனை விதித்தது. இதை எதித்து அவர்கள் தரப்பில் சென்னை ஹைகோர்ட்டில் மேல்முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் சத்தியநாராயணன் மற்றும் நிர்மல் குமார் அடங்கிய அமர்வு கவுசல்யாவின் தந்தை சின்னசாமியை விடுதலை செய்து உத்தரவிட்டது. 5 பேருக்கு விசாரணை நீதிமன்றம் விதித்த மரண தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைத்து நீதிபதிகள் தீர்ப்பளித்தனர்.

மேல்முறையீடு எதிர்பார்ப்பு
இந்த தீர்ப்பை எதிர்த்து, உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு செய்யும் என்று எதிர்பார்க்கப்பட்டது. அப்படி தாக்கல் செய்தால் தனது தரப்பையும் வழக்கில் இணைத்துக்கொள்வேன் என்று கவுசல்யா பேட்டியளித்திருந்தார்.
Recommended Video

உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு
இந்நிலையில் கொலை செய்யப்பட்ட சங்கரின் சகோதரர் விக்னேஷ்வரன் சார்பில், சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுவை தாக்கல் செய்துள்ளனர். இந்த மனுவை தாக்கல் செய்துள்ளார் வழக்கறிஞர் பிரீதிகா திரிவேதி. அவர் கூறுகையில், உடுமலைப்பேட்டை சங்கரின் கொலை வழக்கில் முதல் குற்றவாளியான சின்னச்சாமியை விடுதலை செய்தும், 5 பேரின் மரண தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைத்தும் சென்னை உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பை எதிர்த்து வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது என்றார்.
-
தாமிரபரணி ஆற்றில் ஜாலியோ ஜாலி.. ட்ரோன் கேமராவில் சிக்கிய நவத்திருப்பதி யானைகள் -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
தனியார் பள்ளிகள் லஞ்சம் தரவேண்டாம்.. அதற்கு பதிலாக.. ராஜ்மோகன் உத்தரவால் வரப்போகும் மாற்றம் -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன்












Click it and Unblock the Notifications