மூணு நாளா கடுமையான பல் வலி... ஆனா ஜெயில்ல ட்ரீட்மென்ட் தரல .. நீதிமன்றத்தில் உமர் காலித் புகார்!
புதுடெல்லி: 3 நாட்கள் கடுமையான பல் வலியால் வேதனையில் தவிப்பதாகவும், ஆனால் சிறை அதிகாரிகள் சிசிக்சை அளிக்க மறுப்பதாகவும் ஜேஎன்யு மாணவர் உமர் காலித் நேற்று நீதிமன்றத்தில் குற்றம்சாட்டினார்.
அவருக்கு முறையான மருத்துவ சிகிச்சை வழங்க நீதிபதி உத்தரவிட்டார். உமர்காலித் டெல்லி கலவர வழக்கில் கைது செய்யப்பட்டவர் ஆவார்.

டெல்லி கலவர வழக்கு தொடர்பாக ஜேஎன்யு முன்னாள் மாணவர் உமர்காலித் கடந்த அக்டோபர் 1ம் தேதி கைது செய்யப்பட்டார். திகார் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார். இந்த நிலையில் நேற்று அவர் டெல்லி நீதிமன்ற தலைமை மெட்ரோபாலிடன் மாஜிஸ்திரேட் தினேஷ் குமார் முன்பாக ஆஜர்படுத்தப்பட்டார்.
அப்போது, உமர் காலித் நீதிபதியிடம் சிறை அதிகாரிகள் மேல் அடுக்கடுக்கான குற்றம் சாட்டினார். தனக்கு கடந்த மூன்று நாட்களாக கடுமையான பல் வலி இருந்து வருவதாகவும், ஆனால் சிறையில் அதற்கு சிகிச்சை அளிக்க மறுப்பதாகவும் அவர் குற்றம்சாட்டினார். புதன்கிழமை சிறைக்கு வர வேண்டிய பல் மருத்துவர் வரவில்லை எனவும் தான் கடுமையான வழியை அனுபவித்து வருவதாகவும் நீதிபதியிடம் உமர் காலித் கூறினார்.
இதனை கேட்ட நீதிபதி, உமர் காலித்துக்கு சிறையில் உடனடியாக பல் மரத்துவரிடம் காண்பித்து சிகிச்சை அளிக்க வேண்டும் .இதில்காலதாமதம் ஏற்பட்டால், சிறைக்கு வெளியில் உள்ள பல் மருத்துவரிடம் அழைத்துச்சென்று சிறை விதிகளின்படி சிகிச்சை அளிக்க வேண்டும். இந்த சிகிச்சை தொடர்பான அறிக்கைகளை சிறை அதிகாரிகள் 2 நாட்களுக்குள் தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டார்.
-
யாரோட பிடிலையும் திருவண்ணாமலை கிடையாது.. செய்யாறில் ஆதவ் அர்ஜுனா பேசியது என்ன? -
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங் -
சட்டமன்றத்துக்கே 11 மணிக்கு தான் வருவார்.. உதயநிதி எல்லாம் பேசலாமா.. செங்கோட்டையன் காட்டம் -
பாரதிராஜாவின் இறுதி சடங்கில் மகள்- மருமகள் சண்டை? என்ன நடந்தது? கங்கை அமரன் கோபத்துக்கு இதுதான் காரணமா? -
சேலத்தில் விபச்சாரத்தில் தள்ளப்பட்ட 50 பெண்கள்? பல ஆபாச வீடியோக்கள்! தவெக மணிகண்டன் சிக்கியது எப்படி -
"காலம் எனக்கு ஆப்பு வைத்து விட்டது.." கடவுள் தான் காப்பாற்றினாரு..! பாடகி ராஜலட்சுமி உருக்கம் -
திமுக மகளிரணி கூட்டத்திற்கு வந்து! வரவேற்க யாரும் இல்லாததால் திரும்பிச் சென்ற துரைமுருகன் -
ரூ.115 லட்சம் கோடி சொத்து இருந்து என்ன பயன்.. எலான் மஸ்க் வீட்டை பார்த்தீங்களா.. ஒரு 3BHK வீட்டை விட சிறியது? -
"விஜய் ஒழிக".. தமிழக முதல்வருக்கு எதிராக கர்நாடகாவில் கொந்தளித்த கன்னட அமைப்பினர்! அதிரடி கைது -
விவாகரத்து பேப்பர்களை கிழித்தெறிந்து கணவரை கட்டி பிடித்த மனைவி! கோர்ட் வாசலில் நடந்த உருக்கமான செயல்












Click it and Unblock the Notifications