ஜெகஜ்ஜால ப்ராடு நித்தியானந்தா-கைலாசாவுக்கு அங்கீகாரமா? ஐ.நா.வை வாயை திறக்க வைத்த கில்லாடி!
நாட்டை விட்டு தப்பி ஓடிய பாலியல் குற்றவாளி நித்தியானந்தா, ஐநா தொடர்பான கூட்டங்களில் பிரதிநிதியை பங்கேற்க வைத்து சர்ச்சையை கிளப்பி இருக்கிறார்.
டெல்லி: இந்தியாவில் பாலியல் பலாத்கார வழக்கில் தேடப்படும் குற்றவாளியான நித்தியானந்தா தாம் உருவாக்கியதாக கூறப்படும் கைலாசா என்ற நாட்டுக்கு அங்கீகாரம் கிடைத்துவிட்டது என்ற கட்டுக்கதைகளை ஐக்கிய நாடுகள் சபை திட்டவட்டமாக மறுத்துவிட்டது.
ஒரு சுதந்திர நாடு என்பது கில்லாடி கிரிமினல் நித்தியானந்தாக்களுக்கு எளிதானதாக இருக்கலாம். ஒரு நாட்டை உருவாக்குவதற்காக போராடி, இலங்கையில் பல லட்சம் தமிழர்கள் பச்சை படுகொலை செய்யப்பட்ட வரலாறு 13 ஆண்டுகளுக்கு முன்னர்தான் நடந்தது என்பது தப்பி ஓடிய பாலியல் குற்றவாளி நித்தியானந்தாவுக்கு நினைவில் இல்லாமல் போகலாம்.

இந்தியாவின் சட்டத்தின் பிடியில் இருந்து திருட்டுத்தனமாக தப்பி ஓடிவிட்ட நித்தியானந்தா, எங்கோ ஏதோ ஒரு மூலையில் ஒரு தீவை விலைக்கு வாங்கி, அதற்கு கைலாசா என பெயரிட்டுள்ளார். இத்தனைக்கும் அந்த நாடு எந்த திசையில் இருக்கிறது என்பதை கூட அறிவிக்க முடியாத அளவுக்கு ஒரு பதுங்கு பிராடு ஆசாமியாகத்தான் நித்தியானந்தா இருக்கிறார்.
ஆனால் ஐக்கிய நாடுகள் சபையின் சார்பாக பல்வேறு நாடுகளின் பிரதிநிதிகள், தன்னார்வ அமைப்புகள்- என்ஜிஓக்கள் பங்கேற்கும் கூட்டங்களில் யாரையோ பிடித்து எப்படியோ தமது சீஷ்யைகளை அனுப்பி பேச வைத்து, படம் எடுத்து சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகிறார் நித்தியானந்தா. அதாவது இப்படி என்ஜிஓக்கள் கூட்டத்தில் பங்கேற்றுவிட்டு என்னமோ, ஐநா சபையே அங்கீகரித்துவிட்டதாக வழக்கம் போல கட்டுக்கதைகளை கொட்டி வருகிறார் நித்தியானந்தா.
இந்த முறை ஐநா தொடர்பான என்ஜிஓக்கள் கூட்டத்தில் பேசிய நித்தியானந்தாவின் சிஷ்யையும் ஐநாவுக்கான நிரந்தர தூதர் என அறிவிக்கப்பட்டவருமான விஜயப்ரியா நித்தியானந்தா என்பவர், இந்தியாவில் நித்தியானந்தா துன்புறுத்தப்பட்டார்; அவர் நாடு கடத்தப்பட்டுவிட்டார் என்றெல்லாம் பொய் மூட்டைகளை அவிழ்த்துவிட்டுள்ளார். சாமியார் என்ற போர்வையில் நித்தியானந்தா நடிகை ரஞ்சிதாவுடன் நடத்திய காம களியாட்டங்களை இந்த உலகமே பார்த்து அதிர்ந்தது. சாமியார் என்ற போர்வையில் பெண் சீடர்களை பலாத்காரம் செய்ததாலேயே நித்தியானந்தாவை நாட்டின் நீதிமன்றங்கள் தேடப்படும் குற்றவாளியாகவும் அறிவித்துள்ளது. இதனால்தான் இந்தியாவை விட்டு தப்பி ஓடி எங்கோ ஒரு மூலையில் பதுங்கி கொண்டிருக்கிறார் நித்தியானந்தா.
இப்போது ஐநா சபை கைலாசாவை அங்கீகரித்துவிட்டதாக புரூடாக்களை விட்டு வருவதால் வேறு வழியே இல்லாமல் இது தொடர்பாக ஐநாவும் விளக்கம் தர வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுவிட்டது. இது தொடர்பாக ஐநா சபை தரப்பில் கூறுகையில், என்ஜிஓக்கள் போர்வையில்தான் நித்தியானந்தா கோஷ்டியினர் பங்கேற்றனர். பொருளாதார, சமூக கலாசார உரிமைகளுக்கான கூட்டத்தில் தொடர்பே இல்லாமல் நித்தியானந்தா பிரதிநிதி என்பவர் பேசியதை நிராகரித்துவிட்டோம் என கூறியுள்ளது.
ஜெகஜால கில்லாடிதான் நித்தி!
-
பெட்ரோல், டீசல் பற்றாக்குறை என பரவும் வதந்தி.. யாரும் நம்பாதீங்க! விளக்கமளித்த மத்திய அரசு -
1 மணி நேரம் நின்றாலும் ஒரு சொட்டு பெட்ரோல் இல்லை! ஹைதராபாத்தில் நிலைமை இதுதான்.. கள நிலவரம் இதுதான்! -
ஹார்முஸ் நீரிணையை கடந்து.. இந்தியாவுக்கு வந்த 2 எல்பிஜி கப்பல்கள்! ஆனால் பிரச்சனை இன்னும் முடியல! -
"LPG கனெக்ஷன் மொத்தமாக நிறுத்தப்படும்.." மத்திய அரசு மிக முக்கிய எச்சரிக்கை! என்ன மேட்டர்? -
அமெரிக்கா அனுமதி கொடுத்தும்.. தயக்கம் காட்டும் இந்தியா! ஈரான் எண்ணெய் வாங்குவதில் பெரிய சிக்கல்! -
எல்பிஜி விஷயத்தில் இந்தியா சொதப்பல்! இனி வரும் நாட்கள் ரொம்ப கஷ்டம்! வார்னிங் வந்துடுச்சு -
ஈரானை அரவணைக்கும் இந்தியா.. மீண்டும் தொடங்கும் கச்சா எண்ணெய் வர்த்தகம்? மத்திய அரசு பிளான் -
ஈரானுடன் ரகசிய டீல்.. சைலன்ட்டாக அம்பானி சம்பவம்.. 2019க்கு பின் இந்தியா வரும் 50 லட்சம் பேரல் ஆயில் -
இந்தியாவை உலுக்கும் "ஜாம்பி" போதை மருந்து.. 2 மணி நேரமா இன்ச் கூட அசையல.. திகிலூட்டும் வீடியோ! -
போருக்கு நடுவே துபாய் செய்த காரியம்.. நெகிழ்ந்து போன இந்தியர்கள்.. இதை யாரும் எதிர்பார்க்கல -
இந்தியாவுக்கு வழிவிட்ட ஈரான்.. கேஸ் தட்டுப்பாடு சரியாகுமா? இல்லத்தரசிகளே இதை கவனியுங்க! -
"இந்தியா எங்கள் நண்பன்! ஹார்முஸை தாராளமாக கடக்கலாம்.." அனுமதி தந்த ஈரான்! உற்று பார்க்கும் அமெரிக்கா












Click it and Unblock the Notifications