மணிப்பூர் வன்முறை: 9 மைத்தேயி இனக்குழு அமைப்புகளுக்கு 5 ஆண்டு அதிரடி தடை விதித்தது மத்திய அரசு!
டெல்லி: மணிப்பூரில் வன்முறைகள் நீடித்து வரும் நிலையில் 9 மைத்தேயி இனக்குழு அமைப்புகளுக்கு மத்தியில் ஆளும் பாஜக அரசு அதிரடியாக 5 ஆண்டுகளுக்கு தடை விதித்துள்ளது.
மணிப்பூர் மாநிலத்தில் கடந்த 8 மாதங்களாக மைத்தேயி, குக்கி இனக்குழுக்களிடையே தொடர் மோதல் நீடித்து வருகிறது. இந்த வன்முறைகளில் குக்கி இன மக்கள் மிக கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இம்மோதல்களில் இதுவரை 200க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டுள்ளனர். பல்லாயிரக்கணக்கானோர் படுகாயமடைந்து அகதிகளாக முகாம்களில் தங்கி உள்ளனர்.

ஆனாலும் மத்திய அரசு மணிப்பூர் வன்முறையை கட்டுப்படுத்தவில்லை என்கிற குற்றச்சாட்டு எதிர்க்கட்சிகளால் தொடர்ந்து முன்வைக்கப்பட்டு வருகிறது. இதனை மத்திய அரசும் மறுத்து வருகிறது.
அண்மையில் நடைபெற்ற மிசோரம் சட்டசபை தேர்தலிலும் மணிப்பூர் வன்முறை முக்கிய பிரச்சனையாக இடம் பிடித்தது. மணிப்பூர் வன்முறையை கட்டுப்படுத்தாத மத்திய பாஜக அரசு மீது மிசோரம் மக்கள் அதிருப்தியில் இருப்பதால் ஆளும் மிசோ தேசிய முன்னணி பாஜகவிடம் இருந்து விலகி நின்றது; மேலும் பிரதமர் மோடியுடன் ஒரே மேடையில் தேர்தல் பிரசாரம் செய்யவும் மறுத்தார் முதல்வர் ஜோரம் தங்கா. இதனால் மிசோரம் சட்டசபை தேர்தலில் மோடி பிரசாரமும் செய்யவில்லை. மிசோரம் பூர்வ குடி மக்களும் மணிப்பூர் குக்கி இனமக்களும் தொப்புள் கொடி உறவுகள் என்பதால் மிசோரமில் மணிப்பூர் வன்முறை தாக்கம் இருந்தது.
இந்த நிலையில் மத்திய அரசு அதிரடியாக ஒரு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. மணிப்பூரில் மைத்தேயி இனக்குழுக்களின் 9 அமைப்புகளை சட்டவிரோதமானவை என அறிவித்து 5 ஆண்டுகள் தடை விதித்துள்ளது மத்திய அரசு.
மக்கள் விடுதலை ராணுவம் (PLA)
புரட்சிகர மக்கள் முன்னணி (RPF),
ஐக்கிய விடுதலை முன்னனி (UNLF)
மணிப்பூர் மக்கள் ராணுவம் (MPA)
காங்லீய்பக் மக்கள் புரட்சிகர கட்சி (PREPAK)
காங்லீய்பக் கம்யூனிஸ்ட் கட்சி (KCP)
கே.ஒய்.கே.எல்.
கோர்கோம்
ஏ.எஸ்.யூ.கே
ஆகிய 9 அமைப்புகளை மத்திய அரசு தடை செய்துள்ளது.
-
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
நோட் பண்ணுங்க! கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்கு 'செக்' - ரேஷன் கார்டில் இதை கவனிக்கலைன்னா பணம் கட்? -
கழுத்தறுத்த பாஜக..சரண்டராகும் சரத்குமார்! பஞ்சாயத்தை கூட்டிய நாட்டாமை குடும்பத்தார்! பரபர பாலிடிக்ஸ் -
பென்டகன் பிளான் ரெடி.. ஈரானுக்குள் நுழையும் அமெரிக்க வீரர்கள்! கதை மொத்தமா முடியுது! -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
பாஜக நட்சத்திர பேச்சாளர் பட்டியலில் இருந்து தமிழிசை பெயர் நீக்கம்.. பின்னணி இதுதானா? -
தப்புக் கணக்கான ராதிகாவின் முடிவு? மீண்டும் சமத்துவ மக்கள் கட்சியை தொடங்குகிறாரா சரத்குமார்? -
கெத்து காட்டும் இந்தியா.. ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க இந்திய கப்பல்களுக்கு தனிப்பாதை கொடுத்த ஈரான்.. செம -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை! -
துபாய் உட்பட.. மொத்த வளைகுடா நாடுகளிலும் குடிநீர் பஞ்சம் ஏற்படும் அபாயம்! ஈரான் எச்சரிக்கை!












Click it and Unblock the Notifications