402 நாடாளுமன்ற பணியாளர்களுக்கு கொரோனா- பட்ஜெட் கூட்டத் தொடரில் கடும் கட்டுப்பாடுகள்?
டெல்லி: நாடாளுமன்ற பணியாளர்கள் 402 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் பட்ஜெட் கூட்டத் தொடரில் கடும் கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட உள்ளன. இது தொடர்பன வழிகாட்டுதல்களை ஆராயுமாறு லோக்சபா சபாநாயகர் ஓம் பிர்லா, ராஜ்யசபா தலைவர் வெங்கையா நாயுடு ஆகியோர் கேட்டுக் கொண்டுள்ளனர்.
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் ஜனவரி இறுதியில் தொடங்க உள்ளது. இதனையடுத்து நாடாளுமன்றத்தில் பணியாற்றும் 1409 பணியாளர்களுக்கு கொரோனா பரிசோதனைகள் நடத்தப்பட்டன.

இந்த பரிசோதனைகளில் 402 பணியாளர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. அதாவது லோக்சபாவில் பணியாற்றும் 200 பேருக்கும் ராஜ்யசபாவில் பணிபுரியும் 69 பேருக்கும் இதர துறைசார் பணியாளர்கள் 133 பேருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால் நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் ஒத்திவைக்கப்படுமா? என்கிற கேள்வியும் எழுந்தது.
இதையடுத்து பட்ஜெட் கூட்டத் தொடரின் போது என்ன மாதிரியான கட்டுப்பாடுகள் பின்பற்றப்பட வேண்டும் என்பது குறித்து ஆராய துறைசார் செயலாளர்களை லோக்சபா சபாநாயகர் ஓம் பிர்லா, ராஜ்யசபா தலைவர் வெங்கையா நாயுடு ஆகியோர் கேட்டுக் கொண்டுள்ளனர். நாட்டில் மகாராஷ்டிராவைத் தொடர்ந்து டெல்லியில் அதிக கொரோனா பாதிப்பு உள்ளது. இதனால் தலைநகர் டெல்லியில் கட்டுப்பாடுகள் அமலில் உள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது.
-
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
நோட் பண்ணுங்க! கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்கு 'செக்' - ரேஷன் கார்டில் இதை கவனிக்கலைன்னா பணம் கட்? -
கழுத்தறுத்த பாஜக..சரண்டராகும் சரத்குமார்! பஞ்சாயத்தை கூட்டிய நாட்டாமை குடும்பத்தார்! பரபர பாலிடிக்ஸ் -
பென்டகன் பிளான் ரெடி.. ஈரானுக்குள் நுழையும் அமெரிக்க வீரர்கள்! கதை மொத்தமா முடியுது! -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
பாஜக நட்சத்திர பேச்சாளர் பட்டியலில் இருந்து தமிழிசை பெயர் நீக்கம்.. பின்னணி இதுதானா? -
தப்புக் கணக்கான ராதிகாவின் முடிவு? மீண்டும் சமத்துவ மக்கள் கட்சியை தொடங்குகிறாரா சரத்குமார்? -
கெத்து காட்டும் இந்தியா.. ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க இந்திய கப்பல்களுக்கு தனிப்பாதை கொடுத்த ஈரான்.. செம -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை! -
துபாய் உட்பட.. மொத்த வளைகுடா நாடுகளிலும் குடிநீர் பஞ்சம் ஏற்படும் அபாயம்! ஈரான் எச்சரிக்கை!












Click it and Unblock the Notifications