பொது இடங்களில் எந்த கட்டணமும் இல்லாமல் வைஃபை வசதி- மத்திய அமைச்சரவை ஒப்புதல்
டெல்லி: பொது இடங்களில் எந்த ஒரு கட்டணமும் இல்லாமல் வைஃபை வசதி வழங்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.
Recommended Video

டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தின் முடிவுகள் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத், பொது இடங்களில் அனைவருக்கும் வைஃபை வசதியை எந்த கட்டணமும் இல்லாமல் வழங்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் கொடுத்துள்ளது என்றார்.

மேலும் 'பொது தகவல் அலுவலகங்கள்' மூலம் எந்தவித வரி, கட்டணம் இல்லாமல் இந்த பொது வை-பை சேவைகள் வழங்கப்படும். இந்த வசதி பிஎம்-வானி என அழைக்கப்பபடும். இத்திட்டம் நாட்டில் பொது வை-பை நெட்வொர்க் வளர்ச்சியை அதிகரிக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல் தற்சார்பு இந்தியா வேலைவாய்ப்பு திட்டத்தை நடப்பு நிதியாண்டில் ரூ.1,584 கோடி மதிப்பில் மேற்கொள்ளவும், இதே திட்டத்தை 2020-2023 வரை ரூ.22,810 கோடி செலவில் மேற்கொள்ளவும் மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இத்திட்டம் மூலம் 58.5 லட்சம் தொழிலாளர்கள் பயனடைவர்.
வட கிழக்கு மாநிலங்களுக்கு விரிவான தொலைதொடர்பு மேம்பாட்டு திட்டத்தின் கீழ் அருணாச்சலப் பிரதேசம் மற்றும் அஸ்ஸாமின் 2 மாவட்டங்களில் செல்போன் சேவை அளிப்பதற்கான திட்டத்திற்கு அமைச்சரவை ஒப்புதல். இதுவரை இவ்வசதி இல்லாத 2374 கிராமங்களுக்கு செல்போன் சேவைகள் கிடைக்கும்.
கொச்சியிலிருந்து லட்சத்தீவுகள் வரை கடலுக்கடியில் கண்ணாடி இழை வடத்துக்கான (பைபர் கேபிள்) திட்டத்துக்கும் அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications