பாரத் பெட்ரோலியம் நிறுவனத்தின் 53.29% பங்குகளை விற்க மத்திய அமைச்சரவை ஒப்புதல்
Subscribe to Oneindia Tamil
டெல்லி: பாரத் பெட்ரோலியம் நிறுவனத்தின் 53.29% பங்குகளை விற்பனை செய்ய மத்திய அமைச்சரவை ஒப்புதல் தெரிவித்துள்ளது.
மத்திய அமைச்சரவை முடிவுகள் தொடர்பாக டெல்லியில் செய்தியாளர்களிடம் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியதாவது:

பாரத் பெட்ரோலியத்தின் 53.29% பங்குகளை விற்பனை செய்ய மத்திய அமைச்சரவை ஒப்புதல் தெரிவித்துள்ளது. அதன் நிர்வாகத்தையும் தனியாரிடம் ஒப்படைக்கவும் மத்திய அரசு ஒப்புதல் தெரிவித்திருக்கிறது.
அதேநேரத்தில் அஸ்ஸாமில் உள்ள நுமலிகார் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை மட்டும் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இருக்கும். இவ்வாறு நிர்மலா சீதாராமன் கூறினார்.
மேலும் சில அரசு நிறுவனத்தின் பங்குகளை விற்பனை செய்யவும் பிரதமர் மோடி தலைமையிலான அமைச்சரவை கூட்டத்தில் ஆலோசனை நடத்தப்பட்டதாக டெல்லி தகவல்கள் தெரிவிக்கின்றன.












Click it and Unblock the Notifications