Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

நிர்வாண சாமியார்கள் பங்கேற்கும் உ.பி. மகா கும்பமேளா சனாதன தர்மத்தின் உச்சமாம்.. சொல்வது மத்திய அரசு

Subscribe to Oneindia Tamil

டெல்லி: பல்லாயிரக்கணக்கான நிர்வாண சாமியார்கள் (சாதுக்கள்) அணிவகுப்புடன் உத்தரப்பிரதேச மாநிலம் பிரக்யராஜில் நடைபெற உள்ள மகா கும்பமேளா நிகழ்வு சனாதன தர்மத்தின் உச்சம்; சனாதன தர்மத்தின் இதயத்தை நோக்கியது என மத்திய அரசின் கலாசாரத்துறை அமைச்சகம் தெரிவித்திருப்பது சர்ச்சையாகி உள்ளது.

சனாதன தர்மம் என்பது ஒடுக்குமுறைகளை நியாயப்படுத்துகிறது என்பதால் தமிழ்நாடு உள்ளிட்ட தென்னிந்திய மாநிலங்களில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்படுகிறது. அண்மையில் நாடாளுமன்றத்தில் பேசிய லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியும் சனாதன தர்மத்தை வலியுறுத்தும் மனுஸ்மிருதியை கடுமையாக விமர்சித்திருந்தார் ராகுல் காந்தி.

sanatan dharma

இந்த நிலையில் சனாதன தர்மத்தின் உச்சம்; சனாதன தர்மத்தின் இதயத்தை நோக்கியதுதான் உத்தரப்பிரதேச மாநிலத்தின் பிரக்யாராஜில் நடைபெறும் மகா கும்பமேளா என மத்திய அரசின் கலாசாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது சர்ச்சையாகி உள்ளது. இந்த மகா கும்பமேளாவில்தான் பல்லாயிரக்கணக்கான நிர்வாண சாமியார்கள் பங்கேற்று புனித நீராடுவர்.

மத்திய அரசின் கலாசாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் இடம் பெற்றுள்ளதாவது: ஆன்மீக உற்சாகத்திற்கு இடையே,மகா கும்ப நகரில் உள்ள மத்திய மருத்துவமனை நம்பிக்கை மற்றும் உயிர்ச்சக்தியின் புதிய அத்தியாயத்தை எழுதுகிறது. மகா கும்பமேளா திருவிழா தொடங்குவதற்கு சற்று முன்பு 'கங்கா' என்று பெயரிடப்பட்ட பெண் குழந்தை பிறப்பது, புனித நதிகளின் தூய்மை மற்றும் சாரத்தை நினைவூட்டுவதாக உள்ளது.. 'கும்பமேளா' என்று பெயரிடப்பட்ட மற்றொரு ஆண் குழந்தையும் பிறந்தது. , இந்தப் பிறப்புகள் வாழ்க்கை வட்டத்தையும் மகா கும்பமேளா பண்டிகையின் ஆசீர்வாதங்களையும் வெளிப்படுத்தும் அம்சங்களாக உள்ளன.. மகா கும்பமேளா அதிகாரப்பூர்வமாகத் தொடங்குவதற்கு முன்பே செயல்படத் தொடங்கிவிட்ட இந்த மருத்துவமனை, உத்தரப்பிரதேச அரசின் துல்லியமான முன்தயாரிப்புகளுக்கு ஒரு சான்றாக நிற்கிறது. நவீன வசதிகளுடன் கூடிய இந்த மருத்துவமனையானது மஹா கும்பமேளாவின் புனிதத்தன்மை பாரம்பரியத்தை முன்னேற்றத்துடன் இணைத்து மனித நலனுக்கான உறுதிப்பாட்டோடு இருப்பதை உறுதி செய்கிறது.

சனாதன தர்மத்தின் உச்சம் என்று போற்றப்படும் மகா கும்பமேளா, 2025-ம் ஆண்டில் பிரயாக்ராஜில் அதன் பிரமாண்டத்தை வெளிப்படுத்தும். "புனித யாத்திரைகளின் ராஜா" அல்லது தீர்த்ராஜ் என்று அழைக்கப்படும் பிரயாக்ராஜ், புராணங்கள், ஆன்மீகம் மற்றும் வரலாறு ஆகியவை சங்கமிக்கும் நகரமாகும், இது சனாதன கலாச்சாரத்தின் காலங்களைக் கடந்த உருவகமாக அமைகிறது. கங்கை, யமுனை மற்றும் புலன் உ ணர்வுக்கு அப்பாலான மாய உலகின் சரஸ்வதி ஆகிய நதிகள் சங்கமிக்கும் இந்தப் புனித நிலம், தெய்வீக ஆசீர்வாதங்களையும் முக்தியையும் தேடும் லட்சக்கணக்கானவர்களுக்கு ஆன்மீக காந்தமாகச் செயல்படுகிறது. இங்கே, பக்தி, தியானம் மற்றும் ஆன்மீகத்தின் திரிவேணி சங்கமத்துடன் மகா கும்பமேளா ஒரு தெய்வீகப் பயணமாக மாறுகிறது.

பிரயாக்ராஜின் ஆன்மீக ரத்தினங்களுக்கு மத்தியில் பரபரப்பான லோக்நாத் பகுதியில் உள்ள புகழ்பெற்ற பாபா லோக்நாத் மஹாதேவ் கோயில் உள்ளது. காசியின் பாபா விஸ்வநாதரின் 'பிரதிநிதி' என்று போற்றப்படும் பாபா லோக்நாத்தின் கோயில் காலங்களைக் கடந்த பக்தியின் எதிரொலிகளில் மூழ்கியுள்ளது. இந்த சுயம்புவான சிவலிங்கத்தைப் பற்றிய குறிப்புகள் ஸ்கந்த புராணம் மற்றும் மகாபாரதத்தில் காணப்படுகின்றன, இது அதன் பண்டைய வேர்களை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. பாபா லோக்நாத்தின் ஆசீர்வாதங்களைப் பெறுவது உலகப் போராட்டங்களைத் தணிக்கும் என்று யாத்ரீகர்கள் நம்புகிறார்கள், மேலும் பிரமாண்டமான மகா கும்பமேளாவின் போது, தெய்வீகத்தை அனுபவிக்க ஆயிரக்கணக்கானோர் இந்தப் புனித இடத்தில் கூடுவார்கள். மதன் மோகன் மாளவியா போன்ற பிரபலங்களுடனான தொடர்பால் இந்த கோயிலின் கலாச்சார பாரம்பரியம் மேலும் வளப்படுத்தப்படுகிறது. சிவராத்திரி அன்று அதன் சின்னமான சிவ பாரத் ஊர்வலம் மற்றும் துடிப்பான ஹோலி கொண்டாட்டங்கள் பிரயாக்ராஜின் ஆன்மீக உற்சாகத்தின் துடிப்பை உணர்த்துகின்றன. இந்த நகரம் மகா கும்பமேளாவிற்கு தயாராகி வரும் நிலையில், பாபா லோக்நாத்தின் கோயில் சந்தேகத்திற்கு இடமின்றி உலகம் முழுவதிலுமிருந்து வரும் பக்தர்களுக்கு மையப் புள்ளியாக மாறும்.

கும்பமேளா நான்கு பரிமாணக் கொண்டாட்டமாக விவரிக்கப்படுகிறது - ஒரு ஆன்மீகப் பயணம், ஒரு தர்க்க அதிசயம், ஒரு பொருளாதார நிகழ்வு மற்றும் உலகளாவிய ஒற்றுமையின் ஒரு சான்று

2025-ம் ஆண்டில் சங்கமத்தின் புனித மணல் கோடிக்கணக்கான பக்தர்களுக்கு காத்திருக்கும் நிலையில்,மகா கும்பமேளா வேறு எங்கும் இல்லாத ஆன்மீக சாகசமாக இருக்கும். இது ஒருவர் தனது வேர்களுடன் மீண்டும் இணைவதற்கும், சனாதன தர்மத்தின் காலங்களைக் கடந்த ஞானத்தை அனுபவிப்பதற்கும், இவ்வுலகத்தை மீறிய ஒரு கொண்டாட்டத்தில் பங்கேற்பதற்கும் ஒரு அழைப்பாகும். பாபா லோக்நாத்தின் தெய்வீக ஆசீர்வாதங்கள் முதல் மகரிஷி துர்வாசரின் புராண மரபு வரை, துறவிகளின் மனிதாபிமான பிணைப்புகள் முதல் வாழ்க்கையின் அற்புதங்கள் வரை, மகா கும்பமேளா நம்பிக்கை, பக்தி மற்றும் உன்னதத்தின் கலவையாகும். இவ்வாறு மத்திய அரசின் கலாசாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+