அடுத்த பஞ்சாயத்தை கூட்டும் மத்திய பாஜக அரசு.. வக்பு வாரியத்தின் அதிகாரத்தை குறைக்கும் மசோதா தாக்கல்?
டெல்லி: இஸ்லாமியர்களின் சமூக, பொருளாதார பணிகளுக்கான வக்பு வாரியத்தின் அதிகாரத்தை குறைக்க வகை செய்யும் மசோதாவை நாடாளுமன்றத்தில் மத்திய அரசு தாக்கல் செய்ய இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. மேலும் மத்திய வக்பு வாரியம் மற்றும் மாநிலங்களின் வக்பு வாரியங்களில் பெண்களின் பிரதிநிதித்துவத்தை அதிகப்படுத்தும் ஷரத்தும் புதிய மசோதாவில் இடம் பெறும் என்கின்றன மத்திய அரசு வட்டாரங்கள்.
இஸ்லாமியர்களின் சமூக, பொருளாதார நலன்கள், சொத்துகளை பராமரிக்கக் கூடிய அமைப்பாக இருப்பது வக்பு வாரியம். முந்தைய காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியில் 2013-ம் ஆண்டு வக்பு வாரியத்துக்கு கூடுதல் அதிகாரங்கள் வழங்கப்பட்டன. இதற்காக 1995-ம் ஆண்டு வக்பு வாரிய சட்டத்தில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டன.

டெல்லியில் 123 சொத்துகளுக்கு வக்பு வாரியம் உரிமை கோரிய விவகாரத்தில் மத்திய அரசுக்கு கடந்த ஆண்டு டெல்லி உயர்நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியிருந்தது. இதனையடுத்தே வக்பு வாரியத்தின் அதிகாரத்தை குறைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளதாம்.
நாடு முழுவதும் தற்போது வக்பு வாரியத்துக்கு சொந்தமாக 8.7 லட்சம் சொத்துகள் இருப்பதாகவும் இது 9.4 லட்சம் ஏக்கர் எனவும் கூறப்படுகிறது. வக்பு வாரியம் தற்போது நடைமுறையில் சொத்துகளுக்கு உரிமை கோருவது எளிதான ஒன்றாக இருக்கிறது; இந்த நடைமுறையை மாற்றுவது உள்ளிட்ட மொத்த 40-க்கும் மேற்பட்ட திருத்தங்களைக் கொண்டு வர மத்திய அரசு முடி செய்துள்ளதாம். அதாவது வக்பு வாரியம் இனி தன்னிச்சையாக எந்த ஒரு சொத்துக்கும் உரிமை கோர முடியாது; இதற்கென தனியாக ஒரு நிர்வாகக் கட்டமைப்பு உருவாக்கப்பட இருக்கிறதாம்.
மத்திய மற்றும் மாநில வக்பு வாரியங்களில் முஸ்லிம் பெண்களுக்கான பிரதிநிதித்துவத்தை அதிகப்படுத்துவதற்கும் மத்திய அரசு திட்டமிட்டிருக்கிறதாம். இது தொடர்பாக மத்திய அரசின் புதிய மசோதாவுக்கு பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை ஒப்புதல் கொடுத்திருப்பதாகவும் டெல்லி தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த புதிய மசோதா அடுத்த சில நாட்களில் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படலாம் எனவும் மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மகாராஷ்டிரா, ஹரியானா, ஜார்க்கண்ட் மாநிலங்களில் சட்டசபை தேர்தல்கள் நடைபெற உள்ள நிலையில் மத்திய அரசின் வக்பு வாரியத்தின் அதிகாரங்களை திருத்தும் மசோதா மிக முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.
-
தங்கம் வைத்திருப்போருக்கு பெரிய மாற்றம்! ஏப் 1 முதல் 6 டிஜிட் HUID கட்டாயம்! உங்க பழைய நகை என்னாகும் -
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம்












Click it and Unblock the Notifications