Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கோவா பழங்குடிகளுக்கு தனி சட்டசபை தொகுதி: நாடாளுமன்றத்தில் மத்திய அரசின் புதிய மசோதா நாளை தாக்கல்!

Subscribe to Oneindia Tamil

டெல்லி: கோவா மாநிலத்தில் பழங்குடிகளுக்கு தனி சட்டசபை தொகுதிகளை உருவாக்குவது தொடர்பான மத்திய அரசின் புதிய மசோதா நாளை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படுகிறது. மத்திய சட்டத்துறை அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால், கோவா மாநில சட்டசபை தொகுதிகளில் பட்டியல் பழங்குடியினரின் பிரதிநிதித்துவத்தை மறுசீரமைக்க வகை செய்யும் மசோதாவை நாளை தாக்கல் செய்ய உள்ளார்.

கோவா மாநிலத்தில் 2011 கணக்கெடுப்பின் அடிப்படையில் மொத்த மக்கள் தொகை 14.58 லட்சம். இதில் தலித்துகள் (எஸ்சி SC) 25,449 பேர். பழங்குடிகள் எண்ணிக்கை 1,49,275. கோவாவின் பெர்னெம் சட்டசபை தொகுதி தனித் தொகுதியாக தலித்துகளுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது. ஆனால் பழங்குடிகளுக்கான சட்டசபை தொகுதி எதுவும் இல்லை.

goa parliament

லோக்சபா தேர்தலுக்கு முன்னதாக கோவா சட்டசபையில் பழங்குடிகளுக்கும் பிரதிநிதித்துவம் கிடைக்க தனி சட்டசபை தொகுதியை உருவாக்க வேண்டும் என்ற கோரிக்கை விஸ்வரூபம் எடுத்தது. தங்களுக்கு தனி சட்டசபை தொகுதியை உருவாக்காவிட்டால் லோக்சபா தேர்தலையே புறக்கணிப்போம் என்றும் பழங்குடிகள் எச்சரித்திருந்தனர்.

இதனால் கடந்த மார்ச் மாதம், பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை கூட்டத்தில், கோவா மாநில சட்டசபை தொகுதிகளில் பட்டியல் பழங்குடியினரின் பிரதிநிதித்துவத்தை மறுசீரமைக்க வகை செய்யும் மசோதாவுக்கு ஒப்புதல் தரப்பட்டது. மத்திய அரசின் மசோதாவில், கோவா மாநிலத்தில் உள்ள பழங்குடியினரின் அரசியலமைப்பு உரிமைகள் பாதுகாக்கப்படுவதை உறுதி செய்வதற்காக, 2008-ம் ஆண்டு நாடாளுமன்ற மற்றும் சட்டசபை தொகுதி மறுவரையறை ஆணையில் திருத்தங்கள் செய்வதற்கும், கோவா மாநிலத்தின் சட்டசபையில் உள்ள இடங்களை மாநிலத்தின் பட்டியலில் உள்ள பழங்குடியினருக்கு மறுசீரமைப்பு செய்வதற்கும் தேர்தல் ஆணையத்திற்கு அதிகாரம் அளிக்கும் வகையில் ஒரு சட்டம் இயற்றுவது இன்றியமையாததாகும். கோவா சட்டசபை தொகுதிகளை மறுசீரமைப்பதன் மூலம் கோவா சட்டசபையில் பட்டியல் பழங்குடியினருக்கு முறையான பிரதிநிதித்துவம் அளிக்கும் நோக்கத்திற்காக நாடாளுமன்ற மற்றும் சட்டசபை தொகுதிகளின் எல்லை நிர்ணய ஆணை, 2008 இல் தேவையான திருத்தங்களைச் செய்ய தேர்தல் ஆணையத்திற்கு இது அதிகாரம் அளிக்கிறது என தெரிவிக்கப்பட்டிருந்தது.

தற்போது, கோவாவில் 3 ஜாதிகளை பழங்குடிகள் பட்டியலில் சேர்த்து தனி சட்டசபை தொகுதியை உருவாக்க வகை செய்யும் மசோதாவை மத்திய அரசு நாளை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்கிறது. மத்திய சட்டத்துறை அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் இந்த மசோதாவைத் தாக்கல் செய்ய இருப்பதாக மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+