நாடு முழுவதும் சுங்க கட்டணம் 40% குறைக்கப்படுகிறது.. மத்திய அமைச்சர் நிதின் கட்காரி அதிரடி அறிவிப்பு
டெல்லி: நாடு முழுவதும் சுங்க கட்டணம் 40% குறைக்கப்படும் என மத்திய அமைச்சர் நிதின் கட்காரி கூறியுள்ளதாக என திமுக எம்.பி. வில்சன் தெரிவித்துள்ளார்.
நாடு முழுவதும் சுங்க் சாவடி கட்டணங்களுக்கு தொடர்ச்சியாக எதிர்ப்பு இருந்து வருகிறது. தமிழகத்தில் சுங்க சாவடிகளை அகற்ற வலியுறுத்தி பல்வேறு போராட்டங்கள் நடத்தப்பட்டுள்ளன.
தமிழகத்தில் மட்டும் 50 சுங்க சாவடிகள் உள்ளன. இந்த சுங்க சாவடிகளில் 2 கட்டங்களாக கட்டண உயர்வு ஆண்டுதோறும் அமல்படுத்தப்பட்டு வருகிறது.கடந்த சில மாதங்களுக்கு முன்னர் ரூ5 முதல் ரூ150 வரை சுங்க கட்டணம் உயர்த்தப்பட்டது.

லோக்சபாவில் திருமா கேள்வி
சுங்க சாவடிகளை அகற்ற வேண்டும் என தமிழக எம்.பி.க்கள் நாடாளுமன்றத்திலும் வலியுறுத்தி வருகின்றனர். லோக்சபாவில் பேசிய விசிக தலைவர் தொல்.திருமாவளவன் எம்பி, 60 கி.மீ-க்கு ஒரு சுங்க சாவடிதான் இருக்கும்.. எஞ்சியவை அகற்றப்படும் என அமைச்சர் கட்காரி கூறினாரே.. அப்படி அகற்றப்பட்டதா? என கேல்வி எழுப்பி இருந்தார்.

ராஜ்யசபாவில் வில்சன் கேள்வி
மேலும் சுங்க சாவடிகளை முழுமையாக அகற்றுவது தொடர்பாக ராஜ்யசபாவில் திமுக எம்பி வில்சன் கேள்வி எழுப்பி இருந்தார். அத்துடன் வாகன பதிவின் போதே சுங்க கட்டணமாக ஒரு சிறிய கட்டணத்தை வசூல் செய்யலாம் என்பதும் வில்சன் எம்.பி.யின் யோசனை. இதற்கு மத்திய அமைச்சர் நிதின் கட்காரி பதிலளித்து கடிதம் அனுப்பி உள்ளார்.

பதிலனுப்பிய கட்காரி
இது தொடர்பாக திமுக எம்.பி. வில்சன் கூறியிருப்பதாவது: நாடு முழுவதும் தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்கச்சாவடிகளை அகற்றிவிட்டு அதற்கு பதிலாக வாகனப்பதிவின் பொழுதே ஒரு முறை சிரிய கட்டணமாக வசூலிக்க வலியுறுத்தி மாண்புமிகு ஒன்றிய அமைச்சர் திரு
@nitin_gadkari அவர்களிடம் பாராளுமன்றத்தில் கோரிக்கை வைத்தேன்.

கட்காரியின் அதிரடி அறிவிப்பு
அதற்கு பதில் அளித்துள்ள மாண்புமிகு அமைச்சர் அவர்கள் பொது நிதியுதவி திட்டங்களில் சுங்கச்சாவடி கட்டணங்களை 40% வரை குறைக்க முடிவெடுத்துள்ளதாக தெரிவித்துள்ளார். சாலைப்பயனாளர்களின் சுமையை குறைக்க உதவிடும் இந்த முடிவிற்காக மாண்புமிகு அமைச்சர் அவரக்ளுக்கு நன்றியினை தெரிவித்துக்கொள்கிறேன். எப்படியிருந்தாலும் விரைவில் சுங்கச்சாவடிகளை முழுவதுமாக அகற்றிவிட்டு வாகனப்பதிவின் பொழுதே ஒருமுறைக் சிரியா கட்டணமாக வசூலித்துக்கொள்ள ஆவண செய்யுமாறு மாண்புமிகு அமைச்சர் @nitin_gadkari அவர்களைக் கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு வில்சன் எம்.பி. கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications