கொரோனா தடுப்பூசி திருவிழா.. முதல் நாளில் 27 லட்சம் பேருக்கு தடுப்பூசி.. மத்திய அரசு தகவல்!
டெல்லி: பிரதமர் நரேந்திர மோடி அறிவித்த கொரோனா தடுப்பூசி திருவிழாவின் முதல் நாளில் 27 லட்சத்திற்கும் மேற்பட்டோருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டதாக மத்திய சுகாதார அமைச்சகம் கூறியுள்ளது.
தடுப்பூசி போட உதவி தேவைப்படுபவர்களுக்கும், கொரோனா சிகிச்சை பெற மக்களுக்கு உதவுமாறும் மக்களுக்கு பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

கொரோனா ஆட்டம்
இந்தியா முழுவதும் கொரோனா 2-வது அலை கடுமையாக வீசி வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 1,52,879 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.மகாராஷ்டிரா, தமிழ்நாடு, கேரளா, மத்திய பிரதேசம், குஜராத் உள்ளிட்ட 8 மாநிலங்களில் மட்டும் நாட்டின் மொத்த பாதிப்பில் 80% பாதிப்புகள் உள்ளன. கொரோனா தொற்றை தடுக்க தமிழகம் உள்பட பல்வேறு மாநிலங்களில் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

கொரோனா தடுப்பூசி
இது ஒருபுறம் இருக்க கொரோனாவை தடுக்க நாடு முழுவதும் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. முதல் கட்டமாக மருத்துவ மற்றும் முன்கள பணியாளர்களுக்கும், அடுத்த கட்டமாக 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் மற்றும் 45 வயதுக்கு மேற்பட்ட இணை நோய் உள்ளவர்களுக்கும் தடுப்பூசி போடப்பட்டது. தற்போது நாடு முழுவதும் 45 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி போடப்படுகிறது.

தடுப்பூசி திருவிழா
கொரோனா பரவலை தடுக்க 11-ம் தேதி முதல் 4 நாட்களுக்கு கொரோனா தடுப்பூசி திருவிழா (டிக்கா உட்சவ்) கடைபிடிக்க வேண்டும் என்று பிரதமர் மோடி வலியுறுத்தினார். தடுப்பூசி போட உதவி தேவைப்படுபவர்களுக்கும், கொரோனா சிகிச்சை பெற மக்களுக்கு உதவுமாறும் முக கவசங்கள் அணிய வேண்டும் என்றும், முக கவசங்கள் அணிய மற்றவர்களை ஊக்கப்படுத்த வேண்டும் என்றும் பிரதமர் மோடி கூறினார்.

27 லட்சம் பேருக்கு தடுப்பூசி
பிரதமர் கூறியபடி நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசி திருவிழா தொடங்கியது. தடுப்பூசி திருவிழாவின் முதல் நாளில் ஒரு நாள் மட்டும் இரவு 8 மணி நிலவரப்படி 27 லட்சத்திற்கும் மேற்பட்டோருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டதாக மத்திய சுகாதார அமைச்சகம் அறிவித்துள்ளது.
-
விஸ்வரூபம் எடுத்த ஆந்திர விவகாரத்தில் ட்விஸ்ட்.. விஜய்-க்கு நிம்மதி! 'உல்சான்' ஆக மாறும் தூத்துக்குடி -
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய் -
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே!












Click it and Unblock the Notifications