டெல்லி ஏர்போர்ட்- கொரோனா சோதனைக்கு மறுப்பு-பயணிகள் இல்லாமல் யு.எஸ் விமானம் நியூயார்க் ரிட்டர்ன்
டெல்லி: டெல்லி விமான நிலையத்தில் கொரோனா பரிசோதனைக்கு யுனைடெட் ஏர்லைன்ஸ் விமானிகள் குழு மறுத்துவிட்டது. இதனையடுத்து பயணிகளை ஏற்றாமலேயே நியூயார்க் நகருக்கு யுனைட்டெட் ஏர்லைன்ஸ் விமானம் திரும்பியது. தற்போது இந்தியாவுக்கான விமான சேவைகளை அந்த நிறுவனம் தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளது.
நாட்டில் கொரோனா 2-வது அலை அதிவேகமாக பரவி வருகிறது. பெரும்பாலான மாநிலங்களில் கொரோனா பாதிப்பு உச்சகட்டத்தை எட்டியுள்ளது.

இதையடுத்து பிரிட்டன் உள்ளிட்ட பல நாடுகள் இந்தியாவுக்கு பயண தடை விதித்துள்ளன. இந்த நிலையில் அமெரிக்காவின் யுனைடெட் ஏர்லைன்ஸ் விமானம் டெல்லி விமான நிலையம் வந்தடைந்தது.
அப்போது அந்த விமானத்தின் விமானிகள் உள்ளிட்ட குழுவினரை கொரோனாவுக்கான RT-PCR பரிசோதனை செய்ய விமான நிலைய அதிகாரிகள் கேட்டுக் கொண்டனர். ஆனால் விமானிகள் குழுவினரோ கொரோனா RT-PCR பரிசோதனை செய்ய மறுத்துவிட்டனர்.
அத்துடன் பயணிகள் யாரையும் ஏற்றாமலேயே வெறும் விமானமாகவே நியூயார்க் நகருக்கு அந்த விமானிகள் விமானத்தை இயக்கினர். இதன்பின்னர் யுனைடெட் ஏர்லைன்ஸ் வெளியிட்ட அறிக்கையில், இந்தியாவுக்கான விமான சேவையை தற்காலிகமாக நிறுத்தி வைக்கிறோம். விரைவில் மாற்று விமான சேவைகள் குறித்த அறிவிப்பு வெளியிடப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
பெட்ரோல் விலை பிச்சுகிட்டு போக போகுது..வேலையைக் காட்டிய ரஷ்யா! இந்தியாவுக்கு காத்திருக்கும் சிக்கல்! -
ரஷ்யா எடுத்த அதிரடி முடிவு.. உச்சத்துக்கு போகும் பெட்ரோல், டீசல் விலை! இந்தியாவுக்கு நெருக்கடி! -
"இந்தியா எங்கள் நண்பன்! ஹார்முஸை தாராளமாக கடக்கலாம்.." அனுமதி தந்த ஈரான்! உற்று பார்க்கும் அமெரிக்கா -
தடுமாறுதே தங்க சந்தை.. மாறி மாறி சரிந்து எகிறும் தங்கத்தின் விலை! இப்போ வாங்கலாமா? வேண்டாமா? -
இந்தியாவுக்கு வழிவிட்ட ஈரான்.. கேஸ் தட்டுப்பாடு சரியாகுமா? இல்லத்தரசிகளே இதை கவனியுங்க! -
பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை அதிரடியாக குறைத்த மத்திய அரசு! விலை குறையுமா? விவரம் -
90% பேருக்கு தெரியாது.. கலர் கலராக இருக்கும் ரயில்கள்.. ஒவ்வொன்றுக்கும் என்ன அர்த்தம் தெரியுமா! -
அதிகாலையில் வந்த அறிவிப்பு! மோடியே சொன்னாலும்.. குறையாத பெட்ரோல், டீசல் விலை! -
போருக்கு நடுவே துபாய் செய்த காரியம்.. நெகிழ்ந்து போன இந்தியர்கள்.. இதை யாரும் எதிர்பார்க்கல -
பெட்ரோல், டீசலுக்கு தட்டுப்பாடு என வட மாநிலங்களில் பரவும் வதந்தி..பங்குகளை நோக்கி படையெடுத்த மக்கள்! -
அனைத்து அத்தியாவசிய மருந்துகளின் விலையும் உயர்கிறது.. ஏப்ரல் 1 முதல் அமல்.. அதிர்ச்சி அறிவிப்பு -
பெட்ரோல், டீசல் பற்றாக்குறை என பரவும் வதந்தி.. யாரும் நம்பாதீங்க! விளக்கமளித்த மத்திய அரசு












Click it and Unblock the Notifications