ஜி20 மாநாட்டில் சத்தமின்றி சாதித்த இந்தியா.. யூஏஇ செயலால் 'நோஸ் கட்' அதிர்ந்து பார்க்கும் பாகிஸ்தான்
டெல்லி: பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரை இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதியாக பாகிஸ்தானின் நட்பு நாடான ஐக்கிய அரபு அமீரகமே அங்கீகரிக்கும் வகையில், செயல்பட்டு இருப்பது பாகிஸ்தானுக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஜி 20 உச்சி மாநாடு அண்மையில் இந்தியாவில் நடைபெற்றது. இந்த ஜி 20 உச்சி மாநாட்டில், இந்தியா, மத்திய கிழக்கு, ஐரோப்பிய நாடுகளை கடல், ரயில், சாலை வழியாக இணைக்கும் மாபெரும் திட்டம் அறிவிக்கப்பட்டது. இந்த திட்டத்தில் இந்தியா, அமெரிக்கா, சவுதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம், ஐரோப்பிய ஒன்றியம், ஜெர்மனி, பிரான்ஸ், இத்தாலி நாடுகள் கையெழுத்திட்டன.

சீனாவின் பெல்ட் அண்ட் ரோடு திட்டத்திற்கு நேரடி சவாலாக இந்தியாவில் நடைபெற்ற ஜி 20 மாநாட்டில் அறிவிக்கப்பட்டது. ஜி 20 மாநாட்டில் அறிவிக்கப்பட்ட இந்த வழித்தடம் சுமார் 6,000 கி.மீ. நீளம் கொண்டதாகும். இதில் 3,500 கி.மீ. தொலைவு கடல் வழி பாதையாக உள்ளது. இந்தியாவில் இருந்து புறப்படும் சரக்கு கப்பல்கள் ஜெர்மனியை சென்றடைய தற்போது 36 நாட்கள் ஆகிறது.
புதிய பொருளாதார வழித்தட திட்டம் செயல்பாட்டுக்கு வந்தால் 14 நாட்களில் இந்தியாவில் இருந்து சரக்குகள் ஜெர்மனி சென்றடையும். இதனால், வர்த்தகம் அதிகரிப்பதோடு, பொருளாதாரமும் மேலும் வலுப்பெறும். பொருளாதார அடிப்படையில் இந்த திட்டம் மிகப்பெரும் திருப்பு முனையை ஏற்படுத்தும் என்பது ஒருபக்கம் இருக்க, பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரை இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதியாக சர்வதேச நாடுகளை அங்கீகரிக்கும் வகையிலான இந்தியாவின் முயற்சிக்கும் வெற்றி கிடைத்துள்ளதாக சர்வதேச நோக்கர்கள் கூறுகின்றனர்.
அதாவது, ஐக்கிய அரபு அமீரகத்தின் துணை பிரதமர் சாயிப் பின் சையது அல் நஹ்யான் தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் தளத்தில் ஜி 20 மாநாட்டில் பொருளாதார வழித்தட பாதை பற்றிய அறிவிப்பு குறித்த வீடியோவை பகிர்ந்து இருந்தார். அந்த வீடியோவில், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் வழியாக பொருளாதார பாதை செல்வதை குறிப்பிடும் வகையிலான வரைபட காட்சிகள் இடம் பெற்று இருந்தன.
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரை இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதியாக காட்டும் வீடியோவை ஐக்கிய அரபு அமீரகத்தின் துணை பிரதமரே பகிர்ந்து இருப்பது பாகிஸ்தானுக்கு பெரிய பின்னடைவாகவே பார்க்கப்படுகிறது. ஏனெனில் நீண்ட காலமாகவே ஆக்கிரமிப்பு காஷ்மீருக்கும் பாகிஸ்தான் உரிமை கொண்டாடி வரும் நிலையில், சர்வதேச அளவில் இந்தியாவின் நிலைப்பாட்டை பிற நாடுகளும் ஏற்றுக்கொண்டு இருப்பது ராஜாங்க ரீதியில் கிடைத்த வெற்றியாகவே பார்க்கப்படுகிறது.
-
கெத்து காட்டும் இந்தியா.. ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க இந்திய கப்பல்களுக்கு தனிப்பாதை கொடுத்த ஈரான்.. செம -
"பட்டாம்பூச்சி எஃபெக்ட்.." ஈரானில் வீசப்படும் குண்டால்.. மிக பெரிய சிக்கலில் தமிழக விவசாயிகள் -
ஈரானில் விழுந்த குண்டுகளால்.. இந்தியாவில் உயர்ந்த குடிநீர் விலை.. இன்னும் என்னவெல்லாம் நடக்குமோ! -
வந்தாச்சு LPG ATM.. இனி காத்திருக்கவே வேண்டாம்! வெறும் 2 நிமிடத்தில் புதிய சிலிண்டர் ஈஸியா வாங்கலாம் -
ஈரான் "அந்த" இடத்தில் அடித்தால் உலகத்திற்கே வலிக்கும்.. இன்டர்நெட் மொத்தமாக முடங்கும் ஆபத்து -
ஆடிப்போன அமெரிக்கா! சத்தமின்றி பாகிஸ்தான் செய்த காரியம்.. ஈரான் போருக்கு நடுவே இது வேறயா -
மாஸ் காட்டும் இந்தியா.. கடற்படையின் பலம் டபுளாகுது! உள்ளே வந்த ஐஎன்எஸ் தாராகிரி! -
அமீரகத்தில் குண்டு விழுந்தால் அமெரிக்கா அலறுவது ஏன்.. ஈரான் கையில் எடுத்துள்ள பகீர் திட்டம்! -
"பணத்தை கொடுத்துட்டு.. அழுது புலம்புங்க.. நான் கேட்கிறேன்.." வினோத பிஸ்னஸை ஆரம்பித்த இளைஞர் -
2 மாத வாடகை தான் அட்வான்ஸ்.. ஒழுங்கா கட்டலைனா வெளியேற்றலாம்! புதிய வாடகை விதிகள் சொல்வது என்ன -
ஏடிஎமில் கேட்டது ரூ.10,000.. கிடைச்சது ரூ.3 லட்சம்! ஆனாலும் வாடிக்கையாளர் பயங்கர சோகம்! ஏன் தெரியுமா -
பவரை காட்டிய இந்தியா! ஹார்முஸ் நீரிணையை கடந்து வரும் மேலும் 2 எண்ணெய் கப்பல்கள்!












Click it and Unblock the Notifications