அன்லாக் 4.0.. நாடு முழுவதும் செப்.7ம் தேதி முதல் மெட்ரோ சேவைக்கு அனுமதி.. மத்திய அரசு அறிவிப்பு
டெல்லி: அன்லாக் 4.0 தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் நாடு முழுவதும் செப்.7 ஆம் தேதி முதல் மெட்ரோ சேவைக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
கொரோனா பாதிப்பு காரணமாக நாடு முழுக்க லாக்டவுன் அமலில் உள்ளது. தற்போது தளர்வுகளுடன் கூட அன்லாக் 3.0 செயல்பாடுகள் அமலில் உள்ளது. இந்த மூன்றாம் கட்ட அன்லாக் செயல்பாடுகள் ஆகஸ்ட் 31ம் தேதியோடு முடிவிற்கு வருகிறது.

இந்த நிலையில் செப்டம்பர் 1ம் தேதி முதல் அன்லாக் 4.0 விதிமுறைகள் அமலுக்கு வருகிறது. பல முக்கிய தளர்வுகளுடன் கொரோனா அன்லாக் 4.0 விதிமுறைகள் அறிவிக்கப்பட்டுள்ளது.
அன்லாக் 4.0ல் மெட்ரோ ரயில் சேவைக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் செப்.7 ஆம் தேதி முதல் மெட்ரோ சேவைகள் தொடங்குகிறது.

செப்டம்பர் 30ம் தேதி வரை அன்லாக் 4.0 செயல்பாடுகள் அமலில் இருக்கும். மாநில அரசுகள் கட்டுப்பாட்டு பகுதிக்கு வெளியே லாக்டவுன் அறிவிக்க கூடாது. கட்டுப்பாட்டு பகுதிக்கு வெளியே மத்திய அரசின் அனுமதி இன்றி லாக்டவுன் அறிவிக்க கூடாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications