மொழியை வைத்து பிரிவினைவாத அரசியல் செய்கிறாராம் முதல்வர் ஸ்டாலின்: உபி முதல்வர் யோகி திடீர் பாய்ச்சல்
டெல்லி: இந்தி மொழி திணிப்பு என்ற பெயரில் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் பிரிவினைவாத அரசியல் செய்கிறார்; உத்தரப்பிரதேசத்தில் தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளை கற்றுத் தரும் போது, இந்தி மொழியை தமிழ்நாட்டு பல்கலைக் கழகங்களில் ஏன் கற்றுத் தரக் கூடாது? என்று உத்தரப்பிரதேச முத்ல்வர் யோகி ஆதித்யநாத் கேள்வி எழுப்பி உள்ளார்.
உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத் ஏ.என்.ஐ.-க்கு அளித்த பேட்டி: தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மதம், மொழி அடிப்படையில் பிரிவினையை உருவாக்குகிறார். மு.க.ஸ்டாலினுகு வாக்கு வங்கி நெருக்கடி இருக்கிறது. மொழி என்பது ஒற்றுமையை உருவாக்கத்தான் பயன்பட வேண்டும்; மொழியை வைத்து பிரிவினை செய்யக் கூடாது; இந்தியாவின் பழமையான மொழிகளில் சமஸ்கிருதத்தைப் போல தமிழும் ஒன்று. தமிழுக்கு நீண்ட வரலாறும் உயரிய பண்பாடும் உள்ளது.

இந்தி மொழியை ஏன் வெறுக்க வேண்டும்? ஒவ்வொரு மொழியையும் கற்றுக் கொள்ளத்தான் வேண்டும்.பிரதமர் நரேந்திர மோடி, வாரணாசியில் 3-வது காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சியை நடத்தி இருக்கிறார். மொழி என்பது ஒற்றுமைக்கானது என்பதை நமது தேசிய கீதம் வெளிப்படுத்துகிறது. மொழியின் அடிப்படையிலான பிரிவினைவாத நடவடிக்கைகள் குறித்து மக்கள் கவனமாகவும் எச்சரிக்கையாகவும் இருக்க வேண்டும்.
உத்தரப்பிரதேச மாநிலத்தில் தமிழ், தெலுங்கு உள்ளிட்ட பிற மொழிகள் கற்றுத்தரப்படுகின்றன. கன்னடம், மலையாளம் மொழிகளையும் கற்றுத்தருகிறோம். அத்துடன் வெளிநாட்டு மொழிகளையும் கற்றுத் தருகிறோம். தேசிய கல்விக் கொள்கையின் கீழ் இந்த மொழிகளை கற்றுத் தருகிறோம்.
உத்தரப்பிரதேசத்தில் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், மராத்தி மொழிகளை கற்றுத் தரும்போது இந்தி மொழியை தமிழ்நாட்டு பல்கலைக் கழகங்களில் ஏன் கற்றுத்தரக் கூடாது? நாட்டு நலனை கருத்தில் கொண்டுதான் செயல்பட வேண்டும்.
தொகுதி மறுசீரமைப்பு விவகாரம் தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெளிவான விளக்கம் தந்துள்ளார். அரசியல் லாபங்களுக்காக மாநிலங்களின் முதல்வர்கள், பிரதிநிதிகள் கூட்டத்தை தமிழக முதல்வர் ஸ்டாலின் நடத்தினார்; உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் விளக்கத்துக்குப் பிறகு இந்த விவகாரத்தில் பேசுவதற்கு எதுவுமே இல்லையே இவ்வாறு யோகி ஆதித்யநாத் தெரிவித்தார்.
முதல்வர் ஸ்டாலின் பதிலடி
முதல்வர் யோகி ஆதித்யநாத்தின் இந்த பேட்டிக்கு கண்டனம் தெரிவித்துள்ள தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின், தமிழகம் எந்த ஒரு மொழியையும் எதிர்க்கவில்லை; இந்தி மொழி திணிப்பைத்தான் எதிர்க்கிறோம்; எங்களுக்கு உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத் பாடம் நடத்த தேவை இல்லை என்றார்.
-
மோடியை மடக்கிய ஸ்டாலின்.. எங்களைக் காக்கப் பிரதமர் தயாரா? தேதி வாரியாக பட்டியல் போட்டு விளாசல்! -
3 முறை பிரதமர்.. பாஜகவிற்கே எடப்பாடி 27 தான் தந்துள்ளார்.. காங்கிரசுக்கு 28.. திமுகவினர் குமுறல் -
Election Exclusive: ரேசில் முந்திய எடப்பாடி.. சடன் ப்ரேக் போட்ட அறிவாலயம்! அதிருப்தி பங்காளிகளை சமாளிக்க புது வியூகம்! -
கமல்ஹாசனின் மநீம தேர்தலில் போட்டியிட வேண்டும்.. ஸ்டாலினுக்கு வேண்டுகோள் வைத்த திருமாவளவன்! -
தேமுதிகவிற்கு 10 தொகுதிகள் ஏன்? பின்னணியில் 2 ஜாதிகளின் ஓட்டுகளுக்கு குறி.. ஸ்டாலின் போடும் கணக்கு -
திமுகவுக்கு வார்னிங்.. ஸ்டாலின் VS எடப்பாடி VS விஜய்.. தமிழகத்தில் எந்த வயதினர் யாருக்கு ஆதரவு! சர்வே -
எல்லா சின்னமும் நம்ம சின்னம் தான்.. தவிடுபொடியான சதிகாரர்களின் எண்ணங்கள்! ஸ்டாலின் போட்ட ஆர்டர்! -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி












Click it and Unblock the Notifications