ஒரே பாலின திருமண விவகாரம்- நீதிமன்றம் விசாரிக்கவே கூடாது: உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு
டெல்லி: ஒரே பாலின திருமண விவகாரத்தை நீதிமன்றம் விசாரிக்கவே கூடாது உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு ஆணித்தரமாக வாதிட்டது.
ஒரே பாலினத்தவர் திருமணத்துக்கு அங்கீகாரம் கோரி உச்சநீதிமன்றத்தில் பல மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த வழக்கில் மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியது. பின்னர் இந்த வழக்குகள் அனைத்தையும் அரசியல் சாசன பெஞ்சுக்கு மாற்றி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. தலைமை நீதிபதி டிஒய் சந்திரசூட் தலைமையிலான அரசியல் சாசன பெஞ்ச் நேற்று முதல் இவ்வழக்கை விசாரித்து வருகிறது.

இந்த வழக்கில் மத்திய அரசு பதில் மனுத் தாக்கல் செய்தது. அதில், ஒரே பாலினத்தவர் திருமணம் என்பதும் அதற்கு அங்கீகாரம் கோருவதும் என்பதும் சமூகத்தில் மேல்தட்டு வர்க்கமாக இருப்பவர்களின் பார்வையும் கோரிக்கையும். இது சமூகத்தின் இதர பிரிவுகளிடையே பாதிப்பையும் தாக்கத்தையும் ஏற்படுத்தக் கூடும். இத்தகைய திருமணங்களுக்கு அங்கீகாரம் தருவது சமூக சமநிலையை பாதிக்கும்.
மேலும் இத்தகைய திருமணங்களுக்காக அங்கீகாரம் வழங்குதல் என்பது நாடாளுமன்றத்துக்கான அதிகாரம். இதில் நீதிமன்றம் தலையிட முடியாது. இத்தகைய மனுக்கள் விசாரணைக்கு உகந்ததா என்பதையும் நீதிமன்றம் ஆராய வேண்டும் என்றும் மத்திய அரசு தமது பதில் மனுவில் தெரிவித்தது. இப்பதில் மனு மீது இன்று விசாரணை நடைபெற்றது.
இன்றைய விசாரணையின் போது, ஒரு பாலின திருமண விவகாரத்தை நீதிமன்றம் விசாரிக்கவே கூடாது என மத்திய அரசு தரப்பில் ஆணித்தரமாக வாதிடப்பட்டது.
-
தங்கம் விலை பவுனுக்கு ரூ.13 ஆயிரம் சரிவு.. இன்னும் ரூ.14 ஆயிரம் வரை குறைய வாய்ப்பு -
சீனாவுக்குச் சென்ற ரஷ்ய கப்பல்கள் திடீரென இந்தியா நோக்கி யூ-டர்ன்! Oil வருது -
"இனி அவர்கள் முகத்தையே பார்க்க விரும்பல".. திருப்பரங்குன்றம் வழக்கில் நீதிபதி GR சுவாமிநாதன் காட்டம் -
லுலு மால் கோயம்புத்தூர்..நூல் நூலாக தொங்கிய சிக்கன் லாலிபாப்.. அடுத்து கோவையில் நடந்த பெரிய ட்விஸ்ட் -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஷாக்! அதிரடியாக தூக்கப்பட்ட ரேஷன் கார்டுகள்! 41.41 லட்சம் குளோஸ்! -
திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் கண்ட காட்சி.. ஆடிப்போன பொதுமக்கள்.. அதிர வைத்த ஊழியர்கள் -
கடன் சுமை.. வீட்டை ஜப்தி செய்த அதிகாரிகள்.. தெருவோரம் தூங்கிய சீரியல் நடிகை.. நெகிழ வைத்த மாற்றம்! -
சிவி சண்முகம் சர்ச்சை பேச்சு.. இன்ஸ்டா போஸ்டில் நயன்தாரா பதிலடி.. இப்படி சொல்லிட்டாரே! குவியும் கமெண்ட்ஸ்! -
கரூர் கூட்ட நெரிசலில் எடுக்கப்பட்டதாக சொல்லப்படும் டிரோன் காட்சி முதல்முறையாக வெளியீடு! -
அன்று 10 ஆயிரம் போட்டிருந்தால் இன்று ஒரு கோடி.. ஆச்சரியமாக வளர்ந்த பிரபல நிறுவனம் -
நள்ளிரவில் அமெரிக்கா எடுத்த முக்கியமான முடிவு.. மொத்தமாக சரிந்த தங்கம்.. இனிமேல் இப்படி தான்? -
ஆதவ் அர்ஜுனா உடைத்த அடுத்த பர்னிச்சர்.. தவெக நிர்மல்குமாரின் பதிவும் ஒரே வார்த்தையில் காலி












Click it and Unblock the Notifications