ஒரே பாலின திருமண விவகாரம்- நீதிமன்றம் விசாரிக்கவே கூடாது: உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு

Subscribe to Oneindia Tamil

டெல்லி: ஒரே பாலின திருமண விவகாரத்தை நீதிமன்றம் விசாரிக்கவே கூடாது உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு ஆணித்தரமாக வாதிட்டது.

ஒரே பாலினத்தவர் திருமணத்துக்கு அங்கீகாரம் கோரி உச்சநீதிமன்றத்தில் பல மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த வழக்கில் மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியது. பின்னர் இந்த வழக்குகள் அனைத்தையும் அரசியல் சாசன பெஞ்சுக்கு மாற்றி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. தலைமை நீதிபதி டிஒய் சந்திரசூட் தலைமையிலான அரசியல் சாசன பெஞ்ச் நேற்று முதல் இவ்வழக்கை விசாரித்து வருகிறது.

Urban elitist concept Same sex marriage: SC to hear Centre reply

இந்த வழக்கில் மத்திய அரசு பதில் மனுத் தாக்கல் செய்தது. அதில், ஒரே பாலினத்தவர் திருமணம் என்பதும் அதற்கு அங்கீகாரம் கோருவதும் என்பதும் சமூகத்தில் மேல்தட்டு வர்க்கமாக இருப்பவர்களின் பார்வையும் கோரிக்கையும். இது சமூகத்தின் இதர பிரிவுகளிடையே பாதிப்பையும் தாக்கத்தையும் ஏற்படுத்தக் கூடும். இத்தகைய திருமணங்களுக்கு அங்கீகாரம் தருவது சமூக சமநிலையை பாதிக்கும்.

மேலும் இத்தகைய திருமணங்களுக்காக அங்கீகாரம் வழங்குதல் என்பது நாடாளுமன்றத்துக்கான அதிகாரம். இதில் நீதிமன்றம் தலையிட முடியாது. இத்தகைய மனுக்கள் விசாரணைக்கு உகந்ததா என்பதையும் நீதிமன்றம் ஆராய வேண்டும் என்றும் மத்திய அரசு தமது பதில் மனுவில் தெரிவித்தது. இப்பதில் மனு மீது இன்று விசாரணை நடைபெற்றது.

இன்றைய விசாரணையின் போது, ஒரு பாலின திருமண விவகாரத்தை நீதிமன்றம் விசாரிக்கவே கூடாது என மத்திய அரசு தரப்பில் ஆணித்தரமாக வாதிடப்பட்டது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+