சிறு -குறு தொழில்துறைக்கு மத்திய அரசு செய்த உதவிகள் என்ன? வைகோ கேள்விக்கு பதிலளித்த மத்திய அரசு!

Subscribe to Oneindia Tamil

டெல்லி: சிறு -குறு தொழில்துறைக்கு மத்திய அரசு செய்த உதவிகள் என்ன? என நாடாளுமன்றத்தில் வைகோ எழுப்பிய கேள்விக்கு மத்திய இணை அமைச்சர் பிரதாப் சிங் வர்மா பதிலளித்துள்ளார்.

அதில், குறு, சிறு, நடுத்தர நிறுவனங்களுக்கு அவசர கடன் வரி உத்தரவாதத் திட்டம் (ECLGS) கொண்டு வரப்பட்டது என்பன உள்ளிட்ட இன்னும் பல தகவல்களை வெளியிட்டுள்ளார்.

இது தொடர்பான விவரம் வருமாறு;

வைகோ கேள்வி

வைகோ கேள்வி

கடந்த மூன்று ஆண்டுகளில் புதிய சவால்களை எதிர்கொள்வதற்கும், உயிர்வாழ்வதற்கும் சிறு, குறு தொழில் துறைக்கு உதவுவதற்கு ஒன்றிய அரசு எடுத்த முயற்சிகள் என்ன? ஒன்றிய அரசால் அறிவிக்கப்பட்ட சலுகைகள் மற்றும் நிவாரணங்கள் உரியவர்களுக்கு கிடைக்கிறதா என்பதைக் கண்டறிய ஏதேனும் கணக்கெடுப்பு நடத்தப்பட்டுள்ளதா? அப்படியானால், அதன் விவரங்கள்; இல்லையெனில், துறை புத்துயிர் பெற சரியான நடவடிக்கைகள் எடுக்கப்படுமா? இவ்வாறு வைகோ வினவியிருந்தார்.

அவசர கடன்

அவசர கடன்

இதற்கு குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கான ஒன்றிய இணை அமைச்சர் பானு பிரதாப் சிங் வர்மா அளித்துள்ள பதிலின் விவரம்; அவசர கடன் வரி உத்தரவாதத் திட்டம் (ECLGS): குறு, சிறு, நடுத்தர நிறுவனங்கள் உள்ளிட்ட வணிகங்களுக்கு பிணைய இலவச தானியங்கு கடன்களை வழங்குவதற்காக மே, 2020 இல் ஆத்ம நிர்பார் பாரத் தொகுப்பின் ஒரு பகுதியாக இந்தத் திட்டம் அறிவிக்கப்பட்டது.

 சுயசார்பு இந்தியா (SRI) நிதி

சுயசார்பு இந்தியா (SRI) நிதி

2020 ஆம் ஆண்டு மே மாதம் ஆத்ம நிர்பார் பாரத் தொகுப்பின் ஒரு பகுதியாக, சுயசார்பு இந்திய நிதி என்ற பெயருடன், சிறு, குறு, நடுத்தர நிறுவனங்களில் சமபங்கு நிதியாக உட்செலுத்துவதற்காக ஒன்றிய அரசு அறிவித்துள்ளது. இதனால் சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் வளர்ந்து பெரிய அளவில் மாறுவதற்கான சாத்தியமும், நம்பகத்தன்மையும் இருக்கிறது. இந்த முயற்சியானது குறு, சிறு, நடுத்தரத் தொழில் துறையின் தகுதியான பிரிவுகளுக்கு வளர்ச்சி மூலதனத்தை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

துணைக் கடன்

துணைக் கடன்

கடன் உத்தரவாதத் திட்டத்தின் துணை கடன் (CGSSD): இந்த திட்டம் மே 2020 இல் ஆத்ம நிர்பார் பாரத் தொகுப்பின் ஒரு பகுதியாக அறிவிக்கப்பட்டது. அழுத்தத்திற்கு ஆளான குறு, சிறு, நடுத்தரத் தொழில் ஊக்குவிப்பாளர்களுக்கு, கடன் வசதியை வழங்கும் நோக்கில், சிறப்புக் குறிப்புக் கணக்கு (SMA)-2 மற்றும் செயல்படாத சொத்துக் கணக்குகள் (NPA), கடன் வழங்கும் நிறுவனங்கள் இந்திய ரிசர்வ் வங்கி வழிகாட்டுதல்களின்படி மறுசீரமைக்கத் தகுதியுடையவை. இத்திட்டத்தின் கீழ், ஊக்குவிப்பாளர் குறு, சிறு, நடுத்தரத் தொழில்களில் உள்ள வருமானத்தில் அரை பங்கு துணைக் கடனாக செலுத்துவார்கள்.

பாரத ஸ்டேட் வங்கி

பாரத ஸ்டேட் வங்கி

பாரத ஸ்டேட் வங்கி (SBI) அவசர கடன் வரி உத்தரவாதத் திட்டம் குறித்த 06.01.2022 தேதியிட்ட ஆய்வு அறிக்கையை அக்குழுமத்தின் தலைமைப் பொருளாதார ஆலோசகர் வெளியிட்டுள்ளார். அதில், "கிட்டத்தட்ட 13.5 லட்சம் குறு, சிறு, நடுத்தர கணக்குகள் அவசர கடன் வரி உத்தரவாதத் திட்டத்தால் (மறுசீரமைக்கப்பட்டவை உட்பட) சேமிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் 93.7 சதவீதம் கணக்குகள் குறு மற்றும் சிறு வகையைச் சேர்ந்தவை" என்று தெரிவித்துள்ளார். இவ்வாறு அமைச்சர் பதில் அளித்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+