முத்தலாக் மசோதா தாக்கல்- வெட்கத்துக்கும் வேதனைக்கும் உரிய நாள்: ராஜ்யசபாவில் சீறிய வைகோ
Recommended Video
டெல்லி: ராஜ்யசபாவில் முத்தலாக் மசோதா தாக்கல் செய்யப்பட்ட இன்றைய நாள் வெட்கத்துக்கும் வேதனைக்கும் உரிய நாள் என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ சீறினார்.
லோக்சபாவில் முத்தலாக் மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்த நிலையில் ராஜ்யசபாவில் முத்தலாக் மசோதாவை நிறைவேற்ற பாஜக அரசு படுதீவிரமாக முயற்சிகள் மேற்கொண்டுள்ளது.

இன்று காலை மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத், ராஜ்யசபாவில் முத்தலாக் மசோதாவை தாக்கல் செய்தார். அப்போது அவர், இந்த நாள் வரலாற்றுச் சிறப்புக்குரிய நாள் என்றார். உடனே வைகோ ஆவேசமாக குறுக்கிட்டார்.
மேலும், இந்த நாள் வெட்கத்துக்கும் வேதனைக்கும் உரிய நாள் என பதிலடி கொடுத்தார். வைகோவின் ஆவேசத்தைப் பார்த்த ராஜ்யசபா தலைவர் வெங்கையா நாயுடு, மூத்த உறுப்பினராகிய வைகோ, நீங்கள் பொறுமை காக்க வேண்டும் என்றார்.
இதனையடுத்து ரவிசங்கர் பிரசாத் முத்தலாக் மசோதாவை தாக்கல் செய்தார். இம்மசோதாவை நிறைவேற்ற தமது கூட்டணி கட்சிகள் சிலவற்றை வெளிநடப்பு செய்ய வைக்கும் முயற்சியிலும் பாஜக இறங்கியுள்ளது.
கருப்பு சால்வை வேண்டும்...
முன்னதா ராஷ்ட்ரீய ஜனதா தளம் கட்சி எம்.பி ராசிரியர் மனோஜ்குமார் ஜா தலைவர் வைகோவை சந்தித்தார். அப்போது, மிஸ்டர் வைகோ, எனக்கும் ஒரு கருப்பு சால்வை வேண்டும். I have to fight. உங்களைப் போல் நானும் போராட வேண்டும் என்றார்.
அதற்கு வைகோ, கண்டிப்பாகக் கொண்டு வந்து தருகிறேன். என் அன்புச் சகோதரர் லாலு பிரசாத் உடல் நலம் குன்றி இருப்பது எனக்கு வேதனை அளிக்கின்றது. அவரது நலன் விழைவதைக் கூறவும் என்றார்.












Click it and Unblock the Notifications