வந்தே பாரத் விமானம்.. ஏஜெண்டுகள் கூடுதல் கட்டணம் கேட்டால் தராதீங்க.. மத்திய அரசு அறிவுரை
டெல்லி: வந்தே பாரத் விமானங்களில் டிக்கெட் பதிவு செய்ய இடைத்தரகர்களுக்கு கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டிய அவசியமில்லை என விமான போக்குவரத்து துறை அமைச்சகம் வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கு அறிவுரை வழங்கி உள்ளது.
கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் 23ம் தேதி முதல் சர்வதேச விமான போக்குவரத்து சேவை நிறுத்தப்பட்டது. அதன்பிறகு இன்று வரை தொடங்கப்படவில்லை. வெளிநாடுகளில் சிக்கி தவித்து வரும் இந்தியர்களை மீட்க மத்திய அரசு 'வந்தே பாரத் ' திட்டத்தின் கீழ் பல்வேறு நாடுகளுக்கு விமானங்களை இயக்கி வருகிறது.

கடந்த மே 6ம் தேதி முதல் சிறப்பு விமானங்கள் இயக்கப்பட்டு வருகிறது. இந்த சிறப்பு விமானங்கள் இயக்கப்பட்டு வருகிறது. இந்த விமானங்கள் வாயிலாக பல லட்சம் இந்தியர்கள் தாய் நாடு திரும்பி உள்ளனர்.
இன்னும் ஏராளமான இந்தியர்கள் வளைகுடா நாடுகளிலும், ஐரோப்பாவில் உள்ள பல நாடுகளில் இருக்கிறார்கள். இவர்கள் நாடு திரும்ப தொடர்ந்து அரசு வந்தே பாரத் திட்டத்தின் கீழ் விமானங்களை அறிவித்து வருகிறது. இந்த விமானங்களில் செல்ல கூடுதல் கட்டணம் செலுத்த தேவையில்லை என மத்திய அரசு அறிவித்துள்ளது.
இது தொடர்பாக விமான போக்குவரத்து துறை அமைச்சகம் நேற்று வெளியிட்டிருந்த அறிவிப்பில், "வந்தே பாரத் திட்டத்தின் கீழ் சிறப்பு விமானங்களுக்கான டிராவல் ஏஜெண்டுகள் மூலம் டிக்கெட்டை பதிவு செய்யும் பயணிகள் ஏர் இந்தியா விமானத்தின் இணையதளத்தில் குறிப்பிட்டுள்ள கட்டணத்தை செலுத்தினால் போதும். கூடுதல் தொகையை செலுத்த வேண்டிய அவசியம் இல்லை.
டிராவல் ஏஜெண்டுகள் கூடுதல் கட்டணம் கேட்பதாக தெரிந்தால் பயணிகள் gmsm@airindia என்ற இணையதள முகவரிக்கு புகார் தெரிவிக்கலாம்" என அறிவிக்கப்பட்டுள்ளது.
-
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
இந்தியாவை உலுக்கும் "ஜாம்பி" போதை மருந்து.. 2 மணி நேரமா இன்ச் கூட அசையல.. திகிலூட்டும் வீடியோ! -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை -
"எங்க இப்போ கை வை பார்க்கலாம்.." ஹார்முஸை முடக்கிய ஈரான் தளபதி படுகொலை.. இஸ்ரேல் அறிவிப்பு! -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
தோழமை கட்சிகள்.. காங்கிரஸ் பெயரை தவிர்த்த ஸ்டாலின்.. கோபம் உச்சத்தில்.. சத்தமின்றி சொன்ன மெசேஜ்! -
பழம் விழுந்தால் லாபம் எடப்பாடி பழனிசாமிக்கு.. அதிமுக வைத்த செக்கில் சிக்கிய கூட்டணி, திமுக விஐபிகள்! -
ஸ்டாலின் VS எடப்பாடி VS விஜய்.. எந்தெந்த ஜாதியினர் யாருக்கு ஆதரவு! News 18 சர்வே ரிசல்ட் இதோ -
சொத்து வைத்திருப்போர் அலர்ட்! 5 நாளில் இதை செய்யாவிட்டால் நில பத்திரப்பதிவில் லட்சக்கணக்கில் நஷ்டம்?












Click it and Unblock the Notifications