வங்கதேசத்துக்கான புதிய இந்திய தூதராக தமிழர் விக்ரம் குமார் துரைசாமி நியமனம்
Subscribe to Oneindia Tamil
டெல்லி: வங்கதேசத்துக்கான புதிய இந்திய தூதராக தமிழரான விக்ரம் குமார் துரைசாமியை மத்திய அரசு நியமித்துள்ளது.
தமிழரான விக்ரம் குமார் துரைசாமி, 1992-ம் ஆண்டு மத்திய அரசு பணியில் பத்திரிகையாளராக சேர்ந்தார். ஓராண்டு காலம் பத்திரிகையாளராக அவர் பணிபுரிந்தார்.

பின்னர் வெளியுறவு அமைச்சகத்தில் பணியில் சேர்ந்தார். முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங்கின் செயலாளராகவும் விக்ரம் குமார் துரைசாமி பணியாற்றியவர்.
ஆப்கானிஸ்தான், உஸ்பெஸ்கிஸ்தான் தூதராக விக்ரம் குமார் துரைசாமி பணியாற்றி உள்ளார். தற்போது வங்கதேசத்துக்கான புதிய இந்திய தூதராக விக்ரம் குமார் துரைசாமியை மத்திய அரசு நியமித்துள்ளது.
அண்மையில் ஐக்கிய நாடுகள் சபைக்கான இந்தியாவின் நிரந்த தூதராக தமிழரான டி.எஸ். திருமூர்த்தியை மத்திய அரசு நியமித்திருந்தது குறிப்பிடத்தக்க
டெல்லி












Click it and Unblock the Notifications