நல்ல பாம்பின் உயிரை காப்பாற்ற, உயிரை துச்சமென மதித்து இளைஞர்கள் செய்த பகீர் காரியம்!
டெல்லி: நல்ல பாம்பின் உயிரை காப்பாற்ற, உயிரை துச்சமென மதித்து இளைஞர்கள் கிணற்றில் செய்த காரியத்திற்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.
பாம்பு என்றால் படையும் நடுங்கும். அதுவும் விஷம் அதிகம் உள்ள நாகப்பாம்பு(நல்ல பாம்பு) என்றால் நிச்சயம் பலருக்கும் அச்சம் தரும்.
நல்ல பாம்பு குளம் , ஆறு போன்ற தண்ணீரில் இருந்தால் அது அதிக ஆக்ரோஷத்துடன் இருக்கும். அப்போது பாம்புகளிடம் சிக்கினால் சிக்கல் தான்.
குதித்த இளைஞர்கள்
இந்நிலையில் கிணற்றில் நல்ல பாம்பு ஒன்று வெளியேற முடியாமல் நீந்தியபடி இருந்தது. அதை கண்ட இளைஞர் ஒருவர் உயிரை பற்றி கவலைப்படாமல் பாம்பை தண்ணீரின் கரையோரத்திற்கு அழைத்து சென்றனர்.
கொத்த முயற்சி
பின்னர் ஒருவர் கிணற்றில் ஒரத்திற்கு வந்த பாம்பை அப்படியே அலேக்காக தூக்குகிறார். அப்போது பாம்பு அவரை கொத்துவதற்கு அடுத்தடுத்து முயற்சிக்கிறது. அதை பொருட்படுத்தாமல் பாம்பை காப்பாற்றும் பொருட்டு அதை கையில் லாவகமாக பிடித்த படி நிற்கிறார்.
உயிருடன் மீட்பு
இன்னொரு இளைஞர், இன்னும் கொஞ்ச தூரம் கிணற்றில் இறங்கி, பாம்பின் வால் பகுதியை வாங்குகிறார். அவரை பாம்பு கொத்த முயற்சிக்கிறது. ஆனால் அவர் லாவகமாக மேலே உள்ள தன் நண்பரிடம் பாம்பை ஒப்படைக்கிறார். அவர் பாம்பை வாங்கி குச்சியில் மடக்கி பிடித்தார். நல்ல பாம்பை நான்கு இளைஞர்கள் கிணற்றில் இருந்து உயிருடன் மீட்டு காட்டில் விட்டனர்.
|
அரிதானது
இளைஞர்கள் உயிரையும் பொருட்படுத்தாமல் தைரியமாக கிணற்றில் குதித்து பாம்பை காப்பாற்றிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. பாம்பை பிடித்த இளைஞர்களின் வீடியோவை டெல்லியைச் சேர்ந்த ஐஆர்எஸ் அதிகாரி நவீத் திரும்பூ வெளியிட்டு பாராட்டி உள்ளார், அவர் தனது பதிவில் நீரில் மூழ்காமல் ஒரு நாகத்தை காப்பாற்ற, இளைஞர் கிணற்றில் குதித்துள்ளார். பாம்பை காப்பாற்ற இப்படி ஒருவர் உயிரை பணயம் வைப்பது அரிது. மிகவும் போற்றத்தக்கது என்று கூறியுள்ளார்