Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

இருளில் மூழ்கப்போகிறது பாகிஸ்தான்.. சாப்பாட்டுக்கும் சிக்கல்.. முதுகெலும்பை உடைத்த இந்தியா!

Subscribe to Oneindia Tamil

டெல்லி: காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்குப் பதிலடியாக, இந்தியா எடுத்துள்ள நடவடிக்கை காரணமாக பாகிஸ்தானுக்கு கடுமையான பாதிப்புகள் ஏற்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. உணவு உற்பத்தி குறைவு, மின்தடை, பொருளாதார நெருக்கடி எனப் பல வழிகளில் பாகிஸ்தான் பாதிக்கப்படக்கூடும்.

கடந்த செவ்வாய்க்கிழமை பஹல்காமின் பைசரன் பள்ளத்தாக்கில் நடந்த கொடூரமான பயங்கரவாத தாக்குதலில் 28 பேர் உயிரிழந்தனர். இதில் இரண்டு வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளும் அடங்குவர். பலர் படுகாயமடைந்தனர். இந்தத் தாக்குதலுக்குப் பதிலடி கொடுக்கும் விதமாக இந்தியா பல்வேறு கடுமையான நடவடிக்கைகளை எடுத்துள்ளது. இதில் முக்கியமானது, 1960ஆம் ஆண்டு சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை நிறுத்திவைத்த முடிவு.

pakistan india river kashmir

இந்தியா சிந்து நதி நீர் ஒப்பந்தத்தின் கீழ் தனது கடமைகளை நிறுத்திவைத்தது, பஹல்காம் தாக்குதலுக்குப் பிறகு இந்தியாவின் வியூகத்தில் ஒரு குறிப்பிடத்தக்க மாற்றத்தை இது காட்டுகிறது. இந்த ஒப்பந்தத்தை முடிவுக்குக் கொண்டுவருவது பாகிஸ்தானின் விவசாயம், எரிசக்தி மற்றும் பொருளாதாரம் மீது விரிவான விளைவுகளை ஏற்படுத்தும். ஏனெனில் சிந்து நதி அமைப்பு அண்டை நாட்டின் உயிர்நாடியாகக் கருதப்படுகிறது.

பாகிஸ்தானுக்கு மூன்று விதமான பாதிப்புகள்

பஹல்காம் தாக்குதலுக்குப் பிறகு இந்திய அரசு பல கடுமையான முடிவுகளை எடுத்துள்ளது. புதன்கிழமை நடந்த பாதுகாப்புக்கான அமைச்சரவைக் குழு (CCS) கூட்டத்தில், 1960 சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை உடனடியாக நிறுத்திவைக்க முடிவு செய்யப்பட்டது. மேலும் இந்தியா கட்டியுள்ள அல்லது கட்டிவரும் அணைகளால் பாகிஸ்தானுக்கு ஆப்பு ரெடியாகிறது..

இந்த ஒப்பந்தத்தின் கீழ், சிந்து, செனாப், ஜீலம், பியாஸ், ரவி மற்றும் சட்லஜ் நதிகளிலிருந்து பாகிஸ்தான் தண்ணீர் பெற்று வந்தது. இந்த நதிகள் அனைத்தும் இந்தியா வழியாகப் பாகிஸ்தானுக்குச் சென்று, குடிநீர், நீர்ப்பாசனம், மின் உற்பத்தி போன்றவற்றுக்குப் பயன்படுத்தப்படுகின்றன. சிந்து நதி நீர் ஒப்பந்தம் நிறுத்திவைக்கப்பட்டதால் பாகிஸ்தான் கலக்கமடைந்துள்ளது.

pakistan india river kashmir

முக்கிய அணைகள் மற்றும் அவற்றின் தாக்கம்

  • ஜீலம்: 2018 முதல் செயல்பாட்டுக்கு வந்த மங்களா அணை, ஒரு முக்கிய துணை நதியிலிருந்து தண்ணீரைத் திசை திருப்புகிறது.
  • ரட்லே (செனாப்): கட்டுமானத்தில் உள்ளது, பாகிஸ்தான் பஞ்சாபிற்கான நீர் ஓட்டத்தை மேலும் குறைக்கலாம்.
  • ஷாபூர் கண்டி (ராவி): ராவி நீர் இந்திய கால்வாய்கள் வழியாகச் செல்லப்படுகிறது, பாகிஸ்தானுக்கு தண்ணீரை குறைக்கிறது.
  • உஜ் (ராவி): திட்டமிடப்பட்டுள்ள ஒரு அணை, பாகிஸ்தான் நீர் இருப்பை மேலும் குறைக்கும்.

பாகிஸ்தானின் பல நகரங்கள் இருளில் மூழ்கக்கூடும்

சிந்து நதி நீர் ஒப்பந்தம் நிறுத்திவைக்கப்பட்டதன் காரணமாக, நீண்ட காலமாகப் பொருளாதார நெருக்கடியைச் சந்தித்து வரும் அண்டை நாடான பாகிஸ்தான், ஒவ்வொரு துளி நீருக்கும் Depend ஆகக்கூடும். மேலும், தண்ணீர் இல்லாமல் பாகிஸ்தானில் உணவு உற்பத்தியில் பெரும் சரிவு ஏற்படலாம், இது லட்சக்கணக்கான மக்களுக்கு உணவு நெருக்கடியை உருவாக்கும். வீடுகளுக்குச் செல்லும் குடிநீர் மற்றும் வயல்களின் நீர்ப்பாசனத்திற்காக பாகிஸ்தான் சிந்து நதி நீரைச் சார்ந்துள்ளது. இது அந்நாட்டின் பல நீர்மின் திட்டங்களுக்கும் முக்கியமானது. இத்தகைய சூழ்நிலையில், நீர் நிறுத்தத்தால் பாகிஸ்தானின் பல நகரங்கள் இருளில் மூழ்கக்கூடும். மின்சாரம் இல்லாமல் வணிகம் முடங்குவதன் விளைவு நேரடியாக அந்நாட்டின் பொருளாதாரம் மீது தெரியும்.

pakistan india river kashmir

பாகிஸ்தானின் முதுகெலும்பை உடைக்கும் 5 அம்சங்கள்

  • விவசாயம்: பாகிஸ்தானின் நீர்ப்பாசன நிலங்களில் சுமார் 80% சிந்து நதி நீரைச் சார்ந்துள்ளது. நீர் தடுப்பால் கோதுமை, அரிசி மற்றும் பருத்தி போன்ற முக்கியப் பயிர்களின் மகசூல் குறையக்கூடும். இது அந்நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்திக்கும் (GDP) உணவுப் பாதுகாப்புக்கும் முக்கியமானது. கூடுதலாக, நீர்ப்பாசனம் குறைவதால் உப்புத்தன்மை பிரச்சனை மோசமடையக்கூடும். இது ஏற்கனவே 43% விவசாய நிலங்களைப் பாதிக்கிறது.
  • மின்சாரம்: தர்பேலா மற்றும் மங்களா அணைகளிலிருந்து உற்பத்தி செய்யப்படும் நீர்மின்சாரம் (இது மின்சாரத் தேவையில் சுமார் 30% பூர்த்தி செய்கிறது) நீர் ஓட்டம் குறைவதால் பாதிக்கப்படக்கூடும். சிந்து நதி அந்நாட்டின் பல நீர்மின் திட்டங்களுக்கு முக்கியமானது என்பது குறிப்பிடத்தக்கது.
  • வேலைவாய்ப்பு: நீர் நிறுத்தத்தால் பயிர் மகசூல் குறைந்து, பாகிஸ்தானின் கிராமப்புற வேலைவாய்ப்பு கடுமையாகப் பாதிக்கப்படும். இது நகர்ப்புறங்களுக்கு மக்கள் குடிபெயர்வதை அதிகரித்து, லாகூர் மற்றும் கராச்சி போன்ற முக்கிய நகரங்களில் அழுத்தத்தை உருவாக்கும்.
  • மாகாணங்களுக்கிடையே மோதல்கள்: மாகாணங்களுக்கிடையே நீர் பங்கீடு தொடர்பாக மோதல் ஏற்படக்கூடும். நீர் ஓட்டம் குறைவது மாகாணங்களுக்கிடையே மோதல்களுக்கு வழிவகுக்கும். இது 1991 நீர் ஒப்பந்தத்தின் கீழ் இருந்த பழைய பதற்றத்தை மீண்டும் காட்டக்கூடும். அப்போது பஞ்சாப், சிந்து, கைபர் பக்துன்க்வா மற்றும் பலூசிஸ்தான் மாகாணங்கள் நீர் ஒதுக்கீடு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன. ஆனால் இந்த ஒப்பந்தம் பெரும் சர்ச்சையை ஏற்பட்டது.
  • ஏற்றுமதி பாதிப்பு: இந்தியாவின் நீர் நிறுத்தம் பாகிஸ்தானின் மொத்த உள்நாட்டு உற்பத்தி, அந்நிய செலாவணி கையிருப்பு மற்றும் பாகிஸ்தானிய ரூபாயை கூட பாதிக்கக்கூடும். உண்மையில், நீர் ஓட்டம் குறைந்தால் பாஸ்மதி அரிசி உட்படப் பல விவசாய ஏற்றுமதிகள் குறையலாம். இது அந்நிய செலாவணி கையிருப்பைப் பாதித்து, பாகிஸ்தானிய ரூபாயை பலவீனப்படுத்தும்.
More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+