கால்வன் பள்ளத்தாக்கு: சீனா ராணுவத்துக்கு எதிராக விடிய விடிய 20 மணிநேர யுத்தம்: இந்தோ- திபெத் படை
டெல்லி: லடாக் எல்லையில் கால்வன் பள்ளத்தாக்கை சீனா ஆக்கிரமிப்பதை எதிர்த்து விடிய விடிய சுமார் 20 மணிநேரம் யுத்தம் நடத்தியதாக இந்தோ- திபெத் எல்லை பாதுகாப்பு படையினர் தெரிவித்துள்ளனர்.
Recommended Video
லடாக் கிழக்கு எல்லையின் கால்வன் பள்ளத்தாக்கை ஆக்கிரமிக்க சீனா முயன்றது. சீனாவின் இந்த முயற்சிக்கு நமது ராணுவ வீரர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

அப்போது அதாவது ஜூன் 15-16ல் நடந்த இருதரப்பு மோதலில் நமது வீரர்கள் 20 பேர் வீரமரணம் அடைந்தனர். இது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. ஆனால் சீனா 42 வீரர்களை இழந்தது. இதனை சீனா அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை.
இதனைத் தொடர்ந்து இந்தியா- சீனா இடையே யுத்த பதற்றம் உருவானது. இதனை தவிர்க்கும் வகையில் தொடர்ந்து பல மாதங்களாக பல்வேறு கட்ட பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டு வருகின்றன. ஆனாலும் சீனா தரப்பு ஆக்கிரமிப்பு முயற்சியை கைவிடுவதாக இல்லை.
இதனிடையே எல்லையில் நடந்த மோதல் தொடர்பாக இந்தோ- திபெத் எல்லை பாதுகாப்பு படை விளக்கம் அளித்திருக்கிறது. அதில், சீனாவுக்கு எதிராக 17 முதல் 20 மணிநேரம் வரை யுத்தம் நடத்தி இருக்கிறோம். விடிய விடிய சீனாவின் கல்லெறி தாக்குதல்களை எதிர்கொண்டு அதை தீரத்துடன் முறியடித்திருக்கிறோம் என குறிப்பிடப்பட்டுள்ளது.
சீனாவுடனான மோதலில் படுகாயமடைந்த வீரர்களை பின்களத்துக்கு- மருத்துவமனைக்கு கொண்டு வருவதிலும் இந்தோ- திபெத் எல்லை பாதுகாப்பு படையினர் தீவிரமாக பணியாற்றினர் எனவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. சீனாவுடனான மோதலை முறியடித்த 249 இந்தோ திபெத் எல்லை படையினருக்கு சுதந்திர தினத்தை முன்னிட்டு விருதுகளும் அறிவிக்கப்பட்டுள்ளன.
-
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வெடித்து சிதறிய இரும்பு குழம்பு.. 8 தொழிலாளர்கள் மரணம்.. விசாகப்பட்டினம் ஸ்டீல் ஆலையில் பயங்கரம்! -
கிட்டத்தட்ட ரூ. 25 குறைவு! ஆனால் தப்பி தவறியும் "இந்த" பெட்ரோலை உங்க காரில் போடாதீங்க! ஏன் தெரியுமா -
கேஸ் சிலிண்டர் விலை ரூ.1,600.. விலை உயர்வை அறிவித்த கையோடு.. மத்திய அரசு சொன்ன முக்கியமான பாயிண்டு -
"இந்தியாவில் இப்படி வாழ முடியுமா? கேள்வி எழுப்பிய பிரபலத்திற்கு இந்தியர்கள் தந்த தரமான பதிலடி -
இன்னும் சில மணி நேரம் தான்.. பூமியை நோக்கி வரும் 'சூரிய புயல்'! மெகா அலர்ட் கொடுத்த நாசா -
அலறவிடும் இந்தியா.. அணு ஆயுதம் குறித்து வெளியான முக்கிய அப்டேட்! பதுங்கும் பாகிஸ்தான்! -
திருமாவளவன் குற்றச்சாட்டால் ஆடிப்போன ராகுல், சோனியா.. அடுத்து என்ன செய்யப்போகிறது காங்கிரஸ்? -
துபாயில் கோர விபத்து.. இந்தியர்கள் துடிதுடித்து மரணம்.. நொடியில் நேர்ந்த பயங்கரம்.. என்ன நடந்தது? -
இந்தியா கூட்டணியில் மிஸ்ஸான விஜய் கட்சி.. காங்கிரஸ் ஒன்னு சொல்ல.. திருமா வேற சொல்ல..! பெரிய குழப்பம் -
காங்கிரஸின் அணுகுமுறை இப்படித்தான் இருக்கும் என்றால்.. இந்தியா கூட்டணியை அதிர வைத்த ஜான் பிரிட்டோ எம்பி -
ராகுலுக்கு ஷாக் கொடுத்த திமுக! INDIA கூட்டணி தலைவர்களுடன் இடம்பெற்ற பேனர்.. காங். இதை எதிர்பார்க்கல!












Click it and Unblock the Notifications