கடந்த 2 வருடங்களில் 3.7 லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளது.. மத்திய அரசு அதிரடி அறிக்கை!
கடந்த 2 வருடங்களில் மட்டும் 379,000 வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டு இருப்பதாக பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு தெரிவித்து இருக்கிறது.
டெல்லி: கடந்த 2 வருடங்களில் மட்டும் 379,000 வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டு இருப்பதாக பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு தெரிவித்து இருக்கிறது.
கடந்த சில நாட்களுக்கு முன் தேசிய மாதிரி சர்வே (The National Sample Survey Office's Periodic Labour Force Survey) அமைப்பு அறிக்கை ஒன்றை வெளியிட்டது. அதன்படி இந்தியாவில் கடந்த 45 வருடங்களில் இல்லாத அளவிற்கு மிக மோசமான வேலைவாய்ப்பு பிரச்சனை நிகழ்வதாக அறிக்கையில் தகவல் வெளியாகி இருந்தது.
இது பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த தகவலை மத்திய அரசு மறுத்து இருந்தது. மத்திய பாஜக அரசு நிறைய வேலைவாய்ப்புகளை உருவாக்கி உள்ளது, அதுகுறித்த அறிக்கை விரைவில் வெளியாகும் என்று கூறியது.

வேலைவாய்ப்பு
இந்த நிலையில் மத்திய அரசு தாக்கல் செய்த இடைக்கால பட்ஜெட்டில் இதற்கான அறிக்கை உள்ளது. அமைச்சர் பியூஸ் கோயல் தாக்கல் செய்துள்ள இந்த அறிக்கையில், கடந்த 2 வருடங்களில் மட்டும் 379,000 வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. 2017-2018ம் வருடம் மட்டும் 251,279 வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டு இருப்பதாக கூறப்பட்டு இருக்கிறது.

எங்கு உருவாக்கும்
இந்த நிலையில் மொத்தமாக இரண்டு வருடத்தில் 379,544 வேலைவாய்ப்பு உருவாக்கப்பட்டு இருக்கிறது. வரும் மார்ச் 1ம் தேதியோடு இது 36,15,770 ஆக அதிகரிக்கும் என்றுள்ளது. முக்கியமாக ரயில்வே துறையில்தான் அதிக வேலைவாய்ப்பு உருவாக்கப்பட்டு இருக்கிறது. அதேபோல் போலீஸ் மற்றும் வருமான வரித்துறையில் அதிக வேலை வாய்ப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது.

எங்கு
2019 மார்ச்சில் ரயில்வேத்துறையில் புதிதாக 98,999 வேலைகள் ஏற்படும். அதேபோல் இந்த வருடம் 79,353 வேலைகள் புதிதாக போலீஸ் துறையில் உருவாக்கப்படும். இரண்டில் இருந்துதான் இந்த வருடம் அதிக வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும்.

இன்னும் சில
வருமான வரித்துறையில் 80,143 வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும். போலீஸ் துறை மற்றும் ரயில்வேத்துறை இல்லாமல் இந்த துறையில்தான் அதிக வேலைவாய்ப்பு உருவாக்கப்படும் என்று மத்திய அரசு கூறியுள்ளது. வேலைவாய்ப்பு இதில் இந்த வருட இறுதியில் 92,842 ஆக அதிகரிக்க வாய்ப்புள்ளது என்கிறார்கள்.

வேறு என்ன
அதேபோல் விமானத்துறையில் 2,363 வேலைகள் உருவாக்கப்பட்டு இருக்கிறது. இந்த வருடம் இது இன்னும் அதிகரிக்கும். மொத்தமாக அனைத்து விமான நிலையங்களையும் சேர்த்து 1 லட்சம் பேர் வரை புதிதாக வேலைக்கு எடுக்கப்படுவார்கள் என்று மத்திய அரசு தெரிவித்து இருக்கிறது. வேலைவாய்ப்பு குறைந்துவிட்டது என்பதற்கு பதிலடியாக இந்த அறிக்கையை அரசு தாக்கல் செய்துள்ளது.
-
IT jobs: டிகிரியே போதும்.. காக்னிசண்ட் ஐடி நிறுவனத்தில் சூப்பர் வேலைவாய்ப்பு.. ஜூன் 15 கடைசி நாள் -
டிரம்ப் உடைத்த சர்ப்ரைஸ்.. "மோடி என் நண்பன்".. விரைவில் இந்தியா அமெரிக்கா வர்த்தக ஒப்பந்தம் -
தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கியில் வேலை.. வேளாண்மை அலுவலர் பதவி! அப்ளை பண்ணுவது எப்படி? -
திருப்பத்தூர் மாவட்டத்தில் வேலை.. 27,000 சம்பளம்.. 8ம் வகுப்பு, டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம் -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி












Click it and Unblock the Notifications